சனி, 21 ஆகஸ்ட், 2010

இலங்கையில் விதவைகளாக 68,000 தமி்ழ்ப் பெண்கள்!

 68,000 தமிழ்ப் பெண்கள் கணவனை இழந்த விதவைகளாக வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்தது. இதில், தமிழ் இளைஞர்கள் பலர் உயிர் இழந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்தது.இதை தொடர்ந்து தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசு தோராயமான கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.இதில், 68,000 பெண்கள் விதவைகளாக இருப்பது தெரிய வந்தது.இவர்களது கணவர்களை இலங்கை ராணுவம் போரில் கொன்று குவித்துள்ளது. மேலும், கடந்த 2004ம் ஆண்டு எற்பட்ட சுனாமியிலும் பல ஆண்கள் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முழுவதும் நடந்த கணக்கெடுப்பில் தமிழர்கள் பகுதியில்தான் மிக அதிக அளவில் விதவைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது இங்கு தோராயமாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. எனவே, மிக துல்லியமாக கணக்கெடுப்பு நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

விதவைகளுக்கு ரேஷன் மற்றும் தொழிற்பயிற்சி வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
பதிவு செய்தவர்: பிளாஷ்லைட்
பதிவு செய்தது: 21 Aug 2010 7:43 pm
வெண்ணுடை தரித்து, மொட்டையடித்து, ருசியான சாப்பாடு கொடுக்காமல், வேறு தரையில் படுத்து தூங்க சொல்லி, இந்த கொடுமை எல்லாம் செய்யாமல். . மறுமணம் செய்து அப்பெண்களுக்கு வாழ்வு கொடுக்க ஆண்கள் முன் வரவேண்டும்.புலிகள் தவறா? ராஜபக்ஷே தவறா? இந்திய அரசு இப்படி பண்ணிடுச்சே என கூக்குரல் இடாமல் ஆகவேண்டிய வேலையை பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: