சனி, 21 ஆகஸ்ட், 2010

நடிகை அஸ்மிதா கன்னத்தில் அறைந்துவிட்டார் டைரக்டர்களஞ்சியம்

கன்னத்தில் அறைந்தார் டைரக்டர்:
கதறி அழுதார் நடிகை


‘பூமணி’, ‘பூந்தோட்டம்’ போன்ற படங்களை இயக்கிய மு.களஞ்சியம் ‘கருங்காலி’ என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். சீனிவாசன் ஹீரோ. அஞ்சலி, சுனிதா வர்மா, அஸ்மிதா ஆகிய 3 பேர் ஹீரோயின்கள்.
இதில் இயக்குநரிடம் புது முக நடிகை அஸ்மிதா கன்னத்தில் அறை வாங்கியதாகக்  பரபரப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்துட் அஸ்மிதா, ‘’முதலில் சிரிப்பு.. அடுத்த ஷாட்டிலேயே அழுகை என எக்ஸ்பிரஷன் காட்ட வேண்டிய காட்சி. நான் கொஞ்சம் சொதப்பி விட்டேன்.
 ‘நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய கேரக்டரை சொதப்புகிறாயே..’ என்று கத்தியபடி கன்னத்தில் அறைந்துவிட்டார் டைரக்டர். எனக்கு அவமானம் தாங்கவில்லை. ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதேன். அதை அப்போதே மறந்து விட்டேன்.

நான் சொன்னதை வைத்து இப்போது பரபரப்பு கிளப்புகிறார்கள்’’என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் களஞ்சியம் இந்த விவகாரம் குறித்து,  ’’ படத்துக்காக மெனக்கெட வேண்டி இருப்பதால் சைக்கோ போல நடந்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். திட்டியது, கன்னத்தில் அடித்தது உண்மைதான். அது தொழிலுடன் சேர்ந்த ஒரு கண்டிப்பு. அவ்வளவுதான்” என்று முடித்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை: