சனி, 4 மே, 2024

BREAKING: பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

பிரஜ்வல் ரேவண்ணாவால் கட்டி வைத்து பலாத்காரம் செய்த பெண்ணை காணவில்லை . மகன் போலீசில் முறைப்பாடு

 tamil.oneindia.com  - Halley Karthik :  பிரஜ்வல் ரேவண்ணாவால் கட்டி வைத்து பலாத்காரம் செய்த பெண் திடீர் மாயம்.. மகன் போலீசில் புகார்
பெங்களூர்: பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோ விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் திடீர் மாயமாகியுள்ளார். இது தொடர்பாக பெண்ணின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் லோக்சபா தொகுதி மஜத எம்.பியாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகௌடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமாவார்.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6115 புத்தொழில் நிறுவனங்கள் திமுக ஆட்சி 3 ஆண்டு சாதனை

 கலைஞர் செய்திகள் Lenin : திராவிட மாடல் அரசில் கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிகளின் விளைவாக புத்தொழில் நிறுவனங்கள் (Startups) அமைவதற்கான உகந்த சூழலை உருவாக்குவதில் நாட்டிலேயே தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது பெருமகிழ்ச்சிக்குரியது.
அந்த வெற்றியைத் தக்க வைக்கும் நோக்கோடு உலகில் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணி புத்தொழில் நிறுவனங்களும், இளம் தொழில்முனைவோரும் கலந்து கொள்ளும் வகையில் உலகப் புத்தொழில் மாநாடு (Global Startup Summit) வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.

சவுக்கு சங்கர் கைது - மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 மின்னம்பலம் -  christopher   :  தேனியில் இன்று (மே 4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

காணாமல்போன நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை

 tamil.abplive.com - ரேவதி :  ஜெயகுமார் தனசிங் கடந்த மே 2 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல்துறையில் புகாரளித்திருந்தார்.
Nellai east District Congress President Jayakumar recovered as dead body after missing - TNN Crime: காணாமல்போன நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை
திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போன காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார்  தனசிங் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 வயது மகனை டிரெட்மில் ஓட வைத்து கொன்ற தந்தை? நீதிமன்றத்தை அதிர வைத்த வீடியோ

maalaimalar :  “அமெரிக்காவின் நியூ ஜெர்சியை பகுதியை சேர்ந்தவர் கிரெகர். இவருக்கும் பிரெ மிக்கோலியோ என்பவருக்கும் திருமணமாகி ஆறு வயதில் மகன் கோரெ இருந்து வந்தார்.
தனது மகன் கோரெ உடல் பருமனாக இருப்பதாக கூறி, அவனை உடற்பயிற்சி செய்ய கிரெகர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிரெகர் தனது மகனை உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்து சென்று டிரெட்மில்லில் ஓட செய்துள்ளார்.
அதன்படி கோரெ டிரெட்மில்லில் ஓட துவங்கியுள்ளார். சிறிது நேரத்தில் டிரெட்மில்லின் வேகத்தை கிரெகர் கூட்டியுள்ளார்.
இதனால் நிலைதடுமாறிய கோரெ டிரெட்மில்லில் இருந்து கீழே விழுந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த கிரெகர் தனது மகன் கோரெவை வலுக்கட்டாயமாக தூக்கி மீண்டும் டிரெட்மில்லில் ஓட செய்துள்ளார்.

வெள்ளி, 3 மே, 2024

ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் . அமேதியில் கே எல் சர்மா போட்டி

 மாலை மலர் :  உத்தரபிரதேசம்  பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் இருப்பதால் அந்த மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது.
அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
வருகிற 7-ந்தேதி 3-ம் கட்ட தேர்தலில் 10 தொகுதிகளுக்கும், 13-ந்தேதி 4-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும், 20-ந்தேதி 5-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டி?

nakkheeran.in  : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது
முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வியாழன், 2 மே, 2024

2 ஜி வழக்கு தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது!~

ராதா மனோகர்  :  ஆ ராசா மீதான 2 ஜி  ஸ்பெக்ட்ரம் வழக்கு தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது!~
2 ஜி வழக்கும் அதை ஒட்டி நடந்த ஜனநாயக கேலி கூத்துக்களும் ஒரு அசல் மசாலா படத்திற்கே உரிய அளவு கற்பனை வளம் நிறைந்தவை
ஒட்டு மொத்த  அரசும் சங்கிகளும் முன்னின்று நடத்திய நாடகம்
அதற்கு ஒத்து ஊதிய பெரும் பெரும் ஊடகங்களும் ஜனநாயக உலகே வெட்கி தலை குனியவேண்டிய அளவு பித்தலாட்டங்கள் நிறைந்தவை!
இது பற்றி நான் முன்பு எழுதிய ஒரு பதிவை இங்கு மீள் பதிவு செய்கிறேன்
மீள்பதிவு  : October 25, 2020
ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையை அவரின் அரசியல் கோணத்தில் இருந்துதான் பார்க்கவேண்டும் என்ற நியதி கிடையாது .
பல  அரசியல்வாதிகளுக்கு அரசியலுக்கு அப்பால் பல கோணங்களும்  உண்டு . அண்ணா  கலைஞர் போன்றவர்கள் கலை  இலக்கியம் நாடகம் சினிமா போன்ற பலதுறைகளில்   பெரும் ஆளுமை உள்ளவர்கள்
எம்ஜியார் கூட ஒரு வெற்றிகரமான நடிகர் என்பதையும் தாண்டி அவர்  ஒரு நல்ல திரைப்பட இயக்குனராகும். '

பூதாகரமாகும் இசையா? மொழியா? : மொரிஷியஸில் இளையராஜா

 மின்னம்பலம் -  Selvam :  கடந்த ஒரு வாரமாக கோலிவுட் வட்டாரத்தில் வைரமுத்து – இளையராஜா பிரச்சனை பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற படிக்காத பக்கங்கள் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, “ஒரு பாடலில், இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது.
இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மொழி. மொழி எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது இசை. இரண்டும் கூடினால்தான் அதற்குப் பாட்டு என்று பொருள். சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும், திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி” என்று பேசியிருந்தார்.

பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி போட்டு வைத்த மக்கள்.. உ.பி.யில் மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்

The body of a snake bite victim was kept tied in the river of Ganga but did not come alive

 tamil.oneindia.com -  Velmurugan P :  லக்னோ: பாம்பு கடித்தவரின் உடலை, ஓடும் கங்கை நீரில் வைத்தால் விஷம் போய்விடும் என சிலர் கூறிய மூடநம்பிக்கையை நம்பிய குடும்பத்தினர்,
கங்கை ஆற்றில் இளைஞனின் உடலை கயிற்றால் கட்டி வைத்திருந்தனர்.. ஆனால் உயிருடன் அவர் திரும்பவில்லை..
மாறாக விஷம் ஏறி இறந்து போனார். மூடநம்பிக்கை உத்தரப்பிரதேசத்தில் உயிரையே பறித்துள்ளது.

திருமாவளவன் : வாக்கு இயந்திர குளறுபடி '11 நாட்கள் கழித்து வெளியான தகவல் சந்தேகத்தை எழுப்புகிறது' - திருமாவளவன் பேட்டி

 nakkheeran.in :   '11 நாட்கள் கழித்து வெளியான தகவல் சந்தேகத்தை எழுப்புகிறது' - திருமாவளவன் பேட்டி
வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு வேலை நடைபெறவில்லை என உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என விசிக தலைவர்  தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்,
''வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடுவதில் தொடர்ந்து குளறுபடி செய்து வருகிறது.
வாக்குப்பதிவான நாளன்று 7 மணி அளவில் வெளியிடப்பட்ட சதவீதமும் பிறகு சில மணி நேரம் கழித்து வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு சதவீதமும் நிறைய இடைவெளி கொண்டிருந்தது.
அரசியல் கட்சிகள் இதுதொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

புதன், 1 மே, 2024

நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை – ஆளுநர் பெயர் அடிபட்ட வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது?

BBC Tamil :  கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2.42 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
நிர்மலா தேவி மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருந்தது. ஐந்து வழக்குகளிலும் அவர் குற்றவாளி என விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் என்ன நடந்தது? அதன் முழு பின்னணி என்ன?
நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த 2018-ஆம் ஆண்டு, துணைப் பேராசிரியை நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய மூன்று பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

பாலியல் வீடியோ -தேவ கௌடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி ஓடிவிட்டார்

மாலை மலர் : பெங்களூரு கர்நாடக மாநிலம் ஹூப்ளி தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதற்கிடையே, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த ஆபாச வீடியோ குறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழுவை நியமித்து உத்தரவிட்டது. அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என மூத்த நிர்வாகிகள், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் குமாரசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை இந்த விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜ.க.வின் கைக்கூலிகள் - ஒய்.எஸ்.சர்மிளா சாடல்

 மாலை மலர்  :  அமராவதி   : ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.
ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க-தெலுங்கு தேசம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவரும், ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா நேற்று காக்கிநாடாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

திங்கள், 29 ஏப்ரல், 2024

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி .. தீர்ப்பு விபரங்கள் நாளை .. சிறையில் அடைக்கப்பட்டார்

;hindutamil.in : பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு - மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக புகார்
விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேர் மீதான வழக்கில் இன்று(ஏப். 29) தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலா தேவி (52). அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித உதவி பேராசிரியர்.
இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, தவறாக வழிநடத்தியதாக 2018 மே மாதம் ஆடியோ ஒன்று வைரலானது.

சிட்னியில் அல்லாவின் படைவீரர்கள் கொலை செய்யவும் உயிரிழக்கவும் தயாராகயிருந்தனர் – அவுஸ்திரேலிய காவல்துறை

வீரகேசரி : சிட்னியில் கைதுசெய்யப்பட்ட அல்லாவின் படைவீரர்கள் பதின்மவயதினர் கொலை செய்யவும் உயிரிழக்கவும் தயாராகயிருந்தனர் – அவுஸ்திரேலிய காவல்துறை
சிட்னியில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் சிட்னி தேவாலய தாக்குதலின் பின்னர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்துவிட்டு உயிரிழக்க தயாராகயிருந்தனர் என அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஏழு பதின்மவயதினர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் ஆறுபேர் சிட்னி தேவலாயத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞனின் சகாக்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகம் 200 க்கும் மேற்பட்ட பெண்களின் 2700 பாலியல் விடியோக்கள்- பாஜக கூட்டணி JDS MPயின் ஆபாசம் அம்பலம்

 Vasu Sumathi :  பிரஜ்வால் ரேவண்ணா! இவர் முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் பேரன்!   ஹசன் தொகுதியின் தற்போதைய JDS MP. மீண்டும் போட்டியிடுகிறான்.
தற்போது நடந்த கொடுமை 500 பொள்ளாச்சிக்கு சமம்.  
200 க்கும் மேற்பட்ட பெண்களாம். 2700 விடியோக்களாம். இவைகள் பல பென் டிரைவ்களில் ஹசன் தொகுதியில் தேர்தலுக்கு முன் நாள் வலம் வந்திருக்கிறது.
திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒன்றே என்று தோன்றுகிறது.  
இது பல பேர் கைகளுக்கு மாறி, பார்த்தவர்கள் அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம் அதில் இருந்த பெண்கள் -
12 JDS கட்சிகாரர்கள், 2 பாஜக பெண்கள்,
ஒரு மிக உயர் அரசு அதிகாரியின் மனைவி ,
அரசு ஊழியர்கள், குடும்ப பெண்கள், 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தொழில் முனைவோர்கள், வேலைகாரியை கூட விட்டு வைக்கவில்லையாம்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

தர்மபுரி... வன்னியர் ஓட்டு யாருக்கு? தலித் ஓட்டு யாருக்கு? மற்றவர்களின் ஓட்டு யாருக்கு? ரகசிய விவரம்!


மின்னம்பலம் -Aara : ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில்… ஸ்டார் தொகுதிகளை தேர்ந்தெடுத்து தேர்தலுக்கு பிறகான வெற்றி வாய்ப்பு நிலவரம் பற்றி ஆராய்ந்து வருகிறோம்.
இந்த வரிசையில் முதலில் கோவை தொகுதி பற்றி பார்த்தோம். இப்போது அடுத்த தொகுதியாக தர்மபுரி…
பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டார். திமுக சார்பில் வழக்கறிஞர் ஆ. மணி போட்டியிட்டார். அதிமுக சார்பில்  அசோகன் போட்டியிட்டார், நாம் தமிழர் சார்பில்  அபிநயா பொன்னிவளவன் போட்டியிட்டார்.

குஜராத் அடுத்தடுத்து சிக்கிய போதைப் பொருட்கள்! போதைப்பொருள் கடத்தல்களின் தலை நகரமாகிறது குஜராத்

 nakkheeran.in : அடுத்தடுத்து சிக்கிய போதைப் பொருட்கள்; பரபரப்பில் குஜராத்
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு,
மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மோடி : இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள்

 மாலை மலர் :  பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் உள்ள கோலாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வழங்க முடிவு செய்துள்ளது. துணை முதல்வராக இருக்கும் நபரிடம் 2.5 ஆண்டுகள் கழித்து முதல்வர் பதவியை வழங்க திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றம் ராஜஸ்தானில் இதே ஏற்பாட்டை செய்திருந்தனர்.
கர்நாடகா மாநிலத்தின் மாடலான ஓபிசி இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்த்ததை மற்ற இடங்களிலும் நீட்டிக்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சமூக நீதியை கொலை செய்ய சபதம் செய்துள்ளது.

Hunzaz Tribes 60 வயதில் அழகு…! 90 வயதிலும் தாய்மை…! ஹன்ஜா பழங்குடியினரின் விசித்திரம்


BBC Tamil ; : இந்த பள்ளத்தாக்கின் மலைகளின் அழகைக் காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள்.
இந்த பள்ளத்தாக்கில் ‘ஹன்ஜா’ சமூகத்தினர் வாழ்கின்றனர். எப்போதும் இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று எல்லோரும் கனவு காண்கிறார்கள்.
அதற்கு நீங்கள் ‘ஹன்சா பள்ளத்தாக்கில்’ பிறந்திருந்தால் உங்கள் கனவும் நனவாகும். ஆனால் அது பாகிஸ்தானில் உள்ளது.
பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஹன்சா பள்ளத்தாக்கும் இடம்பெற்று உள்ளது.