புதன், 18 ஆகஸ்ட், 2010

சிங்கள தளபாட வியாபாரிகள் வாள் வெட்டுக்கு உள்ளாகியமை தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் மூவர் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்று முன்தினம் மூன்று சிங்கள தளபாட வியாபாரிகள் வாள் வெட்டுக்கு உள்ளாகியமை தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தளபாட விற்பனையில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் மூவரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
வியாபாரத்திற்காக குறித்த சிங்களவர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்குள்ள வர்த்தகர் ஒருவரிடம் தமது தளபாடங்களை மொத்தமாக விற்பனை செய்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மூன்று சிங்களவர்களும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கருத்துகள் இல்லை: