சனி, 1 செப்டம்பர், 2018

அணில் அப்பளத்தில் புழுக்கள்!

அணில் அப்பளத்தில் புழுக்கள்!மின்னம்பலம்: திண்டுக்கல்லில் தயாராகி நாடு முழுவதும் விற்பனையாகி வரும் அணில் சேமியா நிறுவனத்தின் அப்பளக்கட்டுகளில் வெள்ளைப் புழுக்கள் நெளிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்  ரயில்நிலையம் அருகே தினகரன் என்பவரின் மளிகைக்கடையில், அப்பகுதியைச் சேர்ந்த முகமது ஜியாவுதீன் என்பவர் அணில் அப்பளம் வாங்கி சென்றார். பொரிப்பதற்காக எடுத்தபோது, அப்பளத்தில் வெள்ளை நிறத்தில் புழுக்கள் இருந்ததைக் கவனித்தார் ஜியாவுதீன். இதுபற்றி, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து, தினகரன் கடையில் சோதனை நடத்தினர் அதிகாரிகள். அதில், அங்கிருந்த அப்பளக்கட்டுகளில் புழுக்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

BBC :போலீசின் மாவோயிஸ்ட் கடிதங்கள் போலியானவை ..மோடியை கொல்ல சதி ,,, தேர்தலுக்காக மோடியின் புளுகு நாடகம்

ஒபாமா போட்டோவில் திலுமுல்லு செய்த மோடி 
மகாராஷ்டிரா காவல்துறை செய்தியாளர் சந்திப்பில் வாசித்து காட்டிய
கடிதங்கள் முற்றிலும் புனையப்பட்டவை என்று கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் இருக்கும் சுதா பரத்வாஜ் பதிலளித்துள்ளார். e>தன்னுடைய வழக்கறிஞர் எல்டர் குரோவர் மூலம் தன்னுடைய பதிலை கடிதமாக அவர் வழங்கியுள்ளார்.
எல்கார் பரிஷத் வழக்கை புலனாய்வு செய்கின்ற மகாராஸ்டிரா காவல்துறை வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுதா பரத்வாஜ், மிலின்ட் டெல்ட்பே, ரோனா வில்சன் ஆகியோரின் சில கடிதங்களை வாசித்து காட்டியது.
திட்டமிடுதல், பணம் சேகரித்தல், நிதி மற்றும் ஆயுதம் திரட்டுதல் பற்றிய இந்த கடிதங்கள் நக்சல்களுடையது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வழக்கறிஞரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ் டெல்லி தேசிய கல்லூரியில் கௌரவ பேராசிரியராக உள்ளார். தொழிலாளர் நலன்களுக்காக அடிக்கடி வாதாடி வருபவரும் கூட. புனே காவல்துறை செய்தியாளர்களிடம் வழங்கியுள்ள கடிதம் என்னையும், பிற மனித உரிமைகள் வழக்கறிஞர் செயற்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் வகையில் முற்றிலும் புனைப்பட்டது.

அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவுதினம்! குழுமூரில் குவியும் தலைவர்கள்

அனிதா நூலகம்அனிதாஎம்.திலீபன் - அர்ஜூன் மா விகடன் : மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வை எதிர்த்துப் போராடி சென்ற ஆண்டு (2017) செப்டம்பர் 1-ம் தேதி இதேநாளில் அனிதா தனது உயிரை மாய்த்துக்கொண்டார். நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி குழூமுரில் இன்று நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தையும் நாடினார். அதிலிலும் தோல்வியைத் தழுவியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிகழ்வு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவி அனிதாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியையொட்டி  அவரது பெயரில் நினைவு நூலகம் 1,800 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 6 வரிசைகள், 2,000 க்கும் மேற்பட்ட நூல்களோடு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டை - சீட்டு விளையாட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டை - சீட்டு விளையாட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம்மாலைமலர் : ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை மற்றும் சீட்டு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவுக்கு இன்று 2 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல், இறுதிச்சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான ஹசன்பாய் துஸ்மதோவை (உஸ்பெகிஸ்தான்) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் அமித் பங்கல் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். 

குஜராத்தில் பார்ப்பனர்களை மகிழ்விக்க மீனவர்களின் உரிமம் மறுப்பு!

மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் : குஜராத்: குஜராத் மாநிலத்தில் உள்ள
பிரதாப்சாகர் ஏரியில் மீனவர்கள் மீன் பிடிப்பது பார்ப்பனர்களின் மனதை புண் படுத்துவதாக கூறி மீனவர்களின் மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செப்டெம்பர் 9 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு குஜராத் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதி ஆனந்த் S தேவ் மற்றும் நீதிபதி பிரென் வைஷ்ணவ் ஆகியோர் குஜராத் அரசிற்கு உத்தரவிட்டுள்ளனர்.
குஜராத் சபர்கந்த் மாவட்டத்தை சேர்ந்த ஆஷாபென் P மக்வானா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த மனுவில்,
2017 ஜூன் மாதம் பிரதாப்சாகர் ஏரியில் மீன்பிடிக்கும் டெண்டரை அரசு அறிவித்தது என்றும் தங்களது டெண்டர் அக்டோபர் 24 ஆம் தேதி அரசால் அங்கீகரிக்கப்பட்டு 2022 ஜூன் மாதம் வரை அங்கு மீன் பிடிப்பதற்கு தங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் ரூ.80; வெளிநாடு ஏற்றுமதியோ ரூ.34!

தினமலர்
:புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு ஜன.,1 முதல் ஜூன் 30ம் தேதி வரை 15 நாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.32 முதல் ரூ.34 வரையிலும், டீசலை 29 நாடுகளுக்கு ரூ.34 முதல் ரூ.36 வரையும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தியாவில் பெட்ரோல் ரூ.80க்கும் அதிகமாக விற்கப்படும் நிலையில், வெளிநாடுகளுக்கு ரூ.34க்கு இந்தியா விற்பனை செய்வது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. ஆர்.டி.ஐ., தகவல்:
 பஞ்சாப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை குறித்த விவரங்களை கேட்டு கடிதம் எழுதினார்.

சேலம் பேருந்துகள் விபத்து 7 பேர் உயிரழப்பு .. சேலம் பங்களூரு தேசிய நெடுஞ்சாலை

சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 7 பேர் பலிதினத்தந்தி :சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மாங்கம் என்ற பகுதியில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்ற தனியார் சொகுசு  பேருந்தும், பெங்களூருவில் இருந்து பாலக்காடு சென்ற தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பெங்களூருக்கு மலர் ஏற்றிச்சென்ற லாரி பழுதடைந்து நெடுஞ்சாலையோரம் நின்றுள்ளது. சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற பேருந்தின் ஓட்டுநர் லாரி நின்றதை கவனிக்கவில்லை. கடைசி நேரத்தில் லாரியை கண்ட ஓட்டுநர் அதன் மீது மோதமால் இருக்க பேருந்தை திருப்பியுள்ளார்.

யாழ்பாணத்தில் ஆவாகுழு என்ற ரவுடி கும்பல் வாள்வெட்டு அட்டகாசம்

aavagroup3கெலும் பண்டார-  தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்  : வடக்கில் இருந்து ஒரு குற்றவியல் கும்பலான ஆவா குழு என்றழைக்கப்படும் குழு ஒன்று  சில குறிப்பிட்ட இடங்களில் பேரழிவினை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய விபரங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பல செய்தி அறிக்கைகள், சில தீவிரவாத
சக்திகளால் விடுதலைப் புலிகளின் புத்துயிர்ப்பினுக்காக வேண்டி மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள், என்று தெரியப் படுத்துகின்றன. அது மட்டுமன்றி இவை வடக்கிற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்ற இரண்டு விடயங்களாகும்.
ஆவா குழுவினரின் குற்றவியல் நடவடிக்கைகளால் இயல்பு வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு ஆளானால் எல்.ரீ.ரீ.ஈ அதன் தலையை உயர்த்தும், அரசியல் ரீதியாக அது அரசாங்கத்துக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தும். அதன்படி எதிர்க்கட்சியினர் இதைப் பயன்படுத்தி தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வெற்றி பெறுவதற்கு இது அவர்களுக்கு போதுமான அரசியல் தீவனத்தை வழங்கும்
எனவே ஆவா குழவினரது நிகழ்ச்சிகள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ இனது புத்துயிர்ப்பினுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்பன அரசியல் அர்த்தத்தில் சூடான தலைப்புக்களாக உள்ளன.  ஆவா ஒரு குற்றவியல் கும்பல் அது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக நவீன செயல்முறைகளைப் பயன்படுத்துவதுடன் அவர்களின் பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையடிக்கவும் செய்கின்றது. இந்தச் சம்பவத்தில் சில இளைஞர்கள் வாள் போன்ற கூரிய கத்திகளை ஏந்திக்கொண்டு வீதிகளில் உந்துருளிகளில் பறக்கிறார்கள் மற்றும் வீடுகளைக் கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

ஸ்டாலினைச் சந்திக்கக் கெடுபிடி?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினைச் சந்திக்கக் கெடுபிடி?
மின்னம்பலம்: “இனி என்னைப் பார்க்க யாரும் வீட்டுக்கு வர வேண்டாம். என்ன வேலையாக இருந்தாலும் அறிவாலயத்துக்கு வாங்க. இனி கட்சிக்காரங்களை அறிவாலயத்தில் மட்டுமே சந்திப்பேன்... - தலைவராகப் பொறுப்பேற்றதும் கட்சிக்காரர்களுக்கு இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் ஸ்டாலின். யாரையும் வீட்டில் இனி சந்திப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், அதையும் தாண்டி சிலர் மட்டும் விதிவிலக்காக வீட்டிலும் பார்க்கிறார்கள்.
அறிவாலயத்தில் கலைஞர் அறைக்கு வெளியே இருந்த பெயர்ப் பலகை மாற்றப்பட்டு, ஸ்டாலின், தலைவர் என்ற புதிய பலகை வைக்கப்பட்டுவிட்டது. அந்தத் தலைவர் அறைக்குச் செல்வதற்கு வெளியே உள்ள ஹாலில் எந்த நேரமும் காத்திருப்பவர் மகேஷ் பொய்யாமொழி மட்டுமே. அவரைக் கடந்துதான் யாராக இருந்தாலும் ஸ்டாலினைச் சந்திக்க முடியும். யார் வந்தாலும் முதலில் மகேஷுக்கு ஒரு வணக்கம் போட்டுவிடுகிறார்கள்.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

Linda Irene சென்னை ஓட்டலில் டச்சு பெண் ஊடகவியலாளர் மரணம்

tamilthehindu :விடுதி அறையில் பிணமாக கிடக்கும் நெதர்லாந்து பெண் பத்திரிகையாளர்
தி.நகரில் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த வெளிநாட்டு இளம் பெண் பத்திரிகையாளர் மர்மமான முறையில் அறையில் பிணமாக கிடந்தார்.
சென்னை தி.நகர், வெங்கடேசன் தெருவில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு கடந்த 27-ம் தேதி மதியம் 12-30 மணியளவில் வெளிநாட்டு பெண் பயணி ஒருவர் அறை எடுத்து தங்கி வந்தார். தான் ஒரு பத்திரிகையாளர் என்று கூறி அறை எடுத்து தங்கியுள்ளார்.
30-ம் தேதி வரை தங்கப்போவதாக விடுதி மேளாளரிடம் கூறி தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு அவர் செக் அவுட் செய்ய வேண்டும். அல்லது மேலும் தங்க விரும்பினால் மேலாளரிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர் வெளியே வரவும் இல்லை, மதிய உணவுக்கும் ஆர்டர் எதுவும் கொடுக்கவில்லை.

கௌரி லங்கேஷ் கொலையாளிகள் பட்டியலில் ரவிக்குமாரின் பெயர் - உறுதி செய்தது கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு


கௌரி லங்கேஷ் படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமோல் காலே என்ற பயங்கரவாதியை கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அவர்களால் கொலை செய்யப்படவேண்டுமென
34 பேரின் பெயர்கள் குறித்து வைக்கப்பட்டுள்ளன. அதில் 8 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 26 பேர் இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்த பகுத்தறிவாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் எனவும் , அதில் ரவிக்குமாரின் பெயர் இடம்பெற்றிருப்பதாகவும் தி நியூஸ் மினிட் என்ற செய்தித் தளத்தின் நிருபரிடம் கர்நாடக சிறப்புப் புலனாய்வு குழு உறுதிப்படுத்தியுள்ளது. 

thenewsminute.com/Manasa-Rao"
 Former Tamil Nadu MLA and General Secretary of the Viduthalai Chiruthaigal Katchi (VCK), D Ravikumar, has been told that there is a threat to his life. Speaking to TNM, Ravikumar reveals that the information was given to him by the Tamil Nadu state Intelligence Bureau based on confessions by the alleged killers of slain journalist Gauri Lankesh

மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்? திருமாவளவன் ஆய்வு சொல்வது என்ன?

மீனாட்சிபுரம்
முரளிதரன் காசி விஸ்வநாதன்-பிபிசி தமிழ்: 1981ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர். இது அகில இந்தியாவையும் உலுக்கியது. அதனை மையமாக வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் “Mass Religious Conversion of Meenakshipuram – A Victimological Perspective” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளார். இந்த ஆய்வில் அவர் கண்டறிந்த முடிவுகள் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து:
கே. இந்த ஆய்வை எப்போது துவங்கினீர்கள்?
ப. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வைச் செய்வதற்காக 2002ல் பதிவுசெய்தேன். பல்வேறு பணிச்சுமைகளால் எனது ஆய்வை விரைந்து முடிக்க இயலவில்லை. அவ்வப்போது இந்தப் பதிவை புதுப்பித்துவந்தேன். அண்மையில் கடைசி வாய்ப்பாக 2017 பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டுமென பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் விரைந்து இந்த பணியை முடித்து, அறிக்கை சமர்ப்பித்தேன். கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி பொது வாய் மொழித் தேர்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

தவத்திரு.சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் மறைவு .

Muruganantham Ramasamy : கீழைச்சிதம்பரம் என வழங்கப்படும் கோவை பேரூர்
ஆதீன மடத்தின் மூத்தபட்டம் தவத்திரு.சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தான் நம்பும் சிவனடி நிழல் சேர்ந்திருக்கிறார்..
தமிழ் வழிபாடு, தீந்தமிழ் தெய்வீக முறை திருமணம், ஆகியவற்றிற்கு ஓயாது குரலெலுப்பி தமிழ் மெய்யியல் தரப்பின் பிரதிநிதிகளாக நின்றது அவரும், அவரின் பேரூர் ஆதீன மடமும்.. இன்றும் தமிழ்நெறித்திருமணம் நடத்திவைக்கும் அடியார்குழுவை பயிற்றுவித்து அதை ஒரு இயக்கமாகவே நடத்துபவர் அவரே.. தமிழ்மொழியின் புத்துயிர்ப்பின் மீது அக்கறை கொணடவர்கள் அனைவருக்கும் இது பேரிழப்பு..
அவரின் ஆன்மாவிற்கு அஞ்சலி..!

முல்லை பெரியாறு: கேரளா தவறான தகவலைப் பரப்புகிறது!

முல்லை பெரியாறு: கேரளா தவறான தகவலைப் பரப்புகிறது!மின்னம்பலம் : முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தவறான தகவல்களை பரப்புவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டதும் வெள்ள சேதத்திற்கு ஒரு காரணம் என்று கேரள அரசு அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சேலத்தில் இன்று (ஆகஸ்ட் 31) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “பருவமழை தொடங்குவதற்கு முன்னர் நிபுணர் குழு, முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்து அணை உறுதியாக உள்ளது, 142 அடி வரை நீரை தேக்கிக் கொள்ளலாம் என்று சான்றளித்தது. அதனடிப்படையில்தான் 142 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!மாலைமலர் : 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில்  அனைத்து வாதங்களும் இன்று நிறைவடைந்த நிலையில்அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்,  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது. இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார்.

சென்னை நட்சத்திர ஹோட்டலில் சடலமாகக் கிடந்த நெதர்லாந்து இளம்பெண்

பவுடர் விஷம் குடித்து இறந்த லிண்டா vikatan.com/எஸ்.மகேஷ் : சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண், படுக்கையறையில் பிணமாகக் கிடந்தார். அந்த அறையில் பவுடர் போன்ற பொருள் சிதறிக் கிடந்துள்ளது  குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை தி.நகர், வெங்கடேசன் தெருவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 27-ம் தேதி நெதர்லாந்தைச் சேர்ந்த லிண்டா என்ற 24 வயது இளம்பெண் தங்கினார். அவர், 30-ம் தேதி அறையை காலிச் செய்வதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியிருந்தார். ஆனால், அவர் அறையை காலி செய்யவில்லை. அவர் தங்கியிருந்த அறையின் கதவும் நேற்று திறக்கப்படவில்லை. இதனால், ஊழியர்கள் சந்தேகமடைந்தனர். இதுகுறித்து மாம்பலம் போலீஸாருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். போலீஸார் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள், அறையின் கதவை மாற்றுச் சாவி மூலம் திறக்க முயன்றனர். ஆனால், கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. இதனால் கதவை உடைத்து போலீஸார் மற்றும் ஊழியர்கள் உள்ளே சென்றனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன் மீண்டும் திமுகவில் இணைந்தனர்

முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன் மீண்டும் திமுகவில் இணைந்தனர்dailythanthi.com : தி.மு.கவின் தர்மபுரி மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமாக இருந்தவர் முல்லை வேந்தன். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியின் வெற்றிக்குத் துணை நிற்காமல் துரோகம் செய்துவிட்டதாகவும், தி.மு.க வெற்றிக்குச் சரியாகப் பணி செய்யவில்லை போன்ற காரணங்களால்  முல்லை வேந்தன், பழனிமாணிக்கம், இன்பசேகர் ஆகியோரை தி.மு.க பொதுச்செயலாளர் கே.அன்பழகன் இவரைக் கட்சியிலிருந்து நீக்கினார். மன்னிப்புக் கடிதம் அளித்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படும் என தி.மு.க தலைமை முன்னதாகக் கூறியிருந்தது. இதையடுத்து பழனிமாணிக்கமும் இன்பசேகரனும் விளக்கம் கொடுத்து விட்ட நிலையில் அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை அதே ஆண்டில் ஜூலை 19-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. எனினும் முல்லைவேந்தன் எவ்வித விளக்கமும் கொடுக்காததால் அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின்னர், 2016-ம் ஆண்டு தே.மு.தி.க.வில் இணைந்து சில பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். அதன் பின் தே.மு.தி.க.விலும் அதிக அளவில் ஆர்வம் காட்டாமல் சற்று விலகியே இருந்தார்.

நெருக்கடி காலத்தில் கலைஞரின் தமிழகம்... 1975 இல் எமெர்ஜென்சி.. அடிகொடுத்த தமிழகம்

மின்னம்பலம் : ஆர்.விஜய் சங்கர் இந்திரா காந்தியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிரான போராட்டத்தை
முன்னெடுத்துச் சென்றதோடு, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்திரா காந்தியின் அரசைக் கவிழ்த்த அரசியல் சக்தியில் மிக முக்கியப் பங்கையும் கருணாநிதி கொண்டிருந்தார்.
1975ஆம் ஆண்டின் ஜூன் 25, 26 தேதிகளில் இந்திரா காந்தியின் அரசு அவசர நிலையைப்
பிரகடனப்படுத்தியபோது, தமிழக அரசின் முதல்வராகவும் திமுக கட்சியின் தலைவராகவும் கருணாநிதி கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவசர நிலைப் பிரகடனத்தைப் பற்றிய நிறைந்த புரிதலுடன் அதை எதிர்கொள்வதற்கான தைரியத்தை அவர் கொண்டிருந்தார். அப்போது தனது கட்சி பலவீனப்படுத்தப்பட்டு ஆட்சியை இழந்தபோதிலும், இதன் தாக்கம் ஏழு மாதங்கள் வரை தமிழகத்தின் மீது விழாமல் பார்த்துக்கொண்டார். அவரது அரசு கடைசியாக 1976 ஜனவரி 31ஆம் தேதி கலைக்கப்பட்டது.

மீனவ மக்களுக்கு நிலநடுக்கத்தை தாங்கும் அதி நவீன வீடுகள்!

மீனவ மக்களுக்கு நிலநடுக்கத்தை தாங்கும் அதி நவீன வீடுகள்!மின்னம்பலம்: மீனவக் கிராம மக்களுக்காக அதி நவீன தொழில் நுட்பத்தில் ரூ.59 கோடி செலவில் திருவொற்றியூரில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகள் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டவை என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் எம்.எஸ்.சண்முகம் நேற்று (ஆகஸ்ட் 30) தெரிவித்தார்.
சென்னை எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை திட்டத்துக்காக திருவொற்றியூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. இவற்றில் வசித்த பெரும்பாலானவர்கள் எர்ணாவூரில் அமைக்கப்பட்டுள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். ஆனால், திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள், தங்களை இப்பகுதியிலிருந்து இடம் மாற்றினால் மீன்பிடித் தொழில் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறி வீடுகளைக் காலி செய்ய மறுத்து வந்தனர்.

ஸ்டாலின் : சி.பி.எஸ்.இ. தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை

bதிமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு: “தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது" என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, நம்பிக்கை பாழாகி பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை உருவாக்கி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவையும், எதிர்காலத்தையும் சிதைத்து விட்டது. அதைவிட "ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்" "தொடர்ந்து நீட் தேர்வை தமிழகம் எதிர்த்து வருவதால் குழப்பம் செய்கிறார்கள்" என்றெல்லாம் ஒட்டுமொத்த தமிழக மாணவ சமுதாயத்தின் மீதும் சி.பி.எஸ்.இ. குற்றம் சாட்டியிருப்பது, மிகுந்த கண்டனத்திற்குரியது மட்டுமல்ல - ஆதிக்க வர்க்கத்தின் ஆணவ மனப்பான்மையும், பிளவுபடுத்தி பேதப்படுத்தும் குணமும் அந்த அமைப்பில் குவிந்து கிடப்பதைக் காட்டுகிறது.

நீதிபதிகள், விஐபிகளுக்கு சுங்க சாவடிகளில் தனி வழி ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு: ... பிரபுக்களின் ராஜ்ஜியம்?

க.சக்திவேல் சென்னை /tamil.thehindu.com/tamilnadu : தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் நீதிபதிகள், விஐபிகளுக்கென தனி வழியை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது குறித்து முன்னாள் நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கு அரசுப் போக்கு வரத்து கழகங்கள் செலுத்த வேண் டிய சுங்க கட்டண நிலுவையை செலுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ‘‘பணியில் உள்ள நீதிபதிகள் மற்றும் முக்கிய விஐபிகளின் வாகனங்கள் செல்ல சுங்கச்சாவடிகளில் தற்போது தனி வழி இல்லை.

விபசார குற்றத்தில் கைது செய்வோம்''; போலீஸ் மிரட்டலால் தீக்குளித்த பெண் மரணம்

உயிரிழந்த ரேணுகா, ஆய்வாளர் அலெக்ஸாண்டர், எஸ்.ஐ.சரவண
THE HINDU TAMIL : திருவேற்காடு காவல் நிலையத்தில் சாதாரண பக்கத்து வீட்டுச் சண்டையில் போலீஸார் மிரட்டியதால் அவமானமடைந்த பெண் ஸ்டேஷன் முன் தீக்குளித்தார். பெண் மரணமடைந்ததை அடுத்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
திருவேற்காடு, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (40). இவரது மனைவி ரேணுகா (34). இவர் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவரது வீடு சொந்த வீடு ஆகும். ரேணுகா தனது வீட்டின் அருகே கழிப்பறை ஒன்றைக் கட்டி வந்தார்.
இது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் பக்கத்து வீட்டில் வசிக்கும் அமிர்தவள்ளி என்பவர் இது குறித்து ஆட்சேபித்துள்ளார். இந்தப் பிரச்சினை நாளுக்கு நாள் வாய்த் தகராறு ஆகி போலீஸில் புகார் அளிக்கும் அளவுக்குச் சென்றது. நேற்று முன் தினம் தகராறு அதிகமாகவே, அமிர்தவள்ளி திருவேற்காடு காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்துள்ளார்.

திமுக முன்னாள் பொருளாளர் சாதிக் பாட்சா பெயரை துரைமுருகன் குறிப்பிடாதது ஏன்?

Vallam Jaan Ymdawood‎ : கலைஞர்
போற்றிய அமைதி நிறை சாதிக் பாட்சா...
துரைமுருகனுக்கும் முன்னோடி சாதிக் பாட்சா... திமுக சார்ந்த தமிழக அரசியல் களத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த , எந்தவொரு சர்ச்சைகளிலும் பெயரை கெடுத்துக் கொள்ளாத தூய்மையான கழகத்தின் அடையாளம் சாதிக் பாட்சா... திமுக பொருளாளராக பதவி ஏற்று துரைமுருகன் அவர்கள் வழங்கிய ஏற்புரையில் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து ஆற்காடு வீராசாமி வரையில் திமுகழகத்தின் பொருளாளராக பதவி வகித்தவர்கள் பெயரை பட்டியல் போட்டு நினைவு கூர்ந்தவர்
சுமார் 20 வருடங்களுக்கு மேலாக பொருளாளராக பதவி வகித்த சாதிக் பாட்சா பெயரை உச்சரிக்க மறந்தது சாதாரணமானது கிடையாது...
இளைய தலைமுறை திமுகவினருக்கு தெரியாத பெயர் தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் 1967 ல் அண்ணாவின் தலைமையிலும் 1969, 1971,1989ல் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலும் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
இவரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகும் . 1967, 1971, 1989 ல் உடுமலைப்பேட்டை தொகுதியிலும் 1977ல் ஆயிரம்விளக்கு தொகுதியிலும் வெற்றி பெற்ற இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1972 முதல் தமது இறுதி காலம் வரை பொருளாளராக பணியாற்றியுள்ளார்.
1994ல் காலமானார்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

இட ஒதுக்கீட்டால் ஆதிக்க ஜாதியினரின் வாய்ப்புக்கள் பறிபோகிறதா ? உண்மை என்ன?

பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும்
Ravishankar Ayyakkannu : கேள்வி: ஆதிக்கச் சாதிகள் அட்டகாசம்
தாங்கவில்லையே? பேசாமல் மக்கள் தொகை அடிப்படையில் அவர்களுக்கு 3% இட ஒதுக்கீடு கொடுத்து 97% இடங்களை மற்ற சாதிகளுக்குத் தரலாமே?
பதில்: அதற்குத் தேவையே இல்லை.
நீட் வருவதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மருத்துவப் படிப்பு தர வரிசைப் பட்டியலைப் பாருங்கள். பிற சாதி மாணவர்கள் முதல் 25 இடங்களை அள்ளி இருக்கிறார்கள்.
இட ஒதுக்கீட்டால் தகுதி இருந்தும் தங்கள் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக ஆதிக்கச் சாதிகள் புலம்புவது எவ்வளவு பெரிய பொய் என்பதும் இதே பட்டியலைப் பார்த்தால் தெரியும்.
இப்போது இருக்கிற இட ஒதுக்கீட்டையே இரண்டு தலைமுறைகளுக்கு முறையாக நடைமுறைப்படுத்தி பெற்றோருக்கு வேலைவாய்ப்பையும் பிள்ளைகளுக்குக் கல்வி வாய்ப்பையும் கொடுத்தாலே நம் மக்கள் தங்கள் திறமைக்குரிய இடங்களைத் தாமாகப் பெறுவார்கள்.

கலைஞர் குடும்பத்தினர் அழகிரிக்கு ஆலோசனை?

மின்னம்பலம் : “திமுகவிலிருந்து அதிருப்தியில் விலகி நிற்பவர்களையும்,
மாற்றுக் கட்சிக்குப் போனவர்களையும் இழுக்க அழகிரி முயற்சி செய்துவருவது தெரிந்ததுதான். அதே நேரம் அழகிரிக்கு முன்பாக அவர்களை எல்லாம் தன் பக்கம் இழுத்து ஆதரவுக்கரம் நீட்ட ஆரம்பித்துவிட்டார் ஸ்டாலின். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத அழகிரி கொஞ்சம் ஆடிப்போய்த்தான் இருக்கிறாராம்.
முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனையும் விழுப்புரத்தில் பொன்முடிக்கு எதிரானவர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அழகிரி பேசிவருவதை நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தோம்.
விழுப்புரத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன்.
முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வான புஷ்பராஜ் தலைமைக்கு நம்பிக்கையானவர். பொன்முடிக்கும் புஷ்பராஜுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். புஷ்பராஜை, பொன்முடி தொடர்ந்து ஓரங்கட்டிவருகிறார்.
இதெல்லாம் தெரிந்துதான் புஷ்பராஜுடன் அழகிரி பேசியிருக்கிறார். அப்போது, ‘நீ இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இப்படியேதான் இருக்கணும். பொன்முடி உன்னை வளரவிடவே மாட்டார்..’ என்று சொல்ல... அதற்கு புஷ்பராஜ், ‘நீங்க சொல்றது உண்மைதான்ணா… எனக்கும் பொன்முடிக்கும்தான் பிரச்னை. எனக்கும் தளபதிக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
இனி இது சம்பந்தமாகப் பேச வேண்டாம்...’ என்று சொல்லி போனைத் துண்டித்துவிட்டாராம்.

வேலூர் .. 23 கொத்தடிமைகள் மீட்பு!! .. 4 வருடங்களாக

நக்கீரன் : வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரியகிராமம் பகுதியில் கடந்த 4
வருடங்களாக கொத்தடிமைகளாக இருந்து மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த 23 பேரை வருவாய்துறையினர் மீட்டனர்.
காவேரிப்பாக்கம் அடுத்த பெரியகிராமம் பகுதியை சேர்ந்தவர் 37 வயதான  காதர்பாஷா. இவர் அதே பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 5 குடும்பங்களை கொத்தடிமைகளாக அழைத்து வந்து முன் தொகையாக 5000 கொடுத்து மரம் வெட்டும் வேலையில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
உரிய கூலி வழங்காத காதர்பாஷா வாரம் ஒரு குடும்பத்திற்கு 100 ரூபாய் மட்டுமே கொடுத்து வந்ததோடு அவர்களை தரக்குறைவாக பேசியும் மிரட்டியும் வந்துள்ளார்.
இதுக்குறித்து காவல்துறைக்கும், வருவாய்த்துறையினருக்கும் போன் மூலம் தகவல் கூறியுள்ளனர் சிலர். இதுப்பற்றிய தகவல் அறிந்த இராணிப்பேட்டை கோட்டாட்சியர் வேணுசேகரன் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு கொத்தடிமைகளாக 5 குடும்பத்தை சேர்ந்த 23 பேர் இருந்தது தெரியவந்துள்ளது.

தோல்விகளை மறைக்கும் மோடியின் அற்பத்தனம்

savukku சவுக்கு :  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக வளர்ச்சியைக் காட்டும் அறிக்கை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயன்படுத்திய  அளவுகோலை 2004-05 என்பதிலிருந்து 2010-2011 என
மாற்றியது.  மாற்றப்பட்ட அடிப்படை ஆண்டுக் கணக்கீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கான மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி அறிக்கை அமைச்சகத்தின் வலைதளத்தில் ஜூலை 25இல் வெளியிடப்பட்டது; அதில் இந்தியா இதே அடிப்படை அளவுகோலாக பயன்படுத்தப்பட்டால், 2006-07இல் (மன்மோகன் சிங் பிரதமராக இருந்த சமயத்தில்) 10.8 சதவிகிதம் வளர்ந்தது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை வெற்றி பெற்றது என முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் கடந்த வாரம் கூறியிருந்தார். “இந்தப் புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டின்படி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த 2004-2014ஆம் ஆண்டுகளில்தான் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்கியது என நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அழகிரி : கட்சியில் மீண்டும் சேர்த்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார்:

tamilthehindu :திமுகவில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொண்டால், ஸ்டாலினைத்
தலைவராக ஏற்கத் தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் செப்.5-ல் அமைதிப் பேரணி நடக்கும் என அழகிரி அறிவித்துள்ளார். அதனையடுத்து அவர் தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ''கட்சியில் சேரும் எண்ணம் இருந்தால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்'' என்றார்.
திமுக பொதுக்குழு கூடி ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொண்டது குறித்துக் கேட்டபோது, ''1,500 பேர் மட்டுமே கட்சியை உருவாக்கிவிட முடியாது. உண்மையான கட்சித் தொண்டர்கள் என்னிடம் உள்ளார்கள். பேரணிக்குப் பிறகு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும்'' என்றார்.
'பதவி தேவையில்லை'
மேலும் பேசிய அழகிரி, கட்சியில் மீண்டும் இணைய தனக்கோ தன் மகன் தயாநிதி அழகிரிக்கோ கட்சியில் எந்தப் பதவியும் தரத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ஹரிகிருஷ்ணா 150 கி.மீ. வேகத்தில் தானே காரை ஓட்டியுள்ளார்... Toyota Fotuna ...

வெப்துனியா :  என்.டி.ஆரின் மகன் சீல் பெல்ட் அணியாததாலும், வேகமாக காரை ஓட்டியதாலுமே விபத்து ஏற்பட்டு அவர் மரணமடைந்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.என்.டி.ஆரின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா நேற்று காலை ஒரு திருமண விழாவிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார். ஹரிகிருஷ்ணா ஓட்டியது டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சுனர் கார் ஆகும்.  இந்த காரில் 150 கி.மீ. வேகத்தில் ஹரிகிருஷ்ணா ஓட்டியுள்ளார். அப்போது, தண்ணீர் பாட்டிலை அவர் எடுக்க முயன்றுள்ளார். அப்போது முன்னால் ஒரு வளைவு இருக்கவே, அவர் காரை திருப்ப முயன்றுள்ளார். ஆனால், வேகமாக சென்றதால் அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்துள்ளது.கார் குலுங்கியதால் கதவுகள் திறக்கப்பட்டு அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். சீட் பெல்ட் அணிந்திருந்தால் அவர் காயங்களுடன் தப்பித்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் அணியவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.காரில் பின்னால் அமர்ந்திருந்த இருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது<

கலைஞருக்கு நினைவேந்தல்: தேசியத் தலைவர்கள் பங்கேற்பு!


கலைஞருக்கு  நினைவேந்தல்: தேசியத் தலைவர்கள் பங்கேற்பு!
மின்னம்பலம் :‘தெற்கிலிருந்து உதித்தெழுந்த சூரியன்’ என்னும் தலைப்பில் இன்று மாலை சென்னையில் நடைபெறவுள்ள கலைஞரின் புகழ் வணக்க கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர்கள், 4 மாநில முதல்வர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
திமுக தலைவர் கலைஞர் கடந்த 7ஆம் தேதி காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கலைஞர் சார்ந்திருந்த துறைகளின் பிரபலங்கள் கலந்துகொண்டு அவரின் பெருமைகள் குறித்து உரையாற்றும் ‘கலைஞரின் புகழுக்கு வணக்கம்’ நிகழ்ச்சி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்றுவருகிறது. நிறைவாக, ‘தெற்கிலிருந்து உதித்தெழுந்த சூரியன்’ என்னும் தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் கலந்துகொண்டு பேசும் நினைவஞ்சலி கூட்டம் இன்று மாலை (ஆகஸ்ட் 30) 4 மணிக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுவை முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

BJP predominantly upper-caste. பாஜக .. ஆதிக்க ஜாதியின் கட்சி , ஏனைய ஜாதிகள் அடியாள் வேலைக்குத்தான்

மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் : இந்துக்களின் காவலனாகத் தன்னை
முன்னிறுத்தும் பா.ஜ.க.வில், அதன் தலைவர்கள் பெரும்பாலானோர் ஆதிக்கச் சாதியினர். அடியாள் வேலை பார்க்க பிற சாதித் தொண்டர்கள் தேவை! "The 38-year-old party continues to remain predominantly upper-caste, with a far less proportion of backward castes and negligible representation of scheduled castes, scheduled tribes and other minority communities.
An in-depth analysis of the caste profile of the BJP’s organisational structure by ThePrint has found that over three-fourths of the party’s office bearers at the national level are upper caste and over 60 per cent of its national executive is drawn from the general category.
General category members also account for 65 per cent of its state unit presidents.
Even in its lower rungs, most leadership roles are with the upper castes — 65 per cent of the BJP’s district presidents across the country are from the general category."

உணவு உற்பத்தியில் புதிய உச்சம் ,,, 284.83 மில்லியன் டன்னை எட்டியுள்ளது.

புதிய உச்சத்தை எட்டிய உணவு உற்பத்தி! மின்னம்பலம்:  இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 284.83 மில்லியன் டன்னை எட்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டு அறிக்கையில், ‘2017-18 வேளாண் பருவ ஆண்டில் (ஜூலை - ஜூன்) இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 284.83 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது 2016-17ஆம் ஆண்டு உற்பத்தியை விட 9.72 மில்லியன் டன் அதிகமாகும். அனைத்து முக்கியப் பயிர்களின் உற்பத்தியும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. அரிசி 112.91 மில்லியன் டன்னும், கோதுமை 99.70 மில்லியன் டன்னும், பருப்பு 25.23 மில்லியன் டன்னும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் புதுக்கட்சி .. ஓமந்தூர் ரெட்டியார் சிலைக்கு மாலை .. அப்படியே ரெட்டியார் ஜாதி சங்கத்திலும் ...

Actor Vishal Enteres Into Politics, Vishal Starts New Forum, Makkal Nala Iyakkam, நடிகர் விஷால், அரசியலில் விஷால், விஷால் புதிய அமைப்பு, மக்கள் நல இயக்கம்tamil.indianexpress.com: அரசியலில் நுழைந்தார், நடிகர் விஷால்:
மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஷால், அரசியலில் கால் பதித்தார். மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கினார் அவர்!
நடிகர் விஷால், தீவிர அரசியல் ஆர்வம் கொண்டவர்! நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் பதவிக்காக தேர்தலில் நின்றது, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட்டது என அனைத்துமே அரசியலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. அவற்றில் அவர் வெற்றியும் பெற்றார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட விரும்பினார் அவர். ஆனால் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட சிலர், அவரது வேட்புமனுவை நிராகரிக்க வைத்தனர்.

மம்தா பானர்ஜி : எங்கே போயிற்று கறுப்பு பணம்?

எங்கே போனது கருப்புப்பணம்? - மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி 2 கேள்விகள்மாலைமலர் : பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99.3 சதவீதம் தொகை
வங்கிகளுக்கு திரும்பிய நிலையில் கருப்புப்பணத்தை மாற்ற பெரும் முதலைகளுக்கு மோடி துணைபோனதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். கொல்கத்தா: கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99.3 சதவீதம் தொகை மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிய நிலையில் பெரும் முதலைகள் கருப்புப்பணத்தை மாற்றுவதற்காக இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததா? என்று மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது. விநியோகிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 41 கோடி ரூபாயில், ரூ.15, 310,73  கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பணம் வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.