வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஜேர்மனியப் பிரஜைகள் பயணித்த வாகனத்திலிருந்து ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது

பதுளை கொஸ்லந்த பிரதேசத்தில் சிறுவர் இல்லமொன்றை நடாத்தி வந்த இரண்டு ஜெர்மனியப் பிரஜைகள் பயணித்த வாகனத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை சியம்பாலாண்டுவ பிரதேசத்தில் வைத்து அதிரடிப்படையினர் கைப்பற்றியதுடன் அந்த வெளிநாட்டுப் பிரஜைகளைக் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் பயணித்த வாகனத்தில் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளும் ஒரு பெண்ணும் இருந்தனர்.

போதைப் பொருள் வாகனத்தின் முன் ஆசனத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: