சனி, 14 ஜனவரி, 2017

பீட்டாவுக்கு குஷ்பூ சாட்டை : மடகாஸ்கர் ஜல்லிகட்டை உங்களால் தடுக்க முடிந்ததா?

சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடிகை குஷ்பூவுக்கு அறிவுரை சொல்லும் விதத்தில் டிவிட்டரில் கருத்திட்ட 'பீட்டா' அமைப்புக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தடை காரணமாக ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் 'பீட்டா' அமைப்புக்கு எதிராக, 'மடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் உள்ளது. இந்த விஷயம் எல்லாம் 'பீட்டா' அமைப்புக்கு தெரியாதே என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு நேரடியாக குஷ்புவுக்கு டிவிட்டரில் பதிலளிக்கும் விதமாக 'பீட்டா' அமைப்பு ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தது. ஜல்லிக்கட்டு காளைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஒரு வீடியோ லிங்கை குஷ்புவுக்கு அனுப்பி, இவ்வாறெல்லாம் காளைகள் துன்புறுத்தப்படுவைத்தால்தான் இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்டவிரோதமானது என்று கூறியது.

சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு வீரவணக்கம் .... தமிழக ஜனநாயக உரிமைக்காக பதவி துறந்த முன்னாள் ஆளுநர்!

தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார். பஞ்சாப் மாநில முதல்வரராக இருந்தவர் சுர்ஜித் சிங் பர்னாலா. இவர் தமிழகத்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். 1990-1991  காலப்பகுதியில் இவர் ஆளுநராக இருந்த போது திமுக ஆட்சியை கலைப்பதற்கு  பிரதமர் சந்திரசேகர் ,மத்திய் சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சாமி போன்றோர்திமுக அரசு விடுதலை புலிகளுக்கு ஆதரவு கொடுப்பதாகவும் அதனால்  சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக அறிக்கை தருமாறு பர்னாலாவை  நெருக்கினார்கள் ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்த வேண்டிய நிர்பந்தத்தால் அவர்கள் அன்று அப்படி நடந்து கொண்டார்கள். அதன் பின் பர்னாலாவை அவர்கள் சண்டிகாருக்கு மாற்றினார்கள் .
அதை ஏற்க மறுத்து அவர் ராஜினாமா செய்தார் .
அச்சம்பவத்தின் பின்பு சட்டசபையில்  கலைஞர் பட்ஜெட்டை தாக்கல் செய்த பொழுது அதை அவர் வாசிக்க விடாமல்  பறித்து கிழித்தெறிந்து அடிதடி கலவரத்தில் அதிமுகவினர் ஈடுபட திமுகவினரும் பதிலடி கொடுக்க ஜெயலலிதாவின் துணியை பிடித்து இழுத்தார்கள் என்று ஜெயலலிதா  ஒரு திரௌபதி நாடகத்தை அரங்கேற்றினார். ஜெயலலிதாவோடு சேர்ந்து நாடகம் நடத்திய  திருநாவுக்கரசு கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் போன்றோர் பிற்காலத்தில் இதற்காக மனம் வருந்தி கலைஞரிடம்  பாவமன்னிப்பு கோரியது வரலாறு. 
 சு.சாமியும் ஜெயலலிதா விரும்பிய படி ஆட்சியை கவிழ்த்தார்கள் . அதன் பின் நடந்த தேர்தலில் ராஜிவ்காந்தி இறந்து விட அந்த பழியையும் திமுகவின் மேல் போட்டு ஜெயலலிதா வெற்றிபெற்றார் எந்த விடுதலை புலிகளுக்கு ஆதரவு கொடுத்ததால் திமுக ஆட்சியை பறி கொடுத்ததோ அதே புலிகளுக்கு திமுக ஆதரவே கொடுப்பதில்லை ஜெயலலிதாதான் ஈழத்தாய் என்று வைகோ நெடுமா சீமான் பாண்டியன் போன்றோர் சதா புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது தெரிந்ததே.

மோடியின் பயணசெலவு விபரங்களை தரமுடியாது .. ஏன் மசாஜ் பார்லர் போனாரா?

புதுடில்லி:'பிரதமரின் பயண செலவு குறித்த விபரங்கள், பாதுகாப்பு தொடர்பானவை என்பதால், அதை வெளியிட முடியாது' என, மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமரின் வெளிநாட்டுப் பயணச் செலவு விபரங்களைக் கேட்டு, பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றிடம், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்தார்.ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  இதுவரை வந்த பிரதமர்களி்ல் இவர்தான் சிக்கனமா செலவு செய்யிறாரா? எப்படி இந்த பத்து லட்ச ரூபாயில தங்க நூல் கோட்டு போட்டாரே அப்போதிலிருந்தா? விமானத்துலையே ஓய்வு எடுக்கிறாரா? எவன் வீட்டு காசுல அவரு சுத்துறாரு ? அரசு காசுல சுத்துறது தானே? அரசுக்கு பணம் வருவது வரியால் தானே? அந்த வரியை செலுத்துவது மக்கள் தானே அப்புறம் அவன் கேள்வி கேட்காமல் எவன் கேட்பான். நாடு நாடா சுத்துறது எதுக்கு, இப்ப இவரு நாடுநாடா சுத்தி என்ன கிழிச்சி கொண்டு வந்தார். நாடு நாடா போயி வயலின் வாசிக்கிறது, புல்லட் ரயிலில் ஊர் சுத்துறது, அம்பு விட்டு விளையாடுறது, அதைவிட முக்கியமா செல்பி எடுக்கிறது. இதுதான் மக்களுக்காக உழைக்கிறதா? ஆமா தொழிலதிபர்கள் எதுக்கு போறாங்க அவங்களுக்கும் அரசுக்கும் என்ன சம்மந்தம்? அவர்கள் வெளிநாடுகளில் தொழில் தொடங்க இவரு இடைத்தரகரா போறாரா? மோடிக்கு அதானியும் அம்பானியும் தான் நண்பர்களாக இருப்பார்கள் அப்புறம் ஏழை மக்களா நண்பர்களாக இருப்பார்கள், உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்பது மோடிக்கும் பொருந்தும் அல்லவா? அந்த தீஞ்சிபோன வரப்பிரசாதத்தை நீங்களே முழுங்குங்கள் அடுத்தவங்களை முழுங்க சொல்லாதீர்கள்.

மருத்துவர் ராமதாஸ்: பீட்டாவின் வெறும் மிரட்டலுக்கு பயந்து தடியடியை கட்டவிழ்த்து விடுவதா

Ramadoss condemns lathicharge in Avaniapuram சென்னை: தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன. அந்த வெற்று மிரட்டலுக்கு பயந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் மீது முதலமைச்சர் தடியடியை கட்டவிழ்த்து விட்டாரா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். : தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்சுப்ரமணியன் சுவாமி சமூக வலைதளத்தில் கருத்து.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக் கோரியும் போராட்டம் நடத்திய திரைத்துறையினர் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி கைது செய்துள்ளது. அறவழியில் போராடியவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

நடிகை திரிஷாவிடம் வீரத்தை காட்டிய ஜல்லிகட்டு தமிழர்கள் ... பாஜகா கும்பலிடம் ஏன் வீரத்தை காட்டவில்லை?

தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவதற்கும் நான் தமிழன் என்று சொல்வதற்கும் நீங்கள் வெட்கப்படுங்கள் என த்ரிஷா கூறியுள்ளார். நடிகை த்ரிஷா எயிட்ஸ் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் என நேற்று சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்று வைரலாக பரவியது. இதற்கு நடிகை த்ரிஷா டுவிட்டரில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். ;பீட்டா அமைப்பின் தூதுவராக இருக்கும் நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் என நினைத்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நேற்று காரைக்குடியில் அவர் கலந்துகொண்ட படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் எயிட்ஸ் பாதிக்கப்பட்டி இறந்தார் எனவும் அவரது குடும்பத்தையும் விமர்சித்து போஸ்டர் வெளியிட்டு த்ரிஷாவை சீண்டினர்.
இதனால் கடும் கோபமடைந்த த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தான் எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை அவனியாபுரத்தில் நடிகர்கள் மறியல் போராட்டம்: இயக்குநருக்கு அடி, உதை (படங்கள்)


மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை ஆதரித்து இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இன்று மறியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதில் கலந்து கொள்ள திரைப்பட இயக்குநர் அமீர், நடிகர் ஆர்யா, யுவன்சங்கர்ராஜா மற்றும் நடிகர் கவுதம் ஆகியோர் வந்தனர்.இவர்கள் வந்தவுடன் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் மறியலை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே நடிகர் கவுதம் திடீரென சாலையில் மறியல் செய்தார். அப்போது அவரை கைது செய்த அவனியாபுரம் போலீசார், மற்ற திரைநட்சத்திரங்களை அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதிக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.>கவுதம் மீதும், மறியலில் ஈடுபட்டவர்கள் மீதும் போலுசார் தடியடி நடத்தினர். கவுதம் கைது செய்யப்பட்டு, தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்ள் கூச்சலிட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.>முகில்<>படங்கள்: அண்ணல்நக்கீரன்

மாறன் சகோதரர்களின் ஸ்பைஸ் ஜெட் 205 புதிய விமானங்களை 1.5 லட்சம் கோடியில் வாங்குகிறது


விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் 1.5 லட்சம் கோடி ரூபாயில் 205 புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 35 இந்திய வழித்தடங்கள் மற்றும் 6 சர்வதேச வழித்தடங்களில் தனது விமான சேவையை இயக்கி வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2005ஆம் ஆண்டு, போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 32 B737 மற்றும் 17 Q400 விமானங்களை வாங்கியது. அவை உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இயங்கிவருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்கிவரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது தனது சேவைகளை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. அதன்பொருட்டு மேலும் 205 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. எனவே போயிங் நிறுவனத்திடம் இருந்து ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் 205 புதிய B737 MAX விமானங்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதிய ரக விமானம் 20 சதவிகிதம் வரை எரிபொருள் சிக்கனம் செய்யும் திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.மின்னம்பலம்

தடையை உடைத்துக்கொண்டு பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது

தடையை மீறி ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி சில கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்த அனுமதி அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அந்த தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டதால், ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை தொடர்ந்து நீடிக்கிறது. என்றாலும் இந்த தடையை மீறி நேற்று சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.<>காளைகளை அவிழ்த்து விட்டனர்& மதுரை விளாங்குடி அருகே கரிசல்குளம் கிராமத்தில் கண்மாய் கரை அருகே உள்ள முனியாண்டி கோவில் முன்பு தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப் போவதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர்.

இஸ்லாமிய நாடான மொராக்கோவில் புர்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது


bbc.com பல நாடுகளில் இஸ்லாமியப் பெண்கள் புர்க்கவை அணிகின்றனர்
;அதேபோல் புர்கா தயாரிப்பு மற்றும் இறக்குமதியும் தடை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தடை குறித்த கடிதங்கள் கடந்த திங்கள்கிழமை அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தம்மிடமுள்ள புர்கா அனைத்தையும் 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை அரச தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. அதேசமயம் இந்த முடிவு "பாதுகாப்பு காரணங்களுக்காக" எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனாலும், இப்போது மொராக்கோ புர்காவை முற்றாக தடைசெய்யவுள்ளதா என்பது குறித்து தெளிவாக்கப்படவில்லை; "கொள்ளையர்கள் பிரச்சினை" கொள்ளையர்கள் குற்றச்செயல்களை புரிவதற்கு புர்காக்களை பயன்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உள்ளூர் செய்தி இணையத்திடம் கூறியுள்ளார்.
முகத்தையும் உடலையும் முழுமையாக மறைக்கும் புர்கா, மொராக்கோவில் பரவலாக அணியப்படுவதில்லை. அங்குள்ள பெண்கள் முகத்தை மறைக்காத ஹிஜாபையே விரும்புகின்றனர்.

மடகாஸ்கார் ஜல்லிகட்டு ! குமரிக்கண்டத்தின் மேற்கு கரையில் திராவிடர் கலாசாரம்



வெள்ளி, 13 ஜனவரி, 2017

பணமில்லா வர்த்தகம் : மக்களை நச்சுக் கூண்டுக்குள் தள்ளிய மோடி !

முழுவதும் ரொக்கமற்ற பொருளாதார பரிவர்த்தனையே இந்தியா போன்ற ஏழை நாடுகளில் சாத்தியமில்லை என்பதை வளர்ந்த பணக்கார நாடுகளின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.
ணமதிப்பழிப்பு குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில் அது கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழித்து விடும் என மோடியும் அவரது பக்தர்களும் சொல்லிக் கொண்டனர். நவம்பர் 8 அறிவிப்பிற்கு முன் சுழற்சியில் இருந்த 15.44 லட்சம் கோடியில் சுமார் மூன்றிலிருந்து ஐந்து லட்சம் கோடி வரை திரும்ப வராது என்றனர். அதே போல் சுழற்சியில் இருப்பதாகச் சொல்லப்பட்ட கள்ளப் பணமும் திரும்ப வராது என்றும் பீற்றிக் கொண்டனர்.

கல்லூரியில் ஜியோ விற்கலாம் விவசாயிகளுக்காக பேசக்கூடாதாம் !

black-pongal-propaganda-by-trichy-periyar-evr-college-rsyf (7)“பொங்கல் – கருப்புநாள்”  திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி கிளை, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் பிரச்சாரம்!
வியாழனன்று (12.01.17) காலை திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் நிர்வாகத்தால் பொங்கல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை அறிந்த கல்லூரி பு.மா.இ.மு கிளைத் தோழர்கள் விவசாயிகள் செத்துமடியும் போது பொங்கல் கொண்டாட்டம் நடத்தப்படுவதையும், விவசாயிகளின் இறப்புக்குக் காரணமான கிரிமினல்களின் கூட்டாளியான அரசை அம்பலப்படுத்தும் வகையில் முழக்க பதாகைகளை பிடித்துக் கொண்டு கல்லூரி வாயிலில் மாணவர்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர்.
இதை மோப்பம் பிடித்த போலீசு உடனே அங்கே வந்து தோழர்களிடம் தகராறு செய்தது. அதை எதிர்த்த தோழர்கள் துணிச்சலாக பிரச்சாரத்தை தொடர்ந்தனர். பிரச்சாரத்தை நின்று கவனித்த மாணவர்களை “உள்ள போ! உள்ள போ!” என மிரட்டி அனுப்பியது போலீசும், கல்லூரி நிர்வாகமும்.

விகடன் விருதுகள் .. நடிகைகளுக்கு வேற ரேஞ்சு . இலக்கியவாதிகளுக்கு மகா மட்டரக மரியாதை

விகடன் விருதுகள் கவனம் குவிப்பவை. பல்வேறு தரப்பினரையும் தம்மை நோக்கி ஈர்க்கச் செய்பவை. இந்த வருடமும் விருது அறிவித்திருக்கிறார்கள். வெய்யில், சோ.தர்மன், இமையம், பிரேம் என முக்கியமானவர்கள் விருது வாங்கியிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள். எழுதுகிற அத்தனை பேருக்கும் விருது தருவது சாத்தியமில்லை. ஒருவருக்குக் கொடுத்தால் இன்னொருவருக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கேட்பார்கள். எல்லோரையும் திருப்திப்படுத்த இயலாது. ஆனால் இந்தப் பட்டியலில் எதுவுமே சோடை போகாது என்பதால் தேர்வு குறித்தெல்லாம் விமர்சனம் எதுவுமில்லை. கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த முறை விகடன் விருது வழங்கும் பிரமாண்ட விழாவை நடத்துகிறார்கள். சினிமா விருதுகள் மட்டும் மேடையில் வழங்கப்படுமாம். எழுத்தாளர்களுக்குத் தனியாக வழங்குவார்கள் என்று கேள்விப்பட்டேன். இதைத்தான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. முன்பு கூட ஒரு முறை கோடு காட்டியிருக்கிறேன். கடந்த வருடம் விகடனின் டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவனாக என்னைத் தேர்ந்தெடுத்த போது மிகுந்த சந்தோஷமாக இருந்தது. விருதை வாங்கிக் கொள்ள சென்னை வர முடியுமா என்றார்கள். சொந்தக் காசுதான். மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு நன்றாகத்தானே இருக்கிறேன்? சென்றிருந்தேன். நுங்கம்பாக்கத்தில் ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோவில் வைத்து விருதைக் கொடுத்து படம் எடுத்துக் கொண்டார்கள். அதே வருடம் வேறு பிரிவுகளில் விருது பெற்றிருந்த நயன்தாரா வந்தார். ரம்யா கிருஷ்ணன் வந்தார். அவர்களுக்குக் கிடைத்த மரியாதையே தனிதான்.

Son of Saul படத்தை பார்பதற்கு தைரியம் வேண்டும் .. ஆஸ்கர் விருது பெற்றது .


வே.மதிமாறன் :; All of a Sudden ஜெர்மன் படம். அய்ரோப்பாவின் நவீன சினிமாக்கள் பெரும்பாலும் பாத்ரூம் – பெட்ரூம் – டைனிங் டேபிள் – ரெஸ்டாரண்ட் – அலுவலகம் இதோடு முடிந்துவிடும். இந்தப் படமும் அப்படிதான். குடிப்பது, சாப்பிடுவது, முத்தமிட்டுக் கொள்வது, குளிப்பது, உறவு கொள்வது இவற்றுடன் பேசிக் கொண்டிருப்பதாக இருந்தது.
ஆனால் மாலை பார்த்த ஒரு அய்ரோப்பிய படம், கலங்கடித்தது. SON OF SAUL ஹங்கேரி படம். யூதர்கள் மீது நாஜிகளின் கொடூரங்களைப் பல படங்கள் காட்டியிருக்கின்றன. ஸ்பில்பெர்க்கின் Schindler’s List அதற்காகவே ஆஸ்கர் விருது பெற்றது. ஆனால் SON OF SAUL ஏற்படுத்துகிற அதிர்வும் அழுத்தமும் Schindler’s List டை எங்கோ பின்னுக்குத் தள்ளி விட்டது.
இந்த ஆண்டுச் சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றிருக்கிறது SON OF SAUL.

காதி கலண்டர்களில் காந்திக்கு பதிலாக மோடியின் படம்


மும்பை: தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின்
காலண்டர்கள் மற்றும் டைரிகளில் காந்தியின் படம் நீக்கப்பட்டுள்ளதால் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில் தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில்
பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் டைரி மற்றும் காலண்டர்கள் தரப்படுவது வழக்கம். இந்த டைரி மற்றும் காலண்டரில் காந்தி ராட்டையில் நூல் நூற்கும் படம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த ஆண்டு தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையம் வெளியிட்டுள்ள டைரி மற்றும் காலண்டர்களில் காந்தியின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி நூல் நுற்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று உள்ளது.
காலண்டர்களில் மோடியின் படத்தைக் கண்ட ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனையடுத்து, ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் அறிஞர் ச.வே.சு நினைவு பகிர்வு ! தமிழுக்காக உழைத்தவர்...180 நூல்களை எழுதி உள்ளார்

மிழ் மொழிக்காகவே வாழ்வின் கடைசி காலம் வரையிலும் உழைத்த முதுபெரும் தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் இன்று காலமானார்.
தமிழ் மொழியின் மீதும் தமிழர்கள் மீதும் அளப்பறிய பற்றுக் கொண்டு செயல்பட்டவர்களில் மிக முக்கியமானவர், ச.வே.சுப்பிரமணியன். இலக்கியங்கள் மீது இவருக்கு இருந்த ஆளுமையின் காரணமாக 180 நூல்களை எழுதி உள்ளார். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இவர் புலமை வாய்ந்தவர். அதனால் ஆங்கிலத்தில் 8 நூல்களையும் மலையாளத்தில் ஒரு நூலும் எழுதி உள்ளார்.

விவசாயிகள் தற்கொலை:தேசிய அவமானம் - சகாயம் ஐ.ஏ.எஸ்


minnnambalam.com :பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் தஞ்சை மண்ணில் விவசாயிகள் தற்கொலையால் சோகம் நிலவுகிறது. வறட்சியும் நிலம் வெடித்து பாளம் பாளமாக கிடப்பதுமாக பொங்கலை அனைத்து விவசாயிகளாலும் கொண்டாட முடியாத நிலையில்,
தமிழக விவசாயிகளின் மரணம், தேசிய அவமானமாக கருதப்பட வேண்டும் என்று சகாயம் ஐஏஎஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற விவசாய நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாளை பொங்கள் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக மக்கள் மற்றும் தமிழர்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்கள்.

சுவிஸ் ..இஸ்லாமிய மாணவிகளும் மாணவர்களுடன் ஒன்றாகத்தான் நீச்சல் கற்கவேண்டும் ! நீதிமன்றம் தீர்ப்பு


Switzerland: Court rules Muslim girls must swim with boys, ... has ruled Muslim parents must send their children to mixed swimming lessons.
சுவிட்சர்லாந்து பாடசாலைகளில் மாணவர்களும் மாணவிகளும் ஒன்றாக சேர்ந்து தான் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டியது எல்லா மாணவ மாணவிகளுக்கும் கட்டாய விதியாகவும் இருக்கிறது. இதில் பருவ வயதை எட்டும் வயதில் இருக்கும் மாணவிகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும். ஆனால் இந்த விதியை மீறி சுவிட்சர்லாந்தில் இருக்கும் இரு துருக்கிய முஸ்லிம் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகளை ஆண் மாணவர்களுடன் நீந்த அனுமதிக்க மாட்டோம் என்றும், எங்கள் மத வழக்கப்படி இப்படி செய்ய இயலாது என்றும், இதற்கான சிறப்பு சலுகை எங்களுக்கு இருக்கிறது என்றும், தங்கள் பெண் குழந்தைகளை நீச்சல் பயிற்சிக்கு அனுப்ப மறுத்து விட்டனர். 2010 ம் ஆண்டில் இருந்தே குறிப்பிட்ட குடும்பத்தினருக்கும் பள்ளிக்குமிடையே இது குறித்து சர்ச்சை நடந்து வருகிறது.

தமிழ் இலக்கிய சமூகம் என்னை திட்டமிட்டே நிராகரிக்கிறது”: எழுத்தாளர் சல்மா

தமிழ்ச் இலக்கிய சமூகம் தன்னை திட்டமிட்டே நிராகரிப்பதாக தெரிவிக்கிறார் எழுத்தாளர் சல்மா. சல்மாவின் இரண்டாவது நாவலான மனாமியங்கள், 2016-ஆம் ஆண்டு வெளியானது. அதையொட்டி தி டைம்ஸ் தமிழ் டாட் காம் அவருடன் நேர்காணல் நடத்தியது. அப்போது உலக அளவில் தன்னுடைய எழுத்துகளுக்கு அங்கீகாரங்கள் கிடைத்துவரும் நிலையில், தமிழ் இலக்கிய சமூகம் தன்னை திட்டமிட்டே நிராகரிக்கிறது என்றார். முதல் நாவலான இரண்டாம் ஜாமங்களின் கதை வெளியான போது, பலவித அச்சுறுத்தல்களை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய அரசியல் வாழ்க்கை, உலக எழுத்தாளர்களுடான அனுபவங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
துவரங்குறிச்சியிலிருந்து புறப்பட்டு உலகம் முழுக்கப் பயணப்படுகிறீர்கள். இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
“துவரங்குறிச்சி என்பது சின்ன உலகம். அந்த உலகத்தில் இருக்கிற மற்ற பெண்கள், ஆண்களுக்கு அந்த வாழ்க்கை இப்பவும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

மைசூர் . விளையாட்டாக தூக்குபோட்ட மாணவி மரணம் .. பெற்றோர்கள் முன்னிலையிலேயே நடந்த கொடுமை

மைசூர்: பெற்றோர் கண்முன் விளையாட்டாக தூக்குப்போட்ட மாணவி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் மைசூர் சாலையில் உள்ள பாபுஜி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷின் மகள் கீர்த்தனா (18). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சமீபகாலமாக கீர்த்தனா கல்லூரி முடிந்து தாமதமாக வீட்டிற்கு வந்திருக்கிறார். இதையடுத்து பெற்ரோர் கீர்த்தனாவை கண்டித்தனர். இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா இடத்தில் யார்? - தீபா 31.68%, ஓபிஎஸ் 15.56%, சசிகலா 4.58% - ஜூனியர் விகடன் சர்வே

சென்னை:  சசிகலாவிற்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது? ஜெயலலிதா இடத்தில் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. "முதலமைச்சருக்கான தகுதிகள் சசிகலாவிடம் இருக்கிறது" - மதுசூதனன் பேச்சு
 ஜெயலலிதா இல்லாத தமிழக அரசு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நம்பிக்கையில்லை என்று 51.50 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர். சிறப்பாக செயல்படும் என்று 9.09 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர். தமிழக அரசின் நிர்வாகத்தில் சசிகலா குடும்பத்தினர் தலையீடு இருக்கும் என்று 39.41% பேர் கருத்து கூறியுள்ளனர்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அவரது உடலை சுற்றி சசிகலாவின் உறவினர்களே நின்றிருந்தனர். ஜெயலலிதா இடத்தில் யார் இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு
தீபாவிற்கு ஆதரவாக 31.68% அதாவது 4,222 பேர் கருத்து பதிவிட்டுள்ளனர். சசிகலாவிற்கு ஆதரவாக 4.58% மொத்தம் 610 பேர் கருத்து கூறியுள்ளனர். ஜெயலலிதா இடத்தில் ஓபிஎஸ் பொருத்தமானவர் என்று 2,074 பேர் அதாவது 15.56% பேர் கருத்து கூறியுள்ளனர்.
மற்றவர்கள் என்று 46.16% அதாவது 6,419 பேர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.tamiloneindia

ஜல்லிகட்டு ...தடையை மீறுவோம் : ஸ்டாலின் தகவல்

சென்னை:''ஜல்லிக்கட்டு நடத்த, அவசர சட்டம் நிறைவேற்றா விட்டால், தடையை மீறி, ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஆலோசிப் போம்,'' என, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
 உச்சநீதிமன்ற தடையால், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு, ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக, மத்திய அரசு அவசர சட்டம் அமல் படுத்த வேண்டும் எனகோரி,தமிழகம் முழுவதும்,போராட்டங்கள் நடந்து வருகின்றன.    எந்தவித அசம்பாவிதமும் இன்றி, வரைமுறைகளை வகுத்து, ஜல்லிக்கட்டு தடையை மீறி, நடத்துவது தவறில்லை. சுப்ரிம் கோர்ட்டின் பேச்சை கேட்க தேவை இல்லை என்று பலமுறை கர்நாடகா நமக்கு எடுத்து காட்டி உள்ளது. இந்தியாவின் சுப்ரிம் கோர்ட் வடிவேலு கோர்ட்டாக மாறி கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் உடனடியாக ஒரு பொதுத்தேர்தல் நடத்துவதே சரியானது... பேராசிரியர் சுபவீ

அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராகத் திரு சசிகலா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இது ஒன்றும் எதிர்பாராத திருப்பம் இல்லை. ஆனால் அடுத்தடுத்து நாடு என்ன திருப்பங்களை எதிர்கொள்ளப் போகிறது என்பது எண்ணத்தக்கது.
ஒரு கட்சியின் பொறுப்புக்கு யார் தேர்ந்தெடுக்கப்பட்டால் நமக்கென்ன என்பது சரிதான். ஆனால் அ.தி.மு.க. என்பது ஆளும் கட்சியாகவும் இருப்பதால், அதன் பின் விளைவுகள் அந்தக் கட்சியோடு மட்டும் நின்றுவிடாது. அது நாட்டையும் பாதிக்கும். எனவே அது குறித்துக் கவலை கொள்ள நமக்கும் உரிமை உள்ளது. இன்றைய ஆளும் கட்சியின் சட்ட திட்டங்களின்படி, பொதுச் செயலாளர் பதவியே அனைத்து அதிகாரங்களையும் உடையது. எனவே அந்தப் பொறுப்பிற்கு வரும் ஒருவர் அடுத்து தமிழக முதலமைச்சராக வருவதற்கும் வாய்ப்புள்ளது. அவ்வாறில்லை எனினும், முதலமைச்சரையே கட்டுப்படுத்தும் அதிகாரம் அந்தப் பதவிக்கு உள்ளது. ஆதலால் இது கட்சிப் பிரச்சினையன்று, நாட்டின் பிரச்சினை என்பதாக நாம் உள்வாங்கி கொள்ள வேண்டியுள்ளது.

சுப.வீரபாண்டியன் :வங்கிகளில் உள்ள நமது பணம் மல்லையாகளுக்கு எப்படி போய் சேருகிறது.. சிறு விளக்கம்



பன்னீர்செல்வம் : ஜல்லிகட்டு நடக்கும்னு நம்பிக்கையோட இருந்தோம்! ... இவருதான் இப்ப தமிழ்நாட்டு முதலமைச்சர்.. நம்புங்க சார்!

சென்னை: ஜல்லிக்கட்டு நடக்கும் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் இன்னும் சாதகமான பதில் வரவில்லை என முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சென்றார். அங்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து 2.5 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆந்திர சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.  ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி பேசுறதை விட்டுபுட்டு மோடி கிட்ட  பம்முற காரணத்தை முதல்ல சொல்லு ?. ஊழல் வழக்கு  வருமானத்துக்கு அதிகமான சொத்து .. என்ன கேட்டாலும் ஆம் ஆம் . நாட்டையே கூட்டி காட்டி .... வேணாம் வேணாம்

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண்பார்வை கிடைத்தது... பிறவியிலேயே கண்பார்வை இருக்கவில்லை


தனது வசீகர குரலால் ரசிகர்களை ஈர்த்த வைக்கம் விஜயலட்சுமிக்கு கண்பார்வை கிடைத்தது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம். கண் பார்வை இல்லாவிட்டாலும், தனது வசீகர குரலால் ரசிகர்களை ஈர்த்தவர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் சிறந்த வீணை இசைக்கலைஞரும் ஆவார். கேரள மாநிலத்தை சேர்ந்த இவருக்கு வயது 35 ஆகிறது. பார்வை குறைபாடு உள்ள விஜயலட்சுமி, தனது தனித்துவமான குரலுக்காகவும், பாடும் திறனுக்காகவும் பலராலும்  போற்றப்படுபவர். மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பாகுபலி’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட  படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘வீரசிவாஜி’ படத்தில் ‘சொப்பன சுந்தரி’  என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் சாமி : தமிழ்நாட்டு பொறுக்கிகள் மன நோயாளர்கள் Stockholm Syndrome என்கிறார்

தமிழர்கள் பொறுக்கிகளாம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களாம்.
இந்த சொறி நாய்க்கும், அதற்கு இத்தனைத் திமிரை கொடுத்திருக்கும் மோடி அரசுக்கும் நாளைக்கு போகி நடத்தலாம்!  இந்த சு சாமி கேரளாவில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க மறுத்தவர்களை கைது செய்த போது தமிழ்நாட்டில் எப்போதும் இப்படிதான் அவர்கள் பிரிவினைவாதிகள் என்று தமிழ்நாட்டை பற்றி பொய்யாக பிரசாரம் செய்தார் இந்த youtube இல் தெளிவாக ஆதாரம் உள்ளது .
மீனவர்களின் படகுகளை பறியுங்கள் என்று ராஜபக்சாவுக்கு ஆலோசனையும் தைரியமும்,கொள்கையும் வகுத்து  கொடுத்தது இந்த சாமிதான். .இவரை ஏன் இன்னும் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யவில்லை . தமிழர்கள் இளிச்சவாயர்கள்?
தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வியாழன், 12 ஜனவரி, 2017

சசிகலாவுக்கு பீதியை கிளப்பும் 171 தொகுதி பெண் வாக்காளர்கள்?

ஜெ. மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை பிடிக்க இப்படிப் பல கட்சிகளும் முயற்சிக்கின்றன. பழைய அரசியல் கணக்குகள் இப்போது பயனளிக்காது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஒ.பன்னீரும் சசிகலாவும் அ.தி.மு.க. வாக்குவங்கியை கைப்பற்றும் அசைவுகளை உணர்ந்தே இருக்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை என்றதும் மாநிலம் முழுக்க அமைச்சர்களை அனுப்பியதோடு, வறட்சி மாநில அறிவிப்பும் இந்த அசைவுகளை கணக்கில் கொண்டுதான் என்கிறார்கள். அதேநேரத்தில் அ.தி.மு.க. சற்றும் எதிர்பார்க்காத வகையில் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டு வந்த கட்சி சாராத பொதுமக்களை தன்வசப்படுத்த தி.மு.க. முயற்சிகளை எடுக்கிறது. ஜெ.வின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தியது, ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்களை விளக்க வேண்டுமென கேள்வி கேட்டது, ஜல்லிக்கட்டு, விவசாயிகள் தற்கொலை, பொங்கல் விடுமுறை என தமிழகத்தை உலுக்கும் ஒவ்வொரு பிரச்சினையிலும் விரைவாக அறிக்கை விடுவது என ஸ்டாலின் செயல் தலைவர் ஆனதும் தி.மு.க.வின் வேகம் அதிகரித்துள்ளது என அ.தி.மு.க.வினரே ஒத்துக்கொள்கிறார்கள். "சசிகலாவின் புதிய தலைமையை அ.தி.மு.க.வின் வாக்குவங்கியான பெண்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 171 தொகுதிகளில் பெண்கள்தான் அந்தத் தொகுதியின் முடிவைத் தீர்மானிக்கிறார்கள். அவர்களது மனங்களை வெல்ல ஸ்டாலின் முயற்சிக்கிறார்'' என்கிறது, அறிவாலயம் வட்டாரம்.நக்கீரன்

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - விலங்குகள் நலவாரியம்

புதுடெல்லி தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்துவருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அரசுக்கு நெருக்கடி தரப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, “பொங்கல் பண்டிகைக்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க சாத்தியமில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான வரைவு தீர்ப்பு தயாராக இருந்தாலும் வரும் சனிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்க சாதியமில்லை” என்றது. சுப்ரீம் கோர்ட்டு இவ்வாறு கூறியது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இன்றும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சாரு நிவேதா on ஜல்லிகட்டு : நீதிமன்றங்களில் டவாலி இன்னும் ஏன் என்று கேட்டு எத்தனை நீதிபதிகள் தீக்குளித்திருக்கிறார்கள்?

ஜல்லிக்கட்டை பாரம்பரியம் என்று ஏற்றுக்கொண்டால், உடன்கட்டை ஏறுவதையும் பாரம்பரியம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்று புத்திசாலித்தனமாக கேட்கிறார்கள். இன்னும் என்ன மயிருக்கு நீதிமன்றங்களில் டவாலி…? என்று கேட்டு எத்தனை நீதிபதிகள் தீக்குளித்திருக்கிறார்கள்? நீதிமன்றங்கள், அரசியல் பொறுக்கித் தனத்தின் புகலிடமாக மாறியிருக்கும் சூழலில் இதைப் போன்ற விவகாரங்களில், சமூகத்தின் மேட்டிமைத்தன மனநிலையை சொரிந்து கொடுக்கும் தீர்ப்புகளை வழங்கி தமது செல்லரித்துப்போன மாண்புகளை அவர்கள் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறார்கள். 
விவசாயிகள் இங்கே செத்துக் கொண்டிருக்கிறார்கள். சென்ற மாதத்தில் ஒரே மாவட்டதில் அறுபது விவசாயிகள் செத்தார்கள். ஆனால் அரசியல்வாதிகளும் பாலாஜி சிம்பு போன்ற கோமாளிகளும் ஜல்லிக்கட்டுக்காக ’போராடுகிறார்கள்.’ செல்லாப் பண விவகாரத்தில் இந்தியாவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதற்காக சுண்டு விரலைக் கூட அசைக்காத தமிழ் அரசியல்வாதிகள் ஜல்லிக்கட்டுக்காகப் போராடுவது மக்கள் விரோத அரசியலின் உச்சம்.
ஜல்லிக்கட்டு குறித்து அடியேனின் கருத்து : அராத்து புத்தக வெளியீட்டின் போது என் வாரிசு யார் என்ற கேள்விக்கு ஹாட் ஸீட்டில் அராத்து என்று பதில் கூறியது பற்றிப் பலரும் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள்.  ஒரு நொடி கூட யோசிக்காமல் பதில் கூற வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது.  கொஞ்சம் யோசித்திருந்தால் இப்படி பதில் சொல்லியிருப்பேன்.
என் எழுத்து ஒரு சிந்தனைப் பள்ளியையே உருவாக்கி இருக்கிறது.  இதில் ஒருவரை மட்டுமே வாரிசு என்று சொல்லி விட முடியாது.  இன்றைய கால கட்டத்தை, இன்றைய இளைஞர் சமூகத்தைப் புனைவில் கொண்டு வருவதில் அராத்து என்று சொல்லலாம்.  மேலும், பிரபு காளிதாஸ், சரவணன் சந்திரன் என்றெல்லாம் இருக்கிறார்கள்.  இதில் சரவணன் சந்திரன் மிகவும் காத்திரமானவர்.  யார் உசத்தி, யார் கீழே என்றெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பிரமாதமாகச் செயல்படுகிறார்கள்.

விவசாயிகள் மரணம் : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் தமிழக அரசு !

விவசாயிகளை முழுமையாகக் காப்பாற்றும் வரை மக்கள் அதிகாரம் சார்பில் பல்வேறு விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து பிரச்சாரம், பொதுக்கூட்டம், போராட்டம் என டெல்டா மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம்
people-power-protestவினவு :விவசாயிகளின் மரணத்திற்கும் கருகிய பயிர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது விவசாயிகளை வஞ்சிக்கும்  கண்துடைப்பு இதை ஏற்கமுடியாது. இந்த அரசு விவசாயிகளை காப்பாற்றாது என்பதற்கு மீண்டும் ஒரு நிரூபணம் தான் இந்த அறிவிப்பு
கர்நாடக காங்- பா.ஜ.க-வின் அடாவடியாலும், மோடி அரசின் துரோகத்தாலும் இந்த ஆண்டும் காவிரியில் தமிழகத்தின் தண்ணீர் பங்கீட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் தீர்வு காண முடியாமல் திராணியற்று நிற்கின்றது. பருவ மழையும் பொய்த்ததால் தஞ்சை டெல்டா விவசாயம் கருகியது மட்டுமல்ல குடிநீருக்கே மக்கள் விலங்குகள் போல் அலையும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்து எச்சரிக்கின்றனர்.

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமனம்

மும்பை : டாடா சன்ஸ் நிறுவனத் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து டாடா குழும தலைவராக சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  நடராஜன் சந்திரசேகரன் தற்போது டிசிஎஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். 53 வயதாகும் நடராஜன் சந்திரசேகரன் நாமக்கல் அருகே மோகனுரில் 1963-ல் பிறந்தார். திருச்சி ஆர்.இ.சி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர் ஆவார்  .தினகரன்

ஸ்பெயினில் காளையை சுற்றி நின்று குத்தி கொல்வது பீட்டாவுக்கு விளையாட்டு? தமிழக ஜல்லிகட்டு கொடுமையா? பாசம் ?




நான் கூட! ஆரம்பத்தில் ஏதோ இது சின்ன பிரச்சனை தான்னு நினைத்தேன் ஆனால் போக போக பார்க்கும் போது தான் புரிகிறது இது உலக நாடுகள் இந்தியாவிற்கு எதிராக நடத்தும் அமைதி போர் என்று.
பீட்டா! என்பது ஒரு சர்வதேச அமைப்பு அது ஏன் ஸ்பெயினில் தடை செய்யாமல் இந்தியாவில் அதுவும் தமிழகத்தின் மீது கை வைக்கிறது என்று யோசிக்கும் போது தான் நம்மை சிந்திக்க வைக்கிறது.
உலக! நாடுகளில் ஏதோ! ஒரு நாட்டிற்கு மருத்துவ குணமும் ஆரோக்கியமும் நிறைந்த நம் நாட்டு மாட்டு பாலின் காப்புரிமையை பெறத்துடிக்கின்றது.
அதுவே! காரணம் குறிப்பாக ஜல்லிக்கட்டு மீது காளைகள் மீது கை வைக்க.
இப்போ! ஆயிரம் ஐநூறு ரூபாய் ரத்து செஞ்சாங்க! இதுக்கு முன்னாடி ரத்து இல்லை அதை தாராளமா பயன்படுத்தினோம் பாதுகாத்தோம். ரத்தான பிறகு நம் கையில் ஆயிரமோ ஐநூறு இருந்தாக்கூட இனி பயனில்லைன்னு குப்பைல! தான் போடுவோம்.

7 காங்கேயம் காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சி:

வீரர்கள், காளைகளுக்கு பரிசுகள் உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடலூர் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றதையடுத்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடலூர் அடுத்த திருவந்திபுரம் கெடிலம் ஆற்றின் அருகே நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் இருந்து 7 காங்கேயம் காளைகள் கொண்டுவரப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வீரர்களும், கடலூரைச் சேர்ந்த 5 வீரர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.

ஜெயாவின் மரணம் .... சசி புஷ்பாவின் புகார் கடிதம் சிபிஅய் நடவடிக்கை வரை ...

 மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அதிமுக எம்பியான சசிகலா புஷ்பா, கடந்த டிசம்பர் 19-ந் தேதி சந்தித்து, ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க மனு கொடுத்தார். அவரது புகார் கடிதத்தைத் தற்போது சி.பி.ஐ.யின் நிர்வாக அமைப்பான பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு மேல்நடவடிக்கைக்காக அனுப்பிவைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொடுக்கப்படும் புகார்களில் உண்மைத்தன்மை இருக்கும்பட்சத்தில் மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். மற்றவை குப்பைக்கூடைக்குப் போவதும் உண்டு. சசிகலா புஷ்பாவின் மனு, இருபதே நாட்களில் மேல் நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றால், புகாரில் மத்திய அரசுக்கு ஆர்வம் இருப்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

ஜோதிடர்கள் சசிகலாவுக்கு பிரடிக்சன் : முதல்வர் பதவி இப்போ வேண்டாம் !

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பொது செயலாளராக சசிகலா பொறுப்பேற்று கொண்டுள்ளார். அதன்பிறகு சசிகலாவின் விருப்பம் இல்லாமலேயே முதல்வர் பதவியில் பன்னீர் செல்வம் அமர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பன்னீர்செல்வம், பதவியில் இருந்து இறங்கி, சசிகலாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என, கடந்த சில நாட்களுக்கு முன், கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டது. அந்த நெருக்கடிகள் தற்போது இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஜெயலலிதா மறைந்ததும், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பதவியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த சசிகலா, அடுத்த கட்டமாக, முதல்வர் பதவியிலும் உடனடியாகவே அமர்ந்து விட வேண்டும் என கணக்குப் போட்டு, காய் நகர்த்தி வந்தார்.

ஜாபர் சேட் பணிநீக்கம் ரத்து - பணி வழங்க கோர்ட் உத்தரவு!


தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட் கடந்த ஐந்தரை வருடங்களாக தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அரசின் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ததுடன் வரும் 18ஆம் தேதிக்குள் ஜாபர் சேட்டுக்கு பணி வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவு தெரிவிக்கிறது. மின்னம்பலம்

ஜல்லிகட்டு போராட்ட களத்தில் மாணவர்களுடன் ஸ்டாலின் ..


ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகம் முழுக்க மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் மாணவர் போராட்டம் வேகம் பெற்று வரும் நிலையில் சென்னையிலும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் இன்று நடத்திய போராட்டத்தில் காலையிலேயே போய் கலந்து கொண்ட கொண்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அது தொடர்பாக தன் முகநூலில் எழுதியுள்ள பதிவில் “
இன்று காலை சென்னை புதுக் கல்லூரியில், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தேன். ஜல்லிக்கட்டு கோரி மாணவர்கள் தமிழகம் முழுதும் உணர்வு மிகுந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது வரவேற்பிற்குரியது. மொழிப் போரில் மாணவர்களிடம் ஏற்பட்ட இப்படிப்பட்ட எழுச்சி தான் தாய்மொழியைக் காத்தது.

வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரை காணவில்லை .. கொலை? மனைவி சந்தேகம்!


ராணுவ வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்று எல்லை பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய ராணுவ வீரரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று அவரது மனைவி முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எல்லை பாதுகாப்பு படையின் 29வது பட்டாலியனில் பணியாற்றி வரும் தேஜ் பதூர் யாதவ் என்பவர் மொபைல் மூலம் தான் பேசிய 4 நிமிடம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
’எல்லையில் ராணுவ வீரர்கள் கால்கடுக்க 11 மணி நேரத்திற்கு மேலாக கடுங்குளிரில் கஷ்டப்பட்டு பணியாற்றி வருகிறோம்.

தலைவர்கள் கருத்து! நீதிமன்றம் தாமதம் செய்வது நீதியை மறுப்பதாகும்? தாமதம் தகாதையா!


ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்திருந்தது.தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவ்விகாரத்தில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது தெரிவித்தனர். இவ்வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல் பண்டிகைக்குள் தீர்ப்பு வழங்க இயலாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஜல்லிக்கட்டிற்கு உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்:

200 வகை காளைகள் இருந்த தமிழ் நாட்டில் 30 வகை காளைகள்தான் உள்ளன! – சூர்யா

ஜல்லிக்கட்டு நம் கலாச்சார சின்னம்… அதைத் தடை செய்யக் கூடாது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். பொங்கலுக்கு இன்னும் இரண்டு தினங்கள்தான் உள்ளன. பொங்கலின் உச்சமான, தமிழரின் வீரம் செறிந்த விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இன்னமும் மத்திய அரசு ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கத்துக்கான எந்த முயற்சியும் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களும், பல்வேறு அமைப்புகளும், கட்சிகளின் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்றும் சிலர் முடிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இந்த ஆண்டு கட்டாயம் ஜல்லிக்கட்டு நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

ஜல்லிகட்டு தீர்ப்பு வழங்கமுடியாது .. உச்சநீதிமன்றம்! தீர்ப்பு எழுதி முடிக்க அவகாசம் தேவையாம்

டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொங்கல் நடைபெறுவதால் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நிலுவையில் உள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது. உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது - உச்சநீதிமன்றம் Powered by இந்நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கைய நிராகரித்த உச்சநீதிமன்றம், தற்போதுதான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்குவதுசாத்தியம்  இல்லை .tamiloneindia

பொன்.ராதாகிருஷ்ணன் : போகியன்று திராவிட இயக்கங்களை அகற்றுங்கள்

radhakri
வரும் போகியன்று திராவிட இயக்கங்களை அகற்றிவிட்டு தமிழக மக்கள் பொங்கலை வரவேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாக புதிய தலைமுறை செய்தி தெரிவிக்கிறது.பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெறும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.thetimestamil

"ஜல்லிக்கட்டு: நடக்கும் ! வழக்கில் தீர்ப்பு. இன்று எதிர்பார்ப்பு.. உச்சநீதிமன்றம் டைலாமோ டைலாமோ


ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டும், விலங்குகள் நலவாரியம் வழக்கு தொடர்ந்ததால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. கடந்த ஓராண்டாக உச்சநீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.நக்கீரன்

2000 ஓவாவுக்கு டெபிட் கார்டு வந்துட்டா நாடு வளர்ச்சின்னு கூவுறீங்களே .... அடே அடே கக்கூசு கட்டுங்கடா முதல்ல...


ஒருவரின் மாத சம்பளம் 10000 ரூபாயை.. அவர் பணமாக செலவழிச்சா 10000 க்கும் செலவு செய்யலாம். ஆனா அதையை அவர் வங்கி மூலமா DIGITAL money யா செலவழிச்சா சேவை கட்டணம் 15% *10000 = 1500 ரூ போக அவரால் 8500 மட்டுமே செலவழிக்க முடியும். இதே 130 கோடி பேருக்கு 1500 * 130கோடி = 1,95,000கோடி ரூபாய் சேவை கட்டணமாக மாதம் மாதம் வங்கிக்கோ அல்லது கும்பானிக்கோ போகும். ஒரு வருடத்துக்கு 24 லட்சம் கோடி சேவை கட்டணம். இதுதான்டா உலக மகா ஊழல். நாட்டின் மொத்த பணத்தையும் அச்சடிக்க வெறும் 12 ஆயிரம் கோடியே போதும்.
இதுக்கு பேர்தான்டா சர்வாதிகாரம்.இதப்பத்தி கொஞ்சம் யோசிங்க...

கோமாளிகளுக்கு புரியாது படிக்க வேண்டாம்!
ஏன் இந்தியா மற்ற நாடுகளை போல முன்னேறக்கூடாதா?...
மக்கள் டெபிட் கார்டு, நெட்பேங்கிக்லாம் பயன்படுத்தகூடாதா?...
ஆன்லைன் பரிவர்தனைகள் வரக்கூடாதா?...
ஏன் டீக்கடைல paytym மெசின் யூஸ் பன்னகூடாதா? வளரச்சிடா! கவர்ச்சிடா! மோடிடா!
அட அரமண்டையங்களா!.. டெபிட்கார்டு பயன்படுத்துவதையும், ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்வதையும் ஒரு நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாக உங்களுக்கு சொல்லிக்குடுத்தவன் எவன்டா?
நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம என்றால், க்யூபா மாதிரி நாடு முழுவதும் கல்வியை இலவசமாக்கி சட்டம் இயற்று, கல்வி நிறுவனங்களை பொதுவுடைமையாக்கு, கல்வி வியாபாரத்தை 100% ஒழிக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.

அதிபர் டிரம்ப் : (Conflict Of Interests) நலன்களின் முரணா ? நகைப்புகளின் முரணா ?


மெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில் அவர் பதவி ஏற்றதும் ஏற்படப் போகும் நலன்களின் முரண்கள் (Conflict Of Interests) பற்றி ஊடகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அக்கறையை வெளிப்படுத்தி வருகின்றன. முதலாளித்துவ உலகில் புழங்கும் பல்வேறு வார்த்தைகள் ஏதோ மாபெரும் தத்துவ விளக்கத்தைக் கொண்டிருக்கும் சிக்கலான நுட்பங்களாக நினைக்கப்படுகின்றன. உண்மையில் இவ்வார்த்தைகளை ஒரு பள்ளிக் கூட சிறுவன் ஆய்வு செய்தாலே அவற்றில் இருப்பது வெறும் வார்த்தைகளே அன்றி வாழ்க்கை பற்றியவை அல்ல என்பதை அறியமுடியும்.
அதன்படி நலன்களின் முரண்கள் என்றால் என்ன? டிரம்ப் எனும் தனிமனிதரின் நலன்களும், அதிபர் என்ற முறையில் உள்ள நலன்களும் மோதிக்கொள்கின்றனவாம். எனில் டிரம்ப் எனும் நபரின் நலன்கள் ஏன் அதிபர் என்ற வகையில் முரண்படவேண்டும்? அதாவது அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவரது தனிப்பட்ட நடவடிக்கையில் வர்த்தகம் சார்ந்தவை இருக்க கூடாதாம்.

தினகரனுக்கு 28 கோடி அபராதம்... ஜெயா உருவாக்கிய மிடாஸ் கும்பலுக்கு ஆப்பு வருகிறது?

விகடன் :தினகரன் தலையெழுத்தை மாற்றிய தீர்ப்பு!ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்குப் பிறகான வெற்றிடத்தில், மீண்டும் வெளிச்சத்துக்கு வர மன்னார்குடி குடும்பத்தில் பலரும் முயற்சிக்கின்றனர். அந்தக் குடும்பத்திலிருந்து முதன்முதலில் அரசியலுக்கு வந்த டி.டி.வி.தினகரன் இதில் முக்கியமானவர். ‘சசிகலாவுக்குப் பதிலாக முதல்வர் பதவியில் அமரப்போகிறவர்’ என மன்னார்குடி குடும்பத்திலேயே சிலரால் முன்னிறுத்தப்பட்ட தினகரன் மீது சம்மட்டி அடியாக இறங்கியிருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. ‘அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் தினகரனுக்கு அமலாக்கத் துறையினர் விதித்த 28 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு தந்திருக்கிறது.

அதிமுக வாக்குவங்கி சுமார் 50 வீதம் தீபாவுக்கு ஆதரவு? .. உளவு தகவல் ...அதிர்ச்சியில் மன்னார்குடி

தீபாவுக்கு குவியும் ஆதரவு: அதிர்ச்சியில் சசி வட்டாரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபாவுக்கு, 60 சதவீத, அ.தி.மு.க., தொண்டர்களும், 50 சதவீத பெண்களும், தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள தாக, உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இதனால், கதி கலங்கியுள்ள, சசி வட்டாரம், மாவட்டம் தோறும் சமாதான முயற்சியை தீவிரப்படுத்த, மாவட்ட செயலர்களுக்கு, அ.தி.மு.க., தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.சேலம், வேலுார், மதுரை, ஈரோடு, நெல்லை, துாத்துக்குடி உட்பட, தமிழகம் முழுவதும், தீபா பேரவை துவங்கி, உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. 'வாட்ஸ் ஆப்' வழியாகவும், ஆதரவு பெருகுகிறது. அ.தி.மு.க.,வில் பதவியில் உள்ளவர்கள், தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவதாக தெரிவித்தபோதும், ரகசியமாக குழி பறிக்கும் வேலையையும் செய்து வருவதாக கூறப்படு கிறது. பல இடங்களில், தீபா பேரவைக்கு தேவையான நிதி மற்றும் ஆதரவை, மறைமுக மாக வழங்குவதாக, தகவல் பரவி வருகிறது.

பன்னீர்செல்வம் சசிகலா பரஸ்பரம் கழுத்தறுப்பு ... மக்கள் செய்த பாக்கியம்?

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவிற்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, கோட்டை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா இருந்த வரை, அவரது நம்பிக் கைக்குரியவராக, முதல்வர் பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருந்து, விலக நேரிட்ட போது, பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். அந்தளவுக்கு இவர், ஜெயலலிதாவிடம் செல்வாக்கு பெற்றது, சசிகலா குடும்பத்தினருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, பன்னீர்செல்வம் மீது, ஜெயலலிதா வைத்துள்ள நம்பிக்கையை குலைக்கும் வகை யில், பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டனர். கடந்த, அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.

சென்னை இக்சா மையத்தில் கவிஞர் இன்குலாப் புகழஞ்சலி!

ingulab-1 மறைந்த கவிஞர் இன்குலாப் புகழஞ்சலி கூட்டம் சென்னை இக்சா மையத்தில் இன்று மாலை 5. 30 மணிக்கு நடைபெறுகிறது. கலை இலக்கிய பெருமன்றமும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்துகின்றன. கலை மணிமுடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.  thetimestamil.com

ஜல்லிக் கட்டு: சங்க காலப் பண்பாடும், ஆயர்குடிகளும், ஏறு தழுவுதலும்…அனைத்து தமிழர்களின் பண்பாடா ? மரபா? விளையாட்டா ?

சந்திர மோகன்thetimestamil : சந்திர மோகன்; PETA போன்ற அமைப்புகள் முன் வைக்கும் விலங்குகள் வதை, மனித நலன் என்ற விவாதம் இதுவல்ல! பாரதீய ஜனதா,காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க, திமுக, மதிமுக, பா.ம.க, விசிக, தமிழ் அமைப்புகள், சிபிஐ,சிபிஎம்’மில் துவங்கி லிபரல் மா.லெ தமிழ் தேசிய குழுக்கள் வரையிலுமான பல வண்ண முற்போக்கு அமைப்புகள் வரை, “ஜல்லிக்கட்டு”க்கு கொடி பிடித்துள்ளனர்.
‘சல்லிக்கட்டு’ மொத்த தமிழ் சமூகத்தின் பண்பாடா, பாரம்பரியமா? அனைத்துத் தமிழர்களின் வீர விளையாட்டா?
  1. சங்க காலப் பண்பாடும், ஆயர்குடிகளும், ஏறு தழுவுதலும்…
ஐந்திணைகளில் (குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல்,பாலை) சங்க கால மக்களின் வாழ்க்கை வேறுபட்ட சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்திருந்ததை பண்டைய இலக்கியங்கள் விளக்குகின்றன.

மீண்டும் மோடி அதிமுக எம்பிக்களை அவமதித்தார் ...ஜல்லிகட்டு மனுவை நேரில் வாங்காமல் அவமதித்தார்

டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மனு அளிக்க வந்த தமிழக அதிமுக எம்.பி. பிரதமர் நரேந்திர மோடி சந்திக்காமல் தவிர்த்துவிட்டார். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக மத்திய அரசு ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அதிமுக எம்.பிக்கள் இன்று மோடியை சந்திக்க டெல்லி விரைந்தனர். இதுதொடர்பாக, அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவின் கோரிக்கை மனுவை மத்திய வன துறை மற்றும் சுற்றுசூழல் துறை இணை அமைச்சரிடம் அளித்துள்ளனர். மோடி தவிர்ப்பு மோடி தவிர்ப்பு இதன்பிறகு, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான மனுவை கொடுக்க தமிழக எம்.பி.கள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பிரதமர் மோடி தமிழக எம்.பி.களை சந்திப்பதை தவிர்த்துவிட்டார்.

புதன், 11 ஜனவரி, 2017

17 விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணமா? :ஸ்டாலின் கடும் கண்டனம்!


தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரண திட்டங்களை வெளியிட்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம். இது குறித்து தனது அதிருப்தியை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகக் குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும்” என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது மிகவும் காலதாமதமானது என்றாலும் விவசாயிகளின் பிரச்சனைகளை இந்த அரசு ஏதோ உணர்ந்து கொள்ள முயற்சிக்கிறது என்ற அளவில் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

மன்மோகன் சிங்: நாட்டில் மிக மோசமான பொருளாதார பேரழிவு .. விரைவில் !


மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் மோசமான சூழ்நிலை வரவுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த காங்கிரஸ் தேசிய மாநாட்டில் மன்மோகன் சிங் இதுகுறித்து பேசியதாவது:
இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றப்போவதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால், ஒரு முடிவின் துவக்கம் ஆரம்பாகியுள்ளதை நாம் அறிவோம். இனிமேல், மோசமான சூழ்நிலை வர உள்ளது. நாட்டின் வருமானம் கடந்த இரண்டாண்டுகளில் அதிகரிதது வருவதாக பிரதமர் மோடி கூறுவது முழுக்க பொய். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த சில மாதங்களாக, அனைத்தும் கெட்டதிலிருந்து மோசமாக மாறியுள்ளது. ஜி.டி.பி., வளர்ச்சி 6.3 சதவீதமாக குறையும் என சிலர் கூறுகின்றனர்.
இதன் மூலம் ரூபாய் நோட்டு வாபஸ் பெரிய பேரழிவு என்பதை நாம் எண்ணி பார்க்கலாம். ஜி.டி.பி. குறையும் போது, வேலைவாய்ப்பு, உற்பத்தி, விவசாய வருமானம் குறையும். இது ரூபாய் நோட்டு வாபசால் ஏற்பட்ட பேரழிவு ஆகும் எனக்கூறினார் மின்னம்பலம்

75 வயது பாட்டி ..5 லட்சம் ரூபாய் ... செல்லாமல் போனது தெரியாமல் ... மோடியின் வழிப்பறி கொள்ளையில் நடுத்தெருவில் ..

கேரளாவைச் சேர்ந்த சதி என்ற 75வயது பாட்டி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை காலதாமதாக தெரிந்துக்கொண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த சதி என்ற 75வயது பாட்டி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை காலதாமதாக தெரிந்துக்கொண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே வரப்புழா என்னும் சிற்றூரில் சதி(75) என்பவர் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டில் மின்சாரம், ரெடியோ என எந்த பொருட்களும் இல்லை. அவருக்கு தேவையான பொருட்களை வாங்க எப்போதவதுதான் வெளியே செல்வார். எல்லா நேரங்களிலும் வீட்டிலேதான் இருப்பார். அண்மையில் காய்கறி வாங்க கடைக்கு சென்றுள்ளார். கடைக்காரரிடம் 500 ரூபாய் நோட்டை நீட்டியுள்ளார். கடைக்காரர் ரூபாய் நோட்டு செல்லாது என்று கூறியுள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த பாட்டி, ரூபாய் நோட்டு புதுசா தானே இருக்கு, கிழியவும் இல்லை ஏன் செல்லாது? என்று கேட்டுள்ளார்.