சனி, 27 ஏப்ரல், 2013

நடிகை ஸ்ரீ வித்யாவின் அறக்கட்டளை ! மலையாள அமைச்சரின் மோசடி


எந்தவித நல்ல குணங்களும் இல்லாமல் ஆனால் எல்லா வித நல்ல குணங்களும் இருபது போல பாவனை ! அதாங்க சுஜாதாவின் .....

சுஜாதாவின் ‘மத்யமர்’ : நடுத்தர வர்க்கத்தின் போலி அறம்!

 இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. அவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள்; பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகரியங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள்.
பக்தி, காதல், பரிவு, பாசம், தியாகம், நேர்மை போன்ற குணங்களைத் தேவைக்கும் அவசரத்துக்கும் ஏற்பச் சற்று மாற்றிக்கொள்பவர்கள். சமூகம் வாசல் கதவைத் தட்டுவதைக் கேட்காதவர்கள்… இந்த மவுனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு.
மத்யமர் (நடுத்தரவர்க்கம்)”
என்ற பீடிகையுடன் ‘கல்கி’ இதழில் ஏப்ரல் மாதம் முதல், வாரம் ஒரு சிறுகதை எழுதுகிறார் சுஜாதா. இதுவரை 8 சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
ஒவ்வொரு கதையின் மீதும் வாசகர் கடிதங்களைப் பிரசுரித்து அதற்குப் பரிசும் கொடுக்கிறது கல்கி. தோற்றத்தில் நடுத்தர வர்க்கத்தை எள்ளி நகையாடுவதைப் போல அமைந்திருக்கும் இந்தக் கதைகளை பெரும்பாலான வாசகர்கள் பாராட்டுகிறார்கள்.
தன்னுடைய வர்க்கம் கேலிக்குள்ளாக்கப்டுவதைக் கண்டு சீறாவிட்டாலும் சீராட்டுகிறார்களே இந்த வாசகர்கள். இது விநோதமாகவல்லவா இருக்கிறது! –என்பது ஒரு கேள்வி.
தன்னுடைய எழுத்தைத் தின்று தனக்குச் சோறு போடும் தன்னுடைய வர்க்கத்தையே சுஜாதா கேலி செய்கிறாரே, இதுஎப்படி. ஏன்?
பார்ப்பன, மேல்சாதி நடுத்தர வர்க்கத்தைமட்டுமே நம்பி நடத்தப்படும் கல்கி இதழ் இத்தகைய கதைகளை ஏன் பிரசுரிக்கிறது?
இப்படிப் பல கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு சுஜாதாவின் கதைகளுக்குள் நாம் செல்ல வேண்டும். வாசகர்கள் அனைவருமே இவற்றைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அக்கதைகளின் சுருக்கத்தை முதலில் பார்ப்போம்.

15 கோடி செலவில் உதயம் NH4-

இயக்குனர் வெற்றிமாறன் தனுஷுக்காகவே ஒரு கதையை பல
வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்தார். தனுஷ் கால்ஷீட் கிடைக்காது என்று தெரிந்ததும் புதிய இயக்குனரான மணிமாறனை வைத்து தனது கதையை படமாக்கச் சொன்னார் வெற்றிமாறன்.அந்த வகையில் இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் சித்தார்த், அஷ்ரிதா ஷெட்டி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் உதயம் NH4. ஜி.வி.பிரகாஷ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து 15 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது உதயம் NH4.சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூரிலிருக்கும் நண்பன் வீட்டிற்கு படிக்க செல்கின்றனர் சித்தார்த்தும் அவரது நண்பர்களும். தமிழ்நாட்டில் சாதாரணமாக வாழ்ந்துவிட்டு பெங்களூரில் பார்ட்டி, டான்ஸ், மது என ஒரு புதிய உலகத்திற்குள் நுழைந்த ஃபீலிங்குடன் வாழ்ந்து வரும் சித்தார்த் தனது நண்பனின் காதலியான ஷ்ரிதா ஷெட்டியையே மடக்கிவிடுகிறார்.

தமிழக சாதி அரசியலின் தந்தை டாக்டர் ராமதாஸ் !

தமிழகத்தில் சாதி அரசியல் இல்லாமல் எல்லாம் பிரமாதமாக இருந்தது; திடீர் என்று ராமதாஸ் முளைத்தார் என்றெல்லாம் இல்லை. ஆனால் இப்போது சாதி அரசியல் தலையெடுத்திருக்கும் அளவுக்கு இதற்குமுன் இல்லை என்று கட்டாயம் சொல்லலாம்.பொதுவாக சாதி பார்த்துதான் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை நிற்கவைக்கின்றன. ஆனால் அவை யாவும் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசுவதில்லை. அதுவும் பொதுக்கூட்டங்களில், அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சாதி பேசுவதில்லை.ராமதாஸ்தான் இதனை உடைத்து வெளிப்படையாக வன்னியர் சங்கம் மூலம் இட ஒதுக்கீடு கோரிப் பெரும் போராட்டம் நடத்தினார். அதுகூடப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பொது இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு வேண்டிய இடம் கிடைப்பதில்லை என்று ராமதாஸ் போராடியதன் விளைவாகத்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று 20% ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. இந்த விளைவின் காரணமாகவே போராட்டம் நியாயமான காரணங்களுக்காக ஏற்பட்டது என்று சொல்லலாம்.

கரூரில் ஆழ்துளை கிணற்றில் 7வயது சிறுமி முத்து லட்சுமி 9 மணிநேரமாக மீட்புப் பணி

கரூர் அருகே 700 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த இனங்கனூர் என்ற இடத்தில் தனது தாத்தாவுடன் தோட்டத்திற்குச் சென்ற 7வயது சிறுமி முத்து லட்சுமி, 700 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இன்று காலை விழுந்தார். இதையடுத்து சிறுமியை மீட்கும் பணி நடந்து வருகிறது. சிறுமிக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கி வருகிறது. மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட நவீன கருவி மூலம் சிறுமியை மீட்கும் பணி தோல்வியடைந்துள்ளது. எனினும் மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

தாம்பத்தியம் பாதிக்காது ! கு க செய்யும் ஆண்களுக்கு பிரசாரம்

கோவை: குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டால் ஆண்மை
வாசக்டமி செய்துகொள்ள ஆண்கள் முன்வரும் போதிலும் டாக்டர்கள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்தது. ஆண்கள் கு.க.வில் அலட்சியம் காட்டியதாக கோவை மாவட்டத்தில் 4 டாக்டர்கள் உள்பட மாநிலம் முழுவதும் 45 டாக்டர்களுக்கு நடவடிக்கை நோட்டீஸ் (17பி) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு மாநில அளவில் 69,600 ஆண்களுக்கு வாசக்டமி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:குழந்தை பெற்ற பெண்கள் பலர் உடல்ரீதியாக பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வதைவிட ஆண்களுக்கு கு.க. ஆபரேஷன் செய்வது எளிதானது. பக்க விளைவுகள் கிடையாது. ‘ஆண்மை இழந்துவிடுவோம். குடும்பத்தை காப்பாற்ற உழைக்க முடியாது’ என்று ஆண்கள் பலர் பயப்படுகின்றனர். இது  உண்மையல்ல. தாம்பத்ய சுகத்துக்கோ, உடல் உழைப்புக்கோ குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

விடுதலை புலிகள் பயங்கரவாதிகள்!” அமெரிக்கா அறிவிப்பு!

“விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர
இலங்கைக்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது” இவ்வாறு கூறியிருக்கிறார் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் மிச்சேல் சிஷன்.
இலங்கை இன்டர்நேஷனல் மீடியா அசோசியேஷன் கொழும்புவில் நடத்திய விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் தமிழ் மக்களை ரட்சிக்க அமெரிக்கா வந்துள்ளது என்று ஊரெல்லாம் பேச்சு எழுந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று தெரிவித்து அதிர வைத்துள்ளார், அமெரிக்க தூதர்.
அந்த விழாவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையும் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் செயற்பட ஆரம்பித்த வரலாறு 1800ம் ஆண்டு வரையான கால கட்டம் வரை முன்னோக்கி செல்கிறது. அந்த காலத்தில் அமெரிக்காவின் கொன்சல் ஜெனரல் காலி கோட்டை விடுதியின் வரவேற்பறையில் இருந்தாராம்.

மக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்களில் காத்திருக்கும் ஆபத்து

கோவையில் 4 பேரை பலி கொண்டுள்ள தீ விபத்துக்குப் பின்பாவது, மக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்களில் உள்ள விதிமீறல்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.2004 ஜனவரி 23ல் ஸ்ரீரங்கத்தில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மாப்பிள்ளை உட்பட 50 பேர் பலியாயினர்; அதன் பின், கல்யாண மண்டபங்களின் விதிமீறல் பற்றி அதிரடி ஆய்வுகள் நடந்தன; அதே ஆண்டில், ஜூலை 16ல் கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், 93 மழலைகள் உயிரோடு கருகின; பள்ளிக் கட்டடங்களின் மீது பாய்ந்தது அரசின் அதிகாரம்; தாசில்தார் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் பஸ்சிலிருந்து குழந்தை விழுந்து இறந்த பின், பள்ளி வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது அரசு. யாராவது செத்தால்தான், சம்மந்தப்பட்ட விதிமீறல் கண்டு கொள்ளப்படும் என்பது தமிழகத்திற்கான நிரந்தர சாபக்கேடாகவே மாறிவிட்டது. வணிக வளாகங்கள், தியேட்டர்கள், டிபார்மென்டல் ஸ்டோர்கள், ஜவுளிக்கடைகள் போன்ற மக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்களில் தீத்தடுப்பு வழிமுறைகள், அவசர வழி போன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லாமல்

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

சிபிஐ நடவடிக்கையில் மத்திய அரசு தலையீடு நிருபணம் ! சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும்

புதுடில்லி: சி.பி.ஐ., எடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தலையிடுவதாக
தொடர்ந்து எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது இன்று நிரூபணமாகி இருப்பதாக சி.பி.ஐ., டைரக்டர் மூலமே வெளியாகி இருப்பதால் பிரதமரும். சட்ட அமைச்சரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ., மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் சி.பி.ஐ., கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு விவர அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு திருத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக தங்கள் தரப்பு விவரத்தை அபிடவிட்டாக தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது. இன்று சி.பி.ஐ., டைரக்டர் ரஞ்சித்சின்கா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதில் எங்களின் அறிக்கை விவரம் சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதனை அவர் பார்த்தார் என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் ! கருத்து கணிப்பு

கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில், மொத்தமுள்ள, 224சட்டசபை தொகுதிக்கான தேர்தல், மே, 5ல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தனியார் டிவிஒன்று, கர்நாடகாவில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:கர்நாடகாவில், நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், தற்போதுஆட்சியில் உள்ள பா.ஜ., கட்சி, 39 முதல் 49தொகுதிகளில் மட்டுமேவெற்றி பெறும். இக்கட்சிக்கு, 23 சதவீத ஓட்டுகள் கிடைக்கும்.
அதே நேரத்தில், காங்கிரஸ், 117 முதல் 129 தொகுதிகளில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும். தற்போதைய, சட்டசபையில், காங்., உறுப்பினர்களின் எண்ணிக்கை, 71.

வயதான காலத்தில் 2 வது திருமணம் தப்பா?

ஆண்களுக்கு தள்ளாத வயதில்தான் பெண் துணை அதிகம் தேவைப்படும். கவனிக்க ஆள் இல்லையே என்ற கவலையும் அதிகமாக இருக்கும். அதனால்தான் மனைவியை இழந்த கணவர்கள் அடுத்த சில ஆண்டுகளிலேயே கவனிப்பாரின்றி இறந்து விடுவார்கள். 60 வயதான ஒருவர் இரண்டாவது திருமணம் செய்ய விளம்பரம் செய்துள்ளார். அவரை கூப்பிட்டு அனுப்பி அடித்து நகையை பறித்துள்ளது ஒரு கும்பல்.சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் தங்கரத்தினம். ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மனைவி சில ஆண்டு முன்பு காலமானார். பிள்ளைகள் இல்லை. கவனிக்க யாரும் இல்லாமல் அவதிப்பட்ட தங்கரத்தினம், நாளிதழ் ஒன்றில் 2வது திருமணம் செய்ய பெண் தேவை என விளம்பரம் கொடுத்தார். இதை பார்த்து, ஒரு இளம்பெண் தங்கரத்தினத்தை தொடர்பு கொண்டு, எனக்கு 25 வயது ஆகிறது. உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அம்பத்தூருக்கு வாருங்கள் என கூறியுள்ளார். தங்கரத்தினம் அம்பத்தூர் வந்தார். அந்த பெண் அவரை ஒரு ஆட்டோவில் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவரும், அவரது கணவன் மற்றும் 2 பேரும் சேர்ந்து தங்கரத்தினத்தை, இந்த வயதில் உனக்கு 2வது திருமணம் கேட்கிறதா என கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு யாரிடமாவது இதை தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தங்கரத்தினம் புகார் செய்தார். அம்பத்தூர் போலீசார் விசாரித்தனர். தங்கரத்தினத்தை தாக்கி நகையை பறித்தது அயனாவரத்தை சேர்ந்த நிக்கோலா, அவரது கணவன் வில்லியம், ரேகா, முத்துக்குமார் ஆகியோர் என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 5 சவரன் நகை மீட்கப்பட்டது.

பாலியல் பலாத்காரம்: சிறுமி கொலை 3 பேருக்கு தூக்கு தண்டனை

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் அருகே நேருநகரில் கடந்த 2012–ம் ஆண்டு ஜூன் மாதம் 24–ந்தேதி அன்று 4 வயது சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் பாபு உள்பட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த இந்தூர் செசன்சு கோர்ட்டு நீதிபதி இந்திராசிங் தீர்ப்பு கூறினார். மூவர் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் பாபு, ஜிதேந்திரா, தேவேந்திரா ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
 A local court today awarded death sentence to three youths for raping and murdering a four-year- old girl here last year.
Additional District Court Judge Indira Singh handed down the capital punishment to Babu alias Chetan (22), Jitu alias Jetendra (20) and Sunny alias Devendra (22).
The trio was found guilty under various sections of the IPC related to rape, murder and abduction, among others, Public Prosecutor Hemant Mungee told

பவர் ஸ்டார் சீனிவாசன் கைது! தொழிலதிபரிடம் 50 லட்சம் மோசடி


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசென்னை: ரூ.5 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த தொழிலதிபர் ரெங்கநாதன் (60), தனது ஓட்டல் தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்தார். அதற்காக பலரிடம் கடன் வாங்க முயற்சி செய்தார். இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த விஷ்ணு, சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற 2 புரோக்கர்கள் அறிமுகமாகினர். சென்னை அண்ணாநகரில் வசிக்கும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இருந்து குறைந்த வட்டியில் பலருக்கு கடன் வாங்கித் தருவதாக புரோக்கர்கள் தெரிவித்தனர். அவர்கள் உதவியுடன் சீனிவாசனை சந்தித்த ரெங்கநாதன், ரூ.5 கோடி கடன் கேட்டுள்ளார்.

சிபிஐ செயல்பாட்டில் அமைச்சரின் தலையீடு... சட்ட அமைச்சர், பிரதமர் பதவி விலக கோரி BJP

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில். நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு, சிபிஐ இயக்குனர் சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை சந்தித்து ஏன் என்று பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது. சட்ட அமைச்சரிடம் காட்டிய பிறகே அறிக்கையை சிபிஐ இயக்குனர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும் பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத். சிபிஐ செயல்பாட்டில் சட்ட அமைச்சரின் தலையீடு இருந்ததாக குற்றம்சாட்டினார். சிபிஐ தலையிட்ட சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த பிரச்சனைக்கு தார்மீக பொறுப்பு ஏற்று பிரதமரும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வணிக வளாக தீ விபத்து மேனேஜர், ஷேர் நிறுவன ஓனர் கைது

  
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
கோவை: கோவையில் வணிக வளாக தீ விபத்தில் 4 பெண்கள் பலியான சம்பவத்தில் வளாக மேலாளர் மற்றும் அங்கு செயல்பட்டு வந்த பங்கு வர்த்தக நிறுவன அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வணிக வளாக உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை அவிநாசி சாலை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள ‘விக்னேஸ்வர் கிரெஸ்டா‘ என்ற 3 மாடி வணிக வளாகத்தில் ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ இன்சூரன்ஸ் நிறுவனம், ஷேர்கான் பங்கு வர்த்தக நிறுவனம் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் இயங்கி வந்தன. 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்தனர். கட்டிடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஷேர்கான் நிறுவன ரிசப்ஷனிஸ்ட் கீர்த்தனா (26), ஊழியர் ஸ்ரீலட்சுமி (30), விஜயலட்சுமி (50), மார்க்கரெட் மேரி (58) ஆகிய 4 பெண்கள் கருகி இறந்தனர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சிவகங்கை மஞ்சுவிரட்டு காளைகள் பாய்ந்து 3 பேர் பலி! 59 பேர் காயம்!!

சிவகங்கை மாவட்டம் கண்ட்ராமாணிக்கம் கிராமத்தில் முத்து முருகையா
கோவில் திருவிழாவை முன்னிட்டு சித்திரை பவுர்ணமியில் நேற்று மஞ்சுவிரட்டு என்றழைக்கப்படும் மாட்டு வேடிக்கை நடத்தப்பட்டது.
10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்த மாட்டுவேடிக்கையில் சுமார் 350 முரட்டுக் காளைகள் விடப்பட்டன. காளைகளை மாடு பிடிக்க வந்த வீரர்கள் அடக்கி கொண்டிருந்தபோது, காளைகள் பார்வையாளர்கள் பக்கமாக பாய்ந்து விட்டன.
இதில் 3 பார்வையாளர்கள் உயிரிழந்தனர். 59 பேர் படுகாயமடைந்தனர். இதில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. போதுமான போலீஸ் பாதுகாப்பு இருந்திருந்தால் இந்த உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வியாழன், 25 ஏப்ரல், 2013

விமானத்தில் ஒழிந்து பயணித்தவர் மரணம்

தென் மேற்கு லண்டனில் கடந்த செப்டம்பரில் வானிலிருந்து விழுந்து இறந்த ஒரு இளைஞன் ஆப்ரிக்காவின் அங்கோலா நாட்டிலிருந்து நல்ல வாழ்க்கையைத்தேடி விமானத்தில் திருட்டுத்தனமாக வந்தவர் என்று பிரிட்டனில் நடந்த மரண விசாரணை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜொஸ் மட்டாடா என்ற அவர் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்தவர். இவரது உடல் கடந்த செப்டம்பரில் லண்டனின் அமைதியான ஒரு தெருவின் பாதசாரிகள் நடக்கும் பாதையில் கண்டெடுக்கப்பட்டது.
அவர் உடலில் பல காயங்கள் இருந்தன.
தனது 26வது பிறந்த நாளில் லுவாண்டாவில் இருந்து வந்த விமானத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்த மட்டாடா, இந்த விமானம் லண்டனில் தரையிறங்கும் நிலையில், விமானத்தில் அடிப்பாகத்திலிருந்து தவறி விழுந்துவிட்டார்.
அவரது சட்டைப்பையில் இருந்த கைத்தொலைபேசி சிம் கார்டு ஒன்றின் மூலம் , அவர் ஐரோப்பாவில் ஒரு நல்ல வாழ்க்கை வாழ விரும்புவதாகக் குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தது தெரியவந்தது.
அவர் தரையில் விழும் நேரத்தில் அவர் கடும் குளிரினாலோ அல்லது பிராண வாயு பற்றாக்குறையாலோ, இறந்திருக்கலாம் அல்லது, இறக்கும் நிலைக்கு வந்திருகலாம் என்று மருத்துவர் ஒருவர் விசாரணையில் கூறினார்.
இது ஒரு விபத்தினால் ஏற்பட்ட மரணமாக மரண விசாரணை அதிகாரியால் முடிவு செய்யப்பட்டுள்ளது. bbc.com

தனுஷ் படப்பிடிப்பில் விபரீதம் : 2 துணை நடிகைகள் பலி

நடிகர் தனுஷ் நடிக்கும் நையாண்டி படத்தை வாகை சூடவா படத்தை இயக்கிய எ.சற்குணம் இயக்கி வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.படப்பிடிப்பின்போது விபரீதம் ஏற்பட்டுள்ளது.  இடமலையில் குளத்தில் மூழ்கி விஜி,சரசு என்ற 2 துணை நடிகைகள் உயிரிழந்தனர்.

vigneshwar cresta coimbatore கட்டிடத்தில் தீ: 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி- 6 பேர் காயம்

Four women, including two house-keeping staff, were killed in a fire that broke out in a commercial
complex at Lakshmi Mills Junction on Avanashi Road in Coimbatore on Thursday morning.
கோவையில் வணிக வளாகத்தில் உள்ள வங்கியில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் கருகி பலியாயினர். பலர் காயமடைந்தனர். கோவை அவினாசி சாலையில் வணிக வளாக கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தின் 2-வது மாடியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.
இன்று காலை வழக்கம் போல் பணிகள் நடந்து கொண்டு இருந்தன. அப்போது திடீரென தீப்பிடித்தது. இதனால் பரபரப்பு ஏற்படவே வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஓட்டம் எடுத்தனர்.தீ மளமளவென பரவியதும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் பலர் உள்ளே சிக்கினர்.
தீயிணை அணைக்க 20 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு வீரர்கள் தீயை அணைக்க சுமார் 2 மணி நேரம் போராடினர். இந்நிலையில் மீட்புப்பணிகளுக்காக கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடந்தன. மீட்புபணியில் பலர் மீட்கப்பட்டனர்.
3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

ப.சிதம்பரம்: தம்பி என்று அழைத்தேன் ! நல்ல புத்திமதிகளை சொன்னேன்

இரவு 11 மணியிருக்கும் நானே காரை ஒட்டி சென்று 150 தூரம் முன்பாக நிறுத்தி விட்டு நடந்து சென்று மாடிப்படியேறி அங்கு ஒரு அறையில் இருந்த பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் சந்தித்தேன் , தம்பி என்று வாஞ்சையோடு அழைத்து எவ்வளவோ நல்ல புத்திமதிகளை சொன்னேன் எதையுமே அவர்கள் கேட்கவில்லை நாம் ஏற்படுத்தி கொடுத்த நல்ல வாய்ப்புக்களை எல்லாம் போட்டு உடைத்தார்கள் பின்பு நம்தேசத்தின் மாணிக்கத்தை இதே தமிழ் மண்ணில் இழந்தோம் அதுவும் சென்னைக்கு அருகிலேயே . அவை எல்லாம் யாரால் என்று எல்லோருக்கும் தெரியும் ஈழத்தமிழருக்கு காங்கிரஸ் அளவு வேறு யாரும் நன்மை செய்யவில்லை என்பதை மட்டும் தற்போது சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்

ஞாநி: மனசாட்சி உள்ள மனிதர்கள் எவரும் இனி ஆயுதபோராட்டத்தை தூண்ட கூடாது

land-mine campodiahindu temple1 ஞாநி:  உலகின் பிரும்மாண்டமான இந்துக் கோவில் வளாகங்கள் எனப்படும் அங்கோர் வாட் சரித்திர பூமிக்கு சிங்கப்பூர் நண்பர் சரவணனுடன் சென்று மூன்று நாட்களை அங்கே கழித்தேன் .பதினோராம் நூற்றாண்டில் தமிழ், சமஸ்கிருத, பல்லவ, திராவிட கலாச்சாரங்களுடன் தொடர்புடைய மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில்களை விடப் பழமை வாய்ந்த கோவில்களான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை கபாலி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில்  போன்றவை இன்னும் வழிபாட்டு இடங்களாக தமிழகத்தில் உயிர்ப்புடன் இருக்கின்றன.
ஆனால் கம்போடியாவின் அங்கோர் வாட் கோவில்கள் சிவன், விஷ்ணு கோவில்களாகத் தொடங்கி பௌத்த கோவில்களாக மாறி சில நூறு வருடங்களிலேயே சிதிலமடைந்து, சிற்பங்கள் மேலை நாட்டினரால் கொள்ளையடிக்கப்பட்டு, பின் தொடர்ந்து நடந்த பல்வேறு  யுத்தங்களால் கவனிப்பாரற்று மேலும் பாழாகின. சுமார் இருபது முப்பது வருடங்களாகத்தான் இந்தக் கோவில்கள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் நிதி உதவியுடன் யுனெஸ்கோ வழிகாட்டுதலில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

மன்மோகன் சிங்குக்கு யஷ்வந்த் சின்ஹா: “ராசா போட்டு உடைத்தும், நீர் மௌன சாமியாரா?”

 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நீங்கள் இனியும் மௌன சாமியாராக இருந்தால்,
ஊழலில் நீங்களும் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஆ.ராசா குற்றவாளி என்றால், நீங்களும் குற்றவாளிதான்” என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடிதம் எழுதியுள்ளார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பி.சி.சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தியது. விசாரணை அறிக்கையில் முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளது. அதே ஜே.பி.சி. அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாரதிய ஜனதா மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கடிதம் எழுதியுள்ளார்.
சின்ஹாவின் கடிதத்தில், “2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடுவதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை செய்த பின்னர்தான் எடுக்கப்பட்டது என்று ஆ.ராசா கூறியுள்ளார். அதனால் நீங்களும் (பிரதமர் மன்மோகன் சிங்) குற்றவாளிதான்.

பார்வதி ஓமனக்குட்டன் வடிவேலுவுடன் ஜோடி!

அஜித் கதாநாயகி வடிவேலுவுடன் ஜோடி!நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையுலகில் ரீஎண்ட்ரி கொடுக்கிறார் நடிகர் வடிவேலு. தனது ரீஎண்ட்ரி மிகப்பெரிய அளவில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பொறுமையாக ஒவ்வொரு காயாக நகர்த்தி வருகிறார் வடிவேலு. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணன் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகையை தான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ஒப்ப்ந்தம் செய்தது திரையுலகத்தையே ஆச்சர்யத்தில் மூழ்கடித்துவிட்டது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா ll திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பார்வதி ஓமனக்குட்டன்.பில்லா ll எதிர்பார்த்த வெற்றியை தரவில்லையென்றாலும், பில்லா ll-ல் பார்வதி ஓமனக்குட்டனின் கதாபாத்திரம் அதிகமாக பேசப்படவில்லை. எனவே தமிழ்த் திரையுலகில் அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக இல்லை.அவ்வப்போது கடை திறப்பு விழாக்களில் மட்டும் கலந்துகொண்டு வந்த பார்வதி ஓமனக்குட்டன் வடிவேலு நடிக்கவிருக்கும் ‘கஜ புஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ண தேவராயரும்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்

புதிய ரக திராட்சை பயிரிட்டு கம்பம் விவசாயி மகிழ்ச்சி ! ஏற்றுமதி தரம் வாய்ந்த ரெட்குளோப்

கூடலூர்: கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி விவசாயி ரெட்குளோப் என்ற ஏற்றுமதி தரம் வாய்ந்த புதிய ரக திராட்சை சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கூடலூர், கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி உட்பட சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி நடைபெறுகிறது. இதுதவிர சின்னமனூர், ஓடைப்பட்டி பகுதிகளில் விதையில்லா பச்சை திராட்சை சாகுபடி செய்யப்பட்டது.இந்நிலையில், சுருளிப்பட்டியை சேர்ந்த விவசாயி பொன்காட்சி கண்ணன், ரெட்குளோப் என்ற ஏற்றுமதி தரம் வாய்ந்த புதிய ரக திராட்சை பயிரிட்டு சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிரிடப்பட்டு, வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் ரெட்குளோப் என்ற புதிய ரக திராட்சையை சுருளிப்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் சாகுபடி செய்துள்ளார்.ரெட்குளோப் திராட்சையானது, சாதாரண திராட்சையை விட பெரியதாகவும், சிவப்பு கலரில் பிளம்ஸ் பழம் அளவில் சதைப் பிடிப்புடனும், பழத்தினுள் விதைகள் சிறிய அளவிலும் உள்ளன. இது குறித்து பொன்காட்சி கண்ணன் கூறுகையில், ‘ஒரு ஏக்கர் நிலத்தில் ரெட்குளோப் விவசாயம் செய்ய 1.5 லட்சம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 8 டன் வரை பலன் தருகிறது. இந்த பழம் ஏற்றுமதி தரம் வாய்ந்தது. தற்போது கிலோ 80க்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள். சுமார் 20 நாட்களுக்கும் மேலாக இருப்பு வைத்து ஏற்றுமதி செய்யலாம் என்றார்.

வீடுகளில் இனி "சோலார்' கட்டாயம் : மாநகராட்சிகளில் முதற்கட்டமாக அமல்

மதுரை:"வீடுகளில் "சோலார் எனர்ஜி' பயன்படுத்தினால் மட்டுமே,
கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும்,' என்ற நடைமுறையை தமிழகத்தில் அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டை சமாளிக்க, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகிறது. பிற மாநிலங்களில் இருப்பதைப் போல், சுயமின் உற்பத்தி தமிழகத்தில் இல்லை. முழுக்க அரசை நம்பியிருப்பதால், மின்தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.வடமாநிலங்களில், வீடுகள், விவசாயம், அலுவலகங்களில் தனியார் "சோலார்' பயன்பாடு உள்ளது. தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் வகையில் சோலார் பயன்படுத்தப்படுகிறது. வருங்காலத்தில், மின்தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டுமானால், "சோலார்' பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது.

டாக்டர் ராணி அதிமுக MLA பரஞ்சோதி மீதான வழக்கு என்னவாச்சு?

சென்னை:""தான் நேர்மையானவர் என்று பறைசாற்றும் ஜெயலலிதாவிற்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி, பரஞ்சோதி எம்.எல்.ஏ., ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் கண்ணுக்கு தெரியவில்லையா?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். திருவான்மியூரில், தி.மு.க., சார்பில், "தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பிலான கண்டன கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:நான் முதல் முறையாக சட்டசபை சென்றபோது, ஒரு ஏடு, என் கண்ணில் பட்டது. அதில், ஜாதிப் பெயரை குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது. அப்போதைய அவைத் தலைவரிடம் இது குறித்து முறையிட்டேன். அதற்கு தவறு நடந்ததாக வருத்தப்பட்டனர். உடனடியாக அந்த தவறு திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது, அப்படியெல்லாம் நடக்குமா?

பச்சையாகவே சொல்கிறேன் விஜயகாந்த் கட்சியை ஒழிப்பதற்கு ,,,,

அதிமுக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் செய்யும் தவறுகளை ஜெயலலிதா கண்டுகொள்வதில்லை என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை அழிக்க நினைப்பதாகவும் அதிமுக அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் திருவான்மியூரில் தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் 24.04.2013 புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் பேசுகையில், 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டது முதல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றி வருவதை குறிப்பிட்டார்.

அத்வானி ஆவேசம்! காங்., பழி வாங்கும் நடவடிக்கை

பெங்களூரு: "2ஜி ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த
முறைகேடுகளை விசாரித்த, பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையில், உள்நோக்கத்துடன், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, காங்கிரசின் பழி வாங்கும் நடவடிக்கை' என, பாரதிய ஜனதா மூத்த தலைவர், அத்வானி கூறினார். கர்நாடகாவில், மே, 5ல் நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி, அம்மாநிலத்தின் பெல்காம் மற்றும் பீஜப்பூர் மாவட்டத்தில், அத்வானி நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: அரசியல் பழி வாங்கும் நோக்கிலேயே, முன்னாள் பிரதமர், வாஜ்பாயின் பெயரை, பார்லிமென்ட் கூட்டுக் குழு தலைவர், சாக்கோ, "2ஜி' முறைகேடுகள் தொடர்பான, தன் வரைவு அறிக்கையில் சேர்த்துள்ளார். இதன் மூலம், இந்த விசாரணையை திசை திருப்ப முயற்சிகள் நடக்கின்றன. இந்த விவகாரம் குறித்து பார்லிமென்டில் விவாதிக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

புதன், 24 ஏப்ரல், 2013

யஸ்வந்த் சின்ஹா : கூட்டுகுழுமுன்பாக பிரதமர் ஆஜாராக வேண்டும்

 புதுடல்லி: 2ஜி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் ஆஜராக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான யஷ்வந்த சின்ஹா வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள 3வது கடிதத்தில், அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து நடைபெற்ற ஆலோசனைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பிரதமர் விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து மவுனம் காப்பது அவர் மீதான புகார்களை ஒப்பு கொள்வதற்கு இணையானது என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமண சட்டம் நிறைவேற்றம் ஜூன் மாதத்தில் முதல் கல்யாணம்

பாரிஸ்: ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி
அளிக்கும் சட்டம் பிரான்சில் நிறைவேற்றப்பட்டது. வரும் ஜூன் மாதம் ஓரின சேர்க்கையாளர் முதல் திருமணம் நடக்கிறது.பிரான்சில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவும் ஒப்புதல் அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமசோதாவுக்கு பிரான்ஸ் செனட் கடந்த 12&ம் தேதி ஒப்புதல் அளித்தது. பிரான்சில் நடந்த செனட் உறுப்பினர்கள் கூட்டத்தில் இதற்காக வாக்கெடுப்பு நடந்தது. 179 உறுப்பினர்களை கொண்ட செனட்டில் 157 பேர் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

புதிய ரெக்கார்டு ஏப்பிரல் வரை அதிக படங்கள் வெளிவந்துள்ளன

2013ம் ஆண்டு ஜனவரி 1ல் தொடங்கி ஏப்ரல் 19ம்
தேதி வரை 53 படங்கள் ரிலீஸ்
ஆகி உள்ளன. இது புதிய ரெக்கார்டு. வழக்கமாக மே மாதம் அல்லது ஜூன் முதல் வாரத்தில்தான் 50 படங்கள் ரிலீஸ் எண்ணிக்கையை நெருங்குமென தெரிவிக்கிறது கோலிவுட்.

கோர்ட்டுக்கு வந்தது வீரபாண்டி ஆறுமுகம் குடும்பம்!

மாஜி  திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவி, முதல் மருமகள் இணைந்து, இரண்டாவது மனைவி உட்பட, எட்டு வாரிசுதாரர்களுக்கு, வீரபாண்டி ஆறுமுகம் எழுதிக் கொடுத்த, சொத்து பத்திர பதிவை ரத்து செய்யக் கோரி, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், பூலாவரி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சோழக்கவுண்டர்.  இவரது மகன் வீரபாண்டி ஆறுமுகம். 1973 முதல் சேலம் மாவட்ட, தி.மு.க., செயலராகவும், ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தார்.

பின்வாங்கி செல்லுங்கள்: சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு

புதுடில்லி : "இந்திய பகுதிக்குள் அத்துமீறல் செய்வதற்கு முந்தைய நிலை
தொடர வேண்டும்; பின்வாங்கி செல்லுங்கள்' என, சீனாவிடம், இந்தியா வலியுறுத்தியுள்ளது.ஜம்மு - காஷ்மீரின், லடாக் பகுதியின் கிழக்கே, கடல் மட்டத்திலிருந்து, 17 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள, பனிமலைப் பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவ வீரர்கள், 50 பேர் ஆக்கிரமிப்பு செய்தனர்.இரு நாடுகளுக்கும் எல்லையாக கருதப்படும், நடைமுறை எல்லைக் கோட்டைத் தாண்டி, டி.பி.ஓ., என்ற இடத்தில், 10 கி.மீ., முன்னோக்கி, இந்திய எல்லைக்குள் வந்த சீன ராணுவத்தினர், கூடாரம் அடித்து முகாமிட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான பொருட்களை, ராணுவ விமானங்கள் இறக்கிச் சென்றுள்ளன.இதை அறிந்த இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை, கண்டனம் தெரிவித்தது. "தேசத்தின் நலன்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்' என, ராணுவ அமைச்சர் நேற்று முன் தினம் அறிவித்தார்.

அர்ச்சகர் பணி பார்ப்பனருக்கு மட்டும் உரியதல்ல! ஜெயலலிதா கும்பலின் சூழ்ச்சி !

அனைத்துச்சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் ! கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் !
உச்சநீதிமன்றத்தில் மதுரை சிவாச்சாரியார்களுடன் சுமுகத் தீர்வு காண முயற்சிக்கும் பார்ப்பன ஜெயலலிதா கும்பலின் சூழ்ச்சியை முறியடிப்போம்

கண்டன ஆர்ப்பாட்டம்
துரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக 22.04.2013 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரெங்கநாதன் தலைமையேற்றார்.

எம்.ஆர்.காந்தி தாக்குதல்: பாஜகவின் தேர்தல் Stunt ! Victim போஸ் கொடுக்கும் BJP

தமது இந்து வாக்கு வங்கியை ஊதிப் பெருக்கி காட்டி கூட்டணி பேரம் பேசுவதற்கும், சில ஆயிரம் ஓட்டுக்களை பொறுக்குவதற்கும், மக்களை பிளவுபடுத்தும் தேசவிரோத செயலை செய்து வருகின்றன பாஜகவும் மற்ற இந்துத்துவ அமைப்புகளும்
குமரி மாவட்டத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த எம் ஆர் காந்தி தாக்கப்பட்டதை வைத்து ஒரு பெரும் வன்முறையை கட்டவிழ்க்க ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது. ஆங்காங்கே மதவெறித் தீயை ஊதி விட்டுள்ளனர். மக்கள் அச்சத்திலும், பீதியிலும் உறைந்து போய் கிடக்கின்றனர். எந்நேரமும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தோர் தாக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

chennai மாநகர ஆட்சி அறிவிக்கப்பட்ட 215 திட்டங்கள் பல தொடங்கப்படவேயில்லை

அதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டு: கலைஞர் குற்றச்சாட்டு அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தவில்லை என திமுக தலைவர் கலைஞர் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்களின்படி சென்னை மாநகராட்சியில் 2012-13-ம் ஆண்டில் வார்டு கவுன்சிலர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான பணிகள் முடிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.கடந்த ஆண்டில் திட்டமிடப்பட்ட 640 பணிகளில் 617-க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அதில் 597 பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டன. 397 பணிகளுக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டு அதில் 77 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 215 பணிகள் தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் 2013-14-ம் ஆண்டுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.மாநகராட்சி உறுப்பினர் தாக்கியதால் சுகாதார அதிகாரி ஒருவர் பதவி விலகியதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி பல நாள்கள் ஆகியும் அரசு தரப்பிலோ, மாநகராட்சி தரப்பிலோ இதுவரை மறுப்பு வந்ததாகத் தெரியவில்லை.

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

பிரிட்டனில் மிகப்பெரிய குதிரைப் பந்தய மோசடி

பிரிட்டனில் இதுவரை இல்லாத வகையில் குதிரைப் பந்தயப் போட்டிகளில்

மிகப் பெரும் மோசடி நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இங்கே குதிரைப் பந்தயத்தின் தலைமையகம் என்று கருதப்படும் நாட்டின் கிழக்கேயுள்ள நியூ மார்க்கெட் பகுதியில் இருக்கும் கோடோல்ஃபின் குதிரை லாயத்திலுள்ள 11 குதிரைகளுக்கு ஊக்க மருந்து அளிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 45 குதிரைகளில் பதினொன்றுக்கு ஊக்க மருந்து அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில், கோடோல்ஃபின் குதிரை லாயத்தின் பயிற்சியளர் மஹ்மூத் அல் ஜரூனி, பிரிட்டிஷ் குதிரைப் பந்தய விசாரணை ஆணையத்தின் முன்னர் ஆஜராகவுள்ளார். தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை குதிரைகளுக்கு அளித்ததையும் அது மிகப் பெரும் தவறு என்பதையும் அல் ஜரூனி ஒப்புக்கொண்டுள்ளதாக கோடோல்ஃபின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. 'துபாய் அரச குடும்பத்துடன் தொடர்பு' இந்தக் குதிரை லாயம் துபாயின் மன்னர் ஷேக் முகமதுக்கு சொந்தமானது. ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தை ஆளும் மக்தூம் குடும்பத்துக்கு சொந்தமான குதிரைகள் மட்டுமே கோடோல்ஃபின் லாயத்தின் பராமரிக்கப்படுகிறது. துபாய் மன்னர் ஷேக் முகமது< அந்தக் குதிரை லாயத்தில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் குறித்து தாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இது ஒரு கறுப்பு தினம் என்றும் அந்த குதிரை லாயத்தின் மேலாளர் சைமன் கிறிஸ்ஃபோர்ட் கூறியுள்ளார்.

ஹிந்தி படவுலகில் தமிழ் பட ஸ்டன்ட் மாஸ்டர்கள் முற்றாக நீக்கம்! தகராறு முற்றியது

மும்பை: பாலிவுட் கலைஞர்களுடன் ஏற்பட்ட மோதலால் இந்தி
படங்களிலிருந்து கோலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள் நீக்கப்பட்டனர்.
சல்மான்கான் நடிக்கும் இந்தி படம் ‘மென்டல்‘. இப்படத்தில் பெப்சி அமைப்பை சேர்ந்த 50 சதவீத ஸ்டன்ட் கலைஞர்களை பயன்படுத்தவில்லை, பாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட குறைவான சம்பளம் வழங்கவில்லை என்பதை கண்டித்து பெப்சியினர் ஷூட்டிங்கை புறக்கணித்தனர். இதையடுத்து இரு படவுலகுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பெப்சி நிர்வாகிகள் மும்பை சென்று நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. இது பற்றி மென¢டல் பட தயாரிப்பாளரும் இயக்குனருமான சோஹைல் கான் (சல்மானின் தம்பி) கூறும்போது,‘தென்னிந்திய ஸ்டன்ட் மாஸ்டர் இப்படத்துக்கு நியமிக்கப்பட்டார். அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கான்பெடரேஷன் விதிப்படி 70 சதவீதம் ஸ்டன்ட் கலைஞர்களை தங்கள் அமைப்பிலிருந்து பயன்படுத்த வேண்டும், 30 சதவீதம் வேறு கலைஞர்களை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் அமைப்பிலிருந்து 50 சதவீதம் பேரை பயன்படுத்த வேண்டும் என்று பெப்சியினர் ஷூட்டிங்கை புறக்கணித்துவிட்டனர்‘ என்றார். மும்பை ஸ்டன்ட் சங்க பொதுச் செயலாளர் அயிஜாஸ் குலாப் கூறும்போது,‘அகில இந்திய கான்பெடரேஷன் அமைப்பின் விதியை பின்பற்றாமல் நடந்துகொண்டால் அவர்களை பாலிவுட் தயாரிப்பாளர்கள் புறக்கணிப்பார்கள்‘ என்றார்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலக ஆபாசக் கூத்துக்கள்.. கொலை.. தற்கொலைகள்.

கையில் மனுவோடு வருகின்ற இளம் பெண்களைக் குறி வைத்து தன் வலையில் வீழ்த்தியிருக்கிறான் இங்கு டி.ஆர்.ஓ. அலுவலக டிரைவராகப் பணியாற்றி வந்த மனோகரன். இதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதே வக்கிர புத்தியுடன் இருக்கின்ற அதிகாரிகளுக்கும் இவனது லீலைகள் தெரிந்துதான் இருந்திருக்கின்றன. அவர்கள் இவனிடம்  ‘பங்கு’ கேட்டிருக்கின்றனர்.  ஆட்சியர் அலுவலக வேலையை முடித்துக் கொடுப்பதற்கு பிரதிபலனாக  அவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  விருந்தாக்கி வந்திருக்கிறான். கடந்த மார்ச் 13-ஆம் தேதி காணாமல் போனான் மனோகரன். மறுநாளே மனோகரனின் மனைவி திருச்செல்வி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போதுதான், கிடைக்கப்பெற்ற செல்போன் அழைப்பு விபரங்கள் மூலம் மனோகரனின் பெண் தொடர்புகளை அறிந்திருக்கின்றனர். மனோகரன் வசிக்கின்ற இந்திரா நகர் ஏரியாவிலேயே பெட்டிக் கடை வைத்திருக்கின்ற ஆறுமுகத்தின் மனைவி பாண்டிச்செல்வி.  இவள்தான் மனோகரனுடன் கடைசியாக  செல்போனில் பேசியிருக்கிறாள். இந்த விபரங்களை அறிந்த காக்கிகள், பாண்டிச்செல்வியிடமும் ஆறுமுகத்திடமும் விசாரித்தனர்.   இந்த விசாரணை நெருக்கடிக்கு பயந்து ஆறுமுகமும் பாண்டிச்செல்வியும் தற்கொலை செய்து கொண்டார்கள்.

நீதிபதி சந்துரு: உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்

திருச்சி: ""கல்வியில் மாற்றம் கொண்டு வர, நீதிமன்றம் தான் காரணம் என்றாலும், உயர்கல்வி தரமற்று இருப்பதற்கு நீதிமன்றமும் ஒரு காரணம் என்பது வருத்தமளிக்கிறது,'' என, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறினார்.திருச்சி தேசிய கல்லூரியின், 94வது ஆண்டு விழா நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் ரகுநாதன் வரவேற்றார். சென்னை உயர்நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசியதாவது:இந்திய அரசியல் சாசனத்தில் தொழில், வியாபாரம் போன்றவை ஒரு தனி மனிதனுக்கு அடிப்படை உரிமை சட்டமாக்கப்பட்டது. ஆனால், கல்வி அடிப்படை உரிமை சட்டமாக ஆக்கப்படவில்லை. 1991ம் ஆண்டில் ஒரு வழக்கின் தீர்ப்பில், "கல்வி தனி மனித உரிமை' என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்பின் மீது நடந்த விவாதங்களை தொடர்ந்து தான், ஆறு வயது முதல், 14 வயது வரை, கல்வி அடிப்படை உரிமையானது.  
எல்லா அரசு அதிகாரிகளுக்கும் ஒய்வு பெற்றதும் தான் ஞானம் பிறக்கும்...அப்புறம் கூப்பிடுகிற விழாக்களுக்கு சென்று தங்களது கருத்தை அள்ளி வீசுவார்கள்... இதில் என்ன பயன் இருக்கிறது... பொறுப்பில் இருக்கும் போது இந்த ஞானம் வராதது ஏன்?

திங்கள், 22 ஏப்ரல், 2013

சாக்கோவுக்கு எதிராக திமுக உரிமை மீறல் நோட்டீஸ்!

புதுடெல்லி: 2ஜி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை ஆவணங்களை வெளியிட்டதால், நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் பதவியிலிருந்து பி.சி. சாக்கோவை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள திமுக, அவருக்கு எதிராக  உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளத இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, 2ஜி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை ஆவணங்களை வெளியிட்ட பி.சி. சாக்கோவுக்கு எதிராக தங்கள் கட்சி சார்பில் சபாநாயகர் மீரா குமாரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதால், கூட்டுக் குழு தலைவர் பதவியிலிருந்து சாக்கோவை நீக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் திமுக சார்பில் டி.ஆர். பாலு மற்றும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

5 வயது சிறுமிக்கு பெரும் கொடுமை! சித்திரவதை கொலை முயற்சி

 we found that there were some foreign objects like candle and a 200ml bottle of hair oil inside her body," Bansal said, adding they were not giving her food as she had infection in her stomach also.
டில்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மிகவும் மோசமான சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் . அவரது உறுப்புக்குள் இருந்து சிறு போத்தல் மெழுகு திரி மற்றும் ஏதோ ஒரு வகை எண்ணெய் போன்றவையும் இருந்து படிப்படியாக நீக்கப்பட்டுள்ளது , மேலும் அவர் போஷாக்கு குறைந்தவராக சுமார் இருபது கிலோ எடை உள்ளாவராகவே உள்ளார் .
அந்த சிறுமி இறந்து விடுவார் என்றே தான் கருதியதாக குற்றவாளி மனோஜ்குமார் தெரிவித்ததில் இருந்து தெரியவருவதாவது இது ஒரு கொலை முயற்சி என்றே கருதவேண்டி உள்ளது
குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்றே பலரும் கேட்கின்றனர்,
மேலும் இந்த கொடிய குற்றத்திற்கு வெறும் இரண்டாயிராம் ரூபாயோடு சமாளிக்க பார்த்த போலீசுக்கும் கடும் தண்டனை அளிக்கவேண்டும்
The horrific incident, which took place in east Delhi's Gandhi Nagar area, sparked protests during which assistant commissioner of police BS Ahlwat slapped a girl protester which left her with a bleeding ear.

திமுகவை நினைச்சு தனக்கு தானே ஆப்பு வைத்த காங்கிரஸ் ! சாக்கோ ராசாவுக்கு சால்ஜாப்பு


திமுகாவை தொலைக்கிறேன் பேர்வழி என்று புறப்பட்ட கழுத்தறுப்பு காங்கிரஸ் ,  வரலாறு காணாத ஊழல் என்று மெகா விளம்பரம் கொடுத்து அனைத்து இந்தியாவிலும் ரிலீஸ் செய்த 2 ஜி அலைகற்று விஸ்வரூபம் கடைசியில் காங்கிரசை தமிழ்நாட்டில் அடியோடு துடைத்து எறிந்ததுதான் மிச்சம் . இதை  ரொம்பவும் லேட்டாக புரிந்து கொண்டு  இப்போது எப்படி அதை கைகழுவுவது என்று தெரியாமல் ராசாவின் தலைமேல் போட்டு உடைக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறது  மத்திய அரசு ,
புதுடெல்லி: 2 ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்
குழு முன்பு ஆஜராகி விளக்கமளிக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை ஏன் அழைக்கவில்லை என்பது குறித்து கூட்டுக் குழுத் தலைவர் பி.சி. சாக்கோ விளக்கம் அளித்துள்ளார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க, தனக்கு அனுமதி அளிக்கும்படி முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தலைவர் சாக்கோவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக ராசாவுக்கு சாக்கோ, எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆ.ராசாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்ற கூட்டு குழு உறுப்பினர்களின் கருத்துப்படியே முடிவு எடுக்கப்பட்டதாக சாக்கோ தெரிவித்துள்ளார். கூட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் சிலர் மட்டுமே ராசாவை விசாரணைக்கு அழைக்க ஆதரவு தெரிவித்ததாகவும், பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றும் சாக்கோ விளக்கியுள்ளார். பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுப்படியே, ஆ.ராசாவை நேரில் அழைக்கவில்லை என்றும், இந்த விஷயத்தில் நாடாளுமன்ற குழுக்களின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் ராசாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சாக்கோ குறிப்பிட்டுள்ளார்.< கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகளின் படியே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை உறுதியுடன் தெரிவிப்பதாகவும் சாக்கோ கூறியுள்ளார்

மோடி எதிர்ப்பாளர்கள் இப்போது தூக்கிப் பிடிப்பது நிதீஷ் குமாரை

நரேந்திர மோதி எதிர்ப்பாளர்கள் இப்போது தூக்கிப் பிடிப்பது நிதீஷ் குமாரை. குஜராத் மாடலுக்கு மாற்றாக ஏதோ பிகார் மாடல் என்று ஒன்று கண்டுபிடித்திருப்பதாக அவரும் சொல்கிறார், பிறரும் சொல்கிறார்கள். ஆனால் கண்ணுக்குத்தான் ஒன்றும் தெரியமாட்டேன் என்கிறது.
மோதி, குஜராத்தின் பெருமை என்பதை முன்வைக்கிறார். யார் தயவும் இன்றி தன் நிதிநிலைக்கு உள்ளாகவே, தானாகவே தன் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவருவேன், ஏற்கெனவே பெருமளவு கொண்டுவந்துள்ளேன் என்கிறார். மாறாக, நிதீஷ் குமார் முன்வைப்பது பெரும் யாசகச் சட்டியை. மத்திய அரசு நிதியுதவி அளிக்கவேண்டும் என்று ஏந்துகிறார். பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படவேண்டும் என்கிறார். உடனே ஒடிசா அடுத்து திருவோட்டைப் பெருமையுடன் ஏந்த ஒட்டுமொத்தமாக மாநில சட்டமன்றமே முன்வருகிறது. தீர்மானம் ஒன்றை இயற்றுகிறது.
இந்தக் கேடுகெட்ட சிறுமைக்கு மாற்றாக மோதி முன்வைப்பது பெருமையை. நம் பிரச்னைகளை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற பெருமித உணர்வை. அப்படித்தான் ஒரு காலத்தில் தன்னிறைவு பெற்ற அமைப்புகளாக நாம் இருந்தோம். இப்போதோ சோஷலிசச் சித்தாந்தத்தின் திருகுதாள வடிவமான ‘எனக்கு வேண்டும் entitilements, ஏனெனில் நான்தான் அதிகம் பாதிக்கப்பட்டவன்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். கையேந்து, கையேந்து, இன்னும் அதிகமாகக் கையேந்து.

பாமக விழாவில் அகிலேஷ் யாதவ்! ராமதாஸ், அன்புமணி வரவேற்பு!

சென்னை மகாபலிபுரத்தில் வன்னியர்கள் கூடும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழன்) நடக்கிறது. ஜெ.குரு எம்.எல்.ஏ. தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் உத்திரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ்சிங் யாதவ் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் அவரது வருகையில் மாற்றம் செய்யப்பட்டது. முன் கூட்டியே அதாவது இன்று (22-ந்தேதி) சென்னை வந்தார்.
காலை 9 மணியளவில் சென்னை வந்த அகிலேஷ் சிங் யாதவுக்கு விமான நிலையத்தில் பா.ம.க. சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் நேராக தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு வன்னியர் இளைஞர் சங்க மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வு நடைப்பயணம்


 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், நேசனல் புக் டிரஸ்ட் இந்தியாவும் இணைந்து, புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் 21.4.2013 காலை 7 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

உழைப்பாளர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்ற நடைப்பயணத்தை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சென்னை புத்தகச் சங்கமம் நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வரும் சென்னை புத்தகச் சங்கமத்தின் மாபெரும் புத்தகக் கண்காட்சியையொட்டி இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மக்கள் வரிப்பணத்தில் அம்பானிகளுக்கு z பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி: தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து, ரிலையன்ஸ் நிறுவன
தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் அலுவலகத்துக்கு, இந்தியன் முஜாகிதீன் அமைப்பிடம் இருந்து சமீபத்தில் மிரட்டல் கடிதங்கள் வந்தன. இது குறித்து மும்பை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு மும்பை அல்டா மவுன்ட் ரோட்டில் உள்ள முகேஷ் அம்பானியின் நவீன அடுக்கு மாடி மாளிகைக்கு(அன்டிலியா) உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் முகேஷ் அம்பானிக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு ஏஜன்சி, உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. இதை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை(சிஆர்பிஎப்) பட்டாலியனிலிருந்து 28 போலீசார் கொண்ட குழுவினர், முகேஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர் மும்பை மற்றும் நாட்டின் இதர பகுதிகளுக்கு செல்லும் போது மத்திய ஆயதப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவர். இசட் பிரிவு பாதுகாப்பின் கீழ் முகேஷ் அம்பானி செல்லும் வாகனத்துக்கு முன்பு பைலட் வாகனமும், பின்னால் நவீன ஆயுதங்கள் ஏந்திய கமாண்டோக்களின் வாகனமும் செல்லும்.

சிறுமியை கற்பழித்தவன் ஏற்கனவே மனைவியையும் கற்பழிதே திருமணம் செய்து கொண்டவனாம்

டெல்லியில் 5 வயது சிறுமியை கற்பழித்த  வயது கொடூர இளைஞன்
ஏற்கனவே தனது மனையையும் திருமணத்திற்கு முன்பே கற்பழித்தவனாம்
பின்பு அந்த அபலை பெண் பீகார் சிட்கௌன கிராமத்து பஞ்சாயத்தில் முறையிட்டாள் .
அந்த கூறுகெட்ட பஞ்சாயத்து அந்த கொடியவனையே திருமணம் செய்யுமாறு
இருவரையும் சேர்த்து வைத்தது , கலாசாரம் பாதுகாக்க படவேண்டும் என்ற அறிவுரையோடு இந்த கொடுமையை அரங்கேற்றி அந்த காம கொடுரனின் வேட்டைக்கு ஒரு சமுக மரியாதையும் கொடுத்தது ,
இன்னும் சொல்லப்போனால் அவனை ஒரு ஹீரோ ஸ்தானத்திற்கு அந்த ஆணாதிக்க சமுகம் உயர்த்தி வைத்தது,
மனோஜ்குமார என்ற கொடியவனை தற்போது இந்த கற்பழிக்கப்பட்டு அதன் மூலம் மனைவி என்ற தண்டனையை பெற்ற அவனது மனைவி அவனை விடுதலை செய்ய சொல்லி போலீசிடம் கேட்கிறாளாம்
ஆனால் பஞ்சாயத்து பெருசுகளோ அவனை தூக்கில் போடு மாறு சொல்கிறார்களாம் . கூடவே அந்த பஞ்சாயத்துக்களையும் கொஞ்ச நாள் திகாரில் போட்டால் தேவல .

5 வயது சிறுமியின் வாழ்வுக்கு 2௦௦௦ ரூபாய் விலைபேசிய டெல்லி போலீஸ்


ஐந்து வயது சிறுமியைப் பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கிய பிகார் இளைஞரை தில்லி போலீஸôர் கைது செய்த பின்னரும்கூட, மக்கள் மனக்கொதிப்புடன் தில்லி காவல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடக் காரணம், இந்த வழக்கில் காவல்துறை காட்டிய மெத்தனப் போக்கும், அந்தச் சிறுமியின் காயங்களில் வெளிப்படும் மனித வக்கிரமும்தான். சட்டத்திற்கு காவலாக இருக்காமல் காவல்துறையினர் தாங்களே சட்டாம்பிள்ளைகளாக மாறிவிடுவதுதான் இந்த மெத்தனப் போக்கிற்கு அடிப்படை. ஆனால், இதுகுறித்துக் கடந்த பதின்ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும், காவல்துறையைச்  சீரமைக்கும் நடவடிக்கைகள் பெயரளவுக்கே நடைபெற்று வருகின்றன. உணர்வூட்டும் (சென்சிடைஸ்) பயிற்சிகளும் பெயரளவிலேயே நடக்கின்றன. ஒரு திருட்டு வழக்கைப் பதிவு செய்வதைப் போலவே, ஒரு சிறுமி காணாமல் போனதையும் காவல்துறை அணுகுகின்றது என்பதுதான் பல தரப்பிலிருந்தும் எழுகின்ற புகார். இதையும்கூட நுட்பமாகப் பார்த்தால், காவல்துறை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் மட்டுமே இத்தகைய மெத்தனத்தைக் காட்டுகின்றது என்பது தெளிவு.

ஸ்டாலின் கட்சியை கைப்பற்ற அடாவடி முயற்சி ! கலைஞர் கடும் கோபம்?

அதிருப்தியில் கருணாநிதி? திமுகவின் அடுத்த தலைவராக மு.க. ஸ்டாலினை முன்மொழிவேன் என்று அறிவித்தாலும் அண்மைக்காலமாக ஸ்டாலின் அதிரடியாக எடுத்து வரும் முடிவுகளை கருணாநிதி விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.மு.க.ஸ்டாலினை தலைவராக வழிமொழிவேன் என்று கருணாநிதி அறிவித்தார்;ஆனால் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத குஷ்பு இதை எதிர்த்து பேட்டி கொடுத்தார். அப்போதே ஸ்டாலின் உக்கிரம் காட்டினார். இதனால் குஷ்புவும் அவரது வீடும் தாக்குதலுக்குள்ளானது. குஷ்புவுக்கு எதிராக செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாநிதி எச்சரித்தார். ஆனால் இதை ஸ்டாலின் தடுத்துவிட்டார்.இதைத் தொடர்ந்து கனிமொழி திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் தனியே கூட்டம் நடத்த முயற்சித்தார். கனிமொழியின் தனி ஆவர்த்தனத்தை ஸ்டாலின் ரசிக்கவில்லை. இதனால் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ரத்து ஆனது. இதைத் தொடர்ந்து மதுரைக்குப் போன கனிமொழி, அண்ணன் மு.க. அழகிரியுடன் கரம் கோர்த்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் மதுரைக்கு சென்றார் மு.க. ஸ்டாலின். அப்போது அழகிரியை நேரில் சந்தித்துப் பேசுமாறு கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் இதை ஸ்டாலின் விரும்பாமல் மதுரையில் ஹோட்டல் அறை புக் செய்யப்பட்டிருந்தும் அதை ரத்து செய்துவிட்டு ராமநாதபுரம் போனார். அதே
போல் ஸ்டாலினுடன் தாம் பேச விரும்பவில்லை என்பதை வெளிக்காட்டும் விதமாக அழகிரியும் வழக்கத்துக்கு மாறாக அன்றைய தினம் வீட்டில் இல்லாமல் திடீரென கட்சி நிர்வாகிகளை சந்திக்கக் கிளம்பிவிட்டார். இருப்பினும் தாம் நினைத்தபடி அழகிரியை ஸ்டாலின் சந்தித்து பேசவில்லை என்கிற வருத்தம் கருணாநிதிக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.இதேபோல் இலங்கைத் தமிழர் பிரச்சனையை முன்வைத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்து திமுக வெளியேறியதற்கும் ஸ்டாலின் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று கூறப்பட்டது. இதன் பின்னர் அண்மைக்காலமாக காங்கிரஸுடன் கூட்டணியே இல்லை என்று அதிரடியாக ஸ்டாலின் பொதுக்கூட்டங்களில் பேசிவருகிறார். ஆனால் இதை கருணாநிதி விரும்பவில்லை என்கின்றன அறிவாலய வட்டாரங்கள். தேமுதிக அல்லது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தாக வேண்டிய நிலையில் திமுக இருக்கிறது. லோக்சபா தேர்தல் நேரத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை விஸ்வரூபமெடுக்காமல் போனால் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம்.. ஆனால் இதை தடுக்கும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று கருணாநிதி வருத்தப்பட்டதாகவும் அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உள்மோதலின் உச்சகட்டமாகத்தான் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூடடும் அரசின் முடிவில் ஸ்டாலினும் கருணாநிதியும் இருவேறு நிலை எடுத்தாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. சட்டசபையில் எம்.ஜி.ஆர். பெயரை சூட்டும் அரசின் தீர்மானத்தை திமுக ஆதரித்தது. ஆனால் காமராஜர் பெயர் இருட்டடிப்பு செய்யப்படும்.. இதனால் நாடார்கள் வாக்கு நமக்கு கிடைக்காமல் போய்விடும் என்று கருணாநிதியிடம் கனிமொழி கொந்தளித்திருக்கிறார்.. இதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி சட்டசபையில் திமுக மேற்கொண்ட முடிவுக்கு மாறாக எம்.ஜி.ஆர். பெயரை சூட்டினால் குழப்பம் வரும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். மு.க.ஸ்டாலினனின் விஸ்வரூபத்தை தாம் விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தவே இப்படி ஒரு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள். இந்த அதிருப்தியின் அடுத்த கட்டமாக திமுகவில் என்ன பிரளயம் உருவாகப்போகிறதோ என்று வருத்தத்தில் இருக்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்! எந்த வித பகுத்தறிவு திராவிட கொள்கைகளும் அற்று வெறும் ஜால்ராக்களை வைத்து காங்கிரஸ் அல்லது அதிமுக பாணியிலேயே அரசியல் நடத்தி வரும் ஸ்டாலின் தமிழகத்தின் இன்னுமொரு போதாத காலம்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

முக்தா சீனிவாசன் :நான் ஒரு பார்ப்பான் சில ஆண்டுகள்போனால் எல்லாமே மாறிவிடும்”

ரஞ்சித்போஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மடிசார் மாமி.
இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.>இசைவெளியீட்டு விழாவில் பேசிய முக்தா சீனிவாசன் “நான் ஒரு பார்ப்பான். என் பெண்ணுக்கே மடிசார் கட்டத் தெரியாது. இப்போது இருக்கும் எந்த பெண்ணுக்கும் மடிசார் கட்ட தெரிவது இல்லை. சரி மடிசார் கட்டி வெளியில் சென்று வருவதற்கு கஷ்டமாக இருக்கும் என்றால் வீட்டு நிகழ்ச்சிகளில்&உலகம் மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள்போனால் நம்மை சுற்றி இருப்பது எல்லாமே மாறிவிடும்” என்று பேசினார்.

டெல்லியில் போலிசுக்கு எதிராக வெடித்த போராட்டம் 5 சிறுமி பாலியல் பலாத்காரம் 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்து போலீசார் பேரம் பேசினர்.

ஐந்து வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், டில்லி மக்கள் கொந்தளித்துள்ளனர். மீண்டும் வீதியில் இறங்கி, போராட துவங்கியுள்ளனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை, நேற்று முற்றுகையிட்ட அவர்கள், போலீசாரை நோக்கி, வளையல்களையும், ரூபாய் நோட்டுகளையும் வீசி எறிந்து, தங்களின் கோபத்தையும், ஆவேசத்தை காட்டியதால், பெரும் பரபரப்பு உருவானது.கடந்த டிசம்பரில், டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம், நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. டில்லி நகரத்தையே உலுக்கும் வகையில், மிகப் பெரிய போராட்டங்களும் நடைபெற்றன.இந்நிலையில், டில்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள, காந்தி நகரில், ஐந்து வயது சிறுமி, கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். பலத்த காயங்களுடன் அந்தச் சிறுமி, மருத்துவமனையில், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதால், இந்த விவகாரம், டில்லியை ஆட்டிப் படைக்கத் துவங்கியுள்ளது.நேற்று காலை, 11:00 மணியளவில், டில்லி, ஐ.டி.ஓ., பகுதியிலுள்ள போலீஸ் கமிஷனர் தலைமை அலுவலகம் முன், ஏராளமானோர் கூடினர். அதிகளவில் தடுப்புகளை வைத்து, அரண்கள் ஏற்படுத்தி இருந்தாலும், நேரம் ஆக ஆக, பொதுமக்களின் எண்ணிக்கை கூடியது. இதனால், அந்தப் பகுதி முழுவதும், போராட்டக்காரர்கள் வசம் வந்தது. சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்கள், மிகுந்த கோபத்தில் இருந்தனர். போலீசாரை நோக்கி, வளையல்களையும், ரூபாய் நோட்டுகளையும் வீசி எறிந்தனர். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து, முதலில் போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்த பெற்றோரிடம், 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்து, இந்த விஷயத்தை அப்படியே விட்டு விடும்படி, போலீசார் பேரம் பேசினர்.

டெல்லி 5 வயது சிறுமி பலாத்காரத்தில் கும்பல் தொடர்பு அம்பலம்

டெல்லியில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக கைது
செய்யப்பட்ட வாலிபரின் நண்பரை தேடி போலீசார் பீகார் விரைந்துள்ளனர். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி பல இடங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.கிழக்கு டெல்லி காந்தி நகரை சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 15ம் தேதி திடீரென காணாமல் போனாள். அவளை காணவில்லை என போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம், வீட்டின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள அறையில் சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறையில் தங்கியிருந்த மனோஜ் குமார் என்ற 22 வயது வாலிபர், சிறுமியை கடத்தி அவளை கொடூரமாக பலாத்காரம் செய்து வந்தது தெரிய வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

தமிழ்நாட்டின் உண்மையான வரலாற்று பதிவு : நக்கீரன் -25’ ஆவணப்பட வெளியீட்டு



நக்கீரன்… இது வெறும் பெயரல்ல. 25 ஆண்டுகால தமிழகத்தின் வரலாறு என்ற முன்மொழிவுடன் வெளியி டப்பட்டிருக்கிறது நக்கீரன்25 என்ற ஆவணப்படம். ஒன்றரை மணிநேரம் அளவிலான இந்த ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, நக்கீரன் தனது 25ஆவது ஆண்டை நிறைவு செய்யும் நாளான 20-4-2103 அன்று சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோ அரங்கில் வெளியிடப்பட்டது. 
ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு இந்த ஆவணப்பட குறுந்தகட்டை வெளியிட, எழுத்தாளரும் பேச்சாளருமான திருச்சி செல்வேந்திரன் பெற்றுக்கொண்டார். கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணன், கவிஞர் மனுஷ் யபுத்திரன், கவிஞர்  தமிழச்சி தங்கபாண்டியன், பத்திரிகையாளர் இரா.ஜவஹர், வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆவணப்படத்தை எழுதி-இயக்கிய இரா.வி.பிரபாவதி (நக்கீரன் ஆசிரியரின் மகள்) மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் விழா மேடையில் சிறப்பு செய்யப்பட்டனர்.

ஸ்டாலின் மீது கலைஞர் கடும் அதிருப்தி ! காங்கிரஸ் இல்லையேல் bjp யுடனா கூட்டணி வைக்க முடியும் ?

 எப்படியாவது கட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதே அவரது செயல்பாடுகள்.. ஸ்டாலினிடம் எந்த ஒரு தனிப்பட்ட திறமையும் இல்லை கட்சியை அவர் வழிநடத்துவார் என்பதெல்லாம் ஓர் மாயையே.
  கொள்கை பேசும் கட்சிக்காரர்களையே ஓரங்கட்டி, திமுகவில் சுயநலப் பேர்வழிகளைக் கொண்டு கோஷ்டி அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலினால் இன்றையக் கூட்டணி அரசியலில் அனைவரையும் அரவணைத்து செல்ல உரிய தகுதியை வளர்த்துக் கொள்ள இயலவே இயலாது ... எந்தப் பிரச்சனையிலும் உடனுக்குடன் முடிவெடுக்கும் ஆற்றலும், சமயோசித புத்தியும் கிடையாது ... அவர்கள் கட்சிக் கொள்கைகளிலேயே அவருக்கு முழுமையான தெளிவு கிடையாது ... வைகோவை எதிர்த்து அரசியல் செய்து ஸ்டாலின் தோற்று ... ஸ்டாலின் வைகோ பிரச்னையை கருணா வைகோ பிரச்சனையாக கருணா மாற்றியதால் தான் வைகோவை வெளியேற்றிவிட்டு ஸ்டாலின் தமிழ் நாடு முழுவதும் சுற்ற முடிகிறது ... எனவே கருணாநிதி இல்லையேல் அரசியலில் ஸ்டாலினுக்கு இறங்குமுகம் நிச்சயம் ...
தன்னிச்சையாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளும், அவரது பேச்சும், கட்சிக்கு சாதகமாக அமையாமல், பாதகத்தை உருவாக்குவதால், அவர் மீது, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சமீபத்தில் மதுரைக்கு சென்ற ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேச வேண்டும் என, கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்காமல், அழகிரியை சந்திக்காமல், மதுரை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பினார்.தன் பேச்சை ஸ்டாலின் கேட்கவில்லை என்ற ஆதங்கம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என, ஸ்டாலின் பேசியதும், கருணாநிதிக்கு கூடுதல் அதிருப்தியை அளித்துள்ளது. காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால், பா.ஜ.,வுடன் - தி.மு.க., கூட்டணி வைக்க முடியுமா? எதற்காக ஸ்டாலின் இப்படி பேச வேண்டும்.

போட்டு உடைக்கிறார் ராஜா: பிரதமரின் ஆலோசனை படியே எல்லாம் நடந்தது

மந்திரிசபை கேபினெட் முடிவை செயல்படுத்தியதற்காக வருடக்கணக்கில் சிறையில் வைக்கப்பட்ட ஒருவர் தன் தரப்பு நியாயத்தை சொல்வதற்கு அனுமதி கேட்பது நியாமான கோரிக்கைதானே?. குற்றம் சாட்டப்பட்டவர் ராஜா... அவர் தரப்பு நியாயத்தை சொல்ல வந்தால் ஏன் மறுக்கவேண்டும்? இது சாதாரண வழக்கல்ல. அப்படி இருக்க எப்படி ராஜா வின் சாட்சியை ஒதுக்க முடியும்... அப்படி என்றால் தீர்ப்பு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதா? அப்படி ராஜாவிற்கு சாட்சியம் அளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு, கேபினட்டிற்குத் தலைமை தாங்கிய பிரதமர் மன்மோகன்சிங்கும், இந்த முடிவில் முக்கிய பங்கு வகித்த, நிதி அமைச்சர் சிதம்பரமும், கூட்டுக்குழு முன் ஆஜராகாத நிலையில், ஜே.பி.சி யின் இந்த அறிக்கை பழி முழுவதையும் ராஜா மீது போட்டு காங்கிரஸ் கட்சியைக் காப்பற்றவே முயன்றுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
புதுடில்லி : 2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரிந்தே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரின் ஆலோசனைபடியே அனைத்தும் நடந்ததாகவும் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அ.ராஜா பகிரங்க தகவல் ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார். ராஜா குற்றச்சாட்டு : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் எந்த தவறும் செய்யவில்லை என ஜெ.பி.சி., அறிக்கை சமர்பித்த சில நாட்களே ஆன நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் ராஜா பிரதமர் மீது கூறி உள்ள குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தி உள்ளது. 2ஜி வழக்கில் பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் தவறான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும், தொலைத்தொடர்பு உரிமம் ஒதுக்கீட்டில் பிரதமரின் கீழ் தான் நான் பணியாற்றி உள்ளேன் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது எனவும் ராஜா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமரின் ஆலோசனையின்படியே தான் செயல்பட்டதாகவும், இதை அனைவரிடமும் தான் தெரிவித்துள்ளதாகவும் ராஜா தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து மபியிலும் 5 வாயது சிறுமி பாலியல் பலாத்காரம்

 A five-year-old girl was allegedly raped in Ghansour town near Madhya Pradesh by a youth, police said on Saturday.
According to police, the accused, identified as Firoz Khan (35) who works in a private power சியோனி, (ம.பி.,):டில்லியில், ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்திலும், ஐந்து வயது சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியிருக்கிறாள்.சியோனி மாவட்டம், கான்சோர் நகரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த, 17ம் தேதி சிறுமிக்கு, சாக்லேட் கொடுத்து, தனியாக அழைத்துச் சென்ற, பிரோஸ்கான் என்ற, 35 வயது நபர், அவளை பலாத்காரம் செய்துள்ளான். உணர்வற்ற நிலையில், பண்ணை ஒன்றில் கிடந்த சிறுமியை, அவள் பெற்றோர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியின் நிலை, கவலைக்கிடமாக உள்ளது.சிறுமியை பலாத்காரம் செய்த, பிரோஸ்கானை, கைது செய்யக் கோரி, நேற்று கான்சோர் நகரில், "பந்த்' அனுசரிக்கப்பட்டது. இருந்தாலும், இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை

Time உலக பிரபலங்கள் பட்டியலில் அமிர்கான் சிதம்பரம் மலாலா

Aamir Khan Time Magazine CoverAamir has been chosen for using his influence to raise social awareness in India. In a world of false diplomacy and evasiveness, Aamir is a straightforward man. He uses his gifts as a charmer to give his audience the most bitter medicine. Hypnotized, we take it without complaint.”
Aamir has started a movement that will help change the world in which Indians live.
அமெரிக்கா டைம் இதழ் தேர்வு செய்துள்ள 2013 ம் ஆண்டின் நூறு பிரபலங்கள் பட்டியலில் இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாலிவுட் நடிகர் அமீர்கான் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. டைம் வெளியிட்டுள்ள பட்டியலில் அதிபர் ஒபாமாவிற்கு 8 வது இடமும், அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் இந்த முறை இடம் பெற்றுள்ளார்.< பாகிஸ்தானின் மலாலா பெண்களின் கல்விக்காக போரடி தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழை த்த மலாலாவின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.