சனி, 21 ஆகஸ்ட், 2010

கொக்குவில் பகுதியில் மலிவு விலைகளில் இராணுவத்தினரின் உதவியுடன் வர்த்தகர்கள் வியாபாரம

கொக்குவில் பகுதியில் இராணுவத்தினரின் உதவியுடன்  வர்த்தகர்கள் மீண்டும் வியாபாரம்>கொக்குவில் பிரம்படி ஸ்ரேசன் றோட் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சிங்கள வர்த்தகர்கள் மீதான தாக்குதலை அடுத்து ஸ்தம்பித நிலையிலிருந்த வியாபாரம் நேற்று மீண்டும் இராணுவப் பாதுகாப்புடன் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது நேற்றுக்காலை தொடக்கம் மாலை வரை 6 இற்கும் மேற்பட்ட கடைகளை அமைத்து மலிவு விலைகளில் பொருள்களை விற்றுள்ளனர்.
இவர்களது வியாபாரத்துக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அந்தப் பகுதியில் இராணுவத்தினரும் கடமையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தின் பின்னர் கொக்குவில் பகுதிகள் எங்கும் இராணுவத்தினர் சோதனை,காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிங்கள வர்த்தகர்கள் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: