புதன், 18 ஆகஸ்ட், 2010

சமூக நீதி,அன்புமணி வாய்திறக்கவில்லை: கருணாநிதி

"என்னை விழுப்புரத்திற்கு அழைத்துச் சென்று, தனியாக நாற்காலி ஒன்றை போட்டு, கருணாநிதி முதல்வராக வந்தால் தான், சமூக நீதியைக் காப்பாற்ற முடியுமென்று முழக்கமிட்டவர் ராமதாஸ்' என, முதல்வர் ி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பணிகளில் வன்னியர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரிக்கை வைத்த, ராமதாசின் மகன் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது அது குறித்து எப்போதாவது வாய் திறந்தது உண்டா? 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டுமென்று ராமதாஸ் போராடியிருக்கலாம். ஆனால், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்திற்கு தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மதிப்பு அளித்து, அவரையும் அழைத்து பேசி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கென்று தனியாக 20 சதவீதம் வழங்கப்பட்டது என்ற வரலாற்றை ராமதாஸ் மறைத்து விட்டார்.
அந்தப் போராட்டத்தில் உயிரிழந்த அந்த 30 உயிர்களுக்கும் குடும்ப நிதி ஒதுக்கீடு அளித்து, மாதந்தோறும் ஓய்வூதியமும் வழங்கச் செய்து, அந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வரும் ஒவ்வொருவரும் மறக்க மாட்டார்கள்.
நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, என்னை விழுப்புரத்திற்கு அழைத்துச் சென்று தனியாக நாற்காலி ஒன்றை போட்டு கருணாநிதி முதல்வராக வந்தால் தான் சமூக நீதியைக் காப்பாற்ற முடியுமென்று முழக்கமிட்டவர் ராமதாஸ். தற்போது சமூக நீதியைப் பற்றி கருணாநிதி பேசலாமா என்று கேட்கிறார் என்றால், எல்லாம் காலத்தின் கோலம்தான்.
பிரவீன் - Erode,இந்தியா
2010-08-18 18:07:54 IST
எனக்கு ஒரு சந்தேகம். சமுக நீதி என்பது பிரச்சினைகளை யாரவது ஒரு சாதியினர் கிளப்பி, அதற்கு ஆதரவாக பேசுவதா ?...
கிரீஸ் - யாதும்ஊரேயாவரும்கேளீர்,இந்தியா
2010-08-18 18:01:13 IST
எல்லாம் தமிழகத்தின் எழவு(கலி ) காலம்...
seekay - Trichy,இந்தியா
2010-08-18 17:43:58 IST
டியர் jopet - singapore,சிங்கப்பூர் , தமிழ் பற்றில் ப ம கா உடன் கூட்டணினு சொல்லாதிங்க. இங்க எல்லாமே ஓட்டு கணக்குதான்....
SUGUMAR - TN,இந்தியா
2010-08-18 17:05:56 IST
ராமதாஸ் ஒரு நல்ல அரசியல்வாதி,அவர் தன்னை சரியாக பயன்படுத்த வில்லை ,அதற்காக அவர் வன்னிய சமுதாயதிற்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார்,எனவே இனி வரும் காலங்களில் எந்த ஸ்டேட்மென்ட் விடாமல் தன்னை தயார்படுத்திகொன்டு,நல்ல மனிதனாக திகழ முயற்சிக்க வேண்டும்...
மகாவீரன் - உதுகுளி,இந்தியா
2010-08-18 16:16:08 IST
என்னமோ இவங்க பாக்கெட் ல இருந்து எடுத்த குடுத்த மாதிரிதான் ................. எல்லாம் எங்க காசு , எங்க உழைப்பு , இதுல நீங்க குளிர் காயுறீங்க ......
indian - india,இந்தியா
2010-08-18 16:06:41 IST
வணக்கம் திரு மு க , ஒ சி பிரிவில் எத்தனை பேர் பிச்சை எடுக்கிறார்கள் தெரியுமா ?...
BASKAR.T - kasankottai,இந்தியா
2010-08-18 15:49:05 IST
karunanithi&Ramadass is kootani no;verty coming soon in Tamailnadu Election,...
தமிழன் - chennai,இந்தியா
2010-08-18 15:25:24 IST
ஏதோ அவர் மட்டும் தான் இப்படிப் பேசறது மாதிரி சொல்றீங்க... ஜெயலலிதாவுக்கு, "சமூக நீதி காத்த வீராங்கனை'ன்னு பட்டம் கொடுத்த ஒரு தலைவர் இப்ப உங்க கூட ஒட்டிட்டு, நீங்கதான், சமூகநீதி காத்த வீரர்னு மாத்தி சொல்லலையா...!...
RANGARAJAN - CHENNAI,இந்தியா
2010-08-18 15:25:05 IST
சமூக நீதி சமூக நீதி அப்படின்னு ஏதோ சொல்லிகிராங்கலே இந்த ரெண்டு பேரும், அது என்னப்பா சமூக நீதி . ப்ளீஸ் EXPLAIN பண்ணுங்க...
பாபா - chennai,இந்தியா
2010-08-18 15:22:01 IST
போதுமய்யா உன் வழவழ கொழகொழா வியாக்யானம்.......
சாம் - குவைத்,இந்தியா
2010-08-18 15:18:52 IST
வன்னிய மக்களுக்கு சேவை செய்ய போகிறேன் என்று 1985 காலகட்டத்தில் புருடா உட்டு வன்னிய மக்களை ஏமாற்றி ஒட்டு மொத்த வன்னிய மக்களுக்கு நான் தான் தலைவன் என்று சொன்ன தமிழ் ஐயா தன் குடுப்பதில் இருந்து பதவிக்கு வந்தால் மரத்தில் என்னை கட்டி வைத்து அடிங்கள் என்று சொன்னவர். அன்றே பொய் சொன்னதினால் தமிழ் நாட்டில் உள்ள மரங்களை எல்லாம வெட்ட தனது கட்சிகாரங்களுக்கு சொன்னார். வாழ்க மருத்துவ ஐயா ..! தன் மகான் ஆட்சியில் இருக்கும் பொழுது தனது வன்னிய மக்களை பற்றி கவலை படாத ஐயா இன்று ஏனோ கரசனம். வன்னிய மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை - தமிழன் உறவு சாம்...
2010-08-18 15:12:25 IST
ஜெயலிதா போன முறை ஜெயித்ததும் மிசினில் குளறுபடி செய்துதானா????? சந்தோசமா சொல்லும் சந்தோஸ்...
zamir - chennai,இந்தியா
2010-08-18 14:55:10 IST
Dr.Ramados and his son Dr.Anbumani are opportunist. Offer a Rajyasabha seat they will come behind. Jokers...
சசிகுமார்.A - chennai,இந்தியா
2010-08-18 14:54:01 IST
இந்தியா சுதந்திரம் வாங்கி 60 வருடம் மேல் ஆகியும் ஜாதி, மதம் எல்லாம் தேவையா?...
anbarasan - சவுதிஅரேபியா,இந்தியா
2010-08-18 14:03:10 IST
ஹலோ சந்தோஷ் ஏலேக்ட்ரோனிக் மெசின்ல thillu முள்ளு பண்ண முடிந்தால் அப்போ admk வெற்றி பெற்ற தொகுதில் எப்படி வெற்றி petrirgal ? election கமிஷன் கூப்பிடப போய் nirupika vendythu thana . unkaluku ellam arivu athigamla ean முடியல ?...
RANGARAJAN - CHENNAI,இந்தியா
2010-08-18 13:59:02 IST
பாவம்ப்பா இந்த தீயசக்திக்கு யாராச்சும் பாராட்டு விழா நடத்துங்க சீக்கிரம். பாராட்டு விழா நடத்தி ரொம்ப நாள் ஆயிடுச்சி போல. அதனால ரொம்ப தான் ஏங்கி போயிருக்காரு. அதனால உளறராறு. ஏதாவது பாராட்டு கூட்டம் நடத்தி அந்த உளறலை நிறுத்துங்க. அவரு ஏக்கத்தை தீர்த்து வைங்க....
வன்னியன் - ஜெயங்கொண்டம்,இந்தியா
2010-08-18 13:36:04 IST
போராடி உயிரை இழந்தது வன்னியர்கள். ஆனால் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதோ அப்போது பதவியில் இருந்த ஆட்களின் ஜாதி உள்ளிட்ட 108 ஜாதிகளுக்கு சேர்த்து.. இப்படி ஒரு துரோகம் செய்து விட்டு வன்னியர்கள் கேட்காமலேயே அள்ளி கொடுத்தது போல நாடகம் நடிக்காதீர்கள்.....
ஜெயக்குமார் - மதுரை,இந்தியா
2010-08-18 13:30:56 IST
தலைவருக்கு ஆதரவா கருது சொல்ல யாராவது வாங்கப்பா. யாருமே இல்லியா. தலிவா உமக்கு ஆதரவு குறைந்து வருகிறது. சீக்கிரம்மா கேளம்பிக்குங்கோ....
hariharan - Malaysia,இந்தியா
2010-08-18 13:04:56 IST
நாளைக்கு தினமலர் வாசகர்களுக்கு கொண்டாட்டம்தான் ராமதாஸ் பதில்களுக்கு கருத்து தெரிவிக்க....
jopet - singapore,சிங்கப்பூர்
2010-08-18 12:44:56 IST
அதிமுக விசிலடிச்சான் குஞ்சுகளா! கொஞ்சம் அடங்குங்க. இல்லேன்னா சுருங்குங்க! கலைஞர் அவர்களின் பதில் பாமகவின் பேச்சுக்கு கொடுக்கப்பட்ட விளக்கம். இதுல நீங்க என்ன சந்துல சிந்து பாடுறதுக்கு வரிங்க. உங்களுக்கு இப்ப என்ன வேணும். இந்த வெறி பிடிச்ச அன்பு மணி வேணுமா இழுத்துட்டு போங்க உங்க கூட்டணிக்கு. அந்த ஆளும் அந்த காடு வெட்டியும் யாரையாவது கடிச்சி வெச்சா நமக்கு தெரியாது அமாம் சொல்லிபுட்டேன்.. கூட்டிட்டு போணும்னா இப்பயே போங்க. இவனுங்க இவ்வளவு வெறி பிடிச்சவனுங்க திடீருன்னு கடிப்பானுங்க. உர்றுனுவாங்கன்னெல்லாம் திமுகவுக்கு தெரியும். இருந்தாலும் இவனுங்களை சேத்து வச்சிருந்தோம். ஏன்னா, இவனுங்க ஆயிரம் செஞ்சாலும் இவனுங்களுடைய தமிழ் பற்று எங்க தலைவருக்கு பிடிக்கும். அதற்காக இவனுங்க பண்ற சேட்டைய யெல்லாம் சகிச்சிகிட்டார் சகிச்சிகிட்டோம். ஆனால் அதவே ஒரு லிமிட்க்குமேல போனவுடனே முடியலேன்னு இறக்கி விட்டுடோம். அதனால இவனுங்களுக்கே தெரியும் இவனுங்க இம்சையை சகிசிகிற கட்சி எதுன்னு. உங்க பாண்டவபுரத்து பண்டிட் குய்ன் அதான் உங்க அம்மா ஒரு நாள் தாங்க மாட்டாங்க. அதனால இவனுங்க உங்க பக்கம் வருவானுங்கன்னோ! நீங்க இவனுங்கள சேத்துக்கலாம்னோ! நினைச்சா அது நடக்கறது அவ்வளவு இலகுவான விஷயமில்லை....
vinod - coimbatore,இந்தியா
2010-08-18 12:42:29 IST
வன்னியர் மக்கள் மட்டும் தான் தமிழ் நாட்டில் உள்ளார்களா?....
மைநர் குஞ்சு - நாகர்கோயில்,இந்தியா
2010-08-18 12:21:33 IST
நாளைக்கு நல்ல டைம் பாஸ்....எப்படியும் நம்ம டாக்டர் ராமதாஸ் பதிலடி கொடுப்பாரு...கமெண்ட்ஸ் பிரியர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்............
mani.k - mani,இந்தியா
2010-08-18 12:03:22 IST
karuna now scared of Jaya's popularity.The last news is entire political parties in TN are sending feelers to jaya.Hence karuna under severe pressure...
ஜாகிர் - Dammam,இந்தியா
2010-08-18 12:01:08 IST
கலைஞர் இதற்கு பதில் சொல்ல வேண்டாம்....
unmai - riyadh,இந்தியா
2010-08-18 11:34:40 IST
எல்லோரையும் தாழ்ந்த ஜாதி யாய் kalayanger அறிவிப்பார். எல்லா பிரச்சனை முடியும்....
முத்து - சென்னை,இந்தியா
2010-08-18 10:32:44 IST
பாராட்டு விழா எதுவும் இப்போது இல்லை, அதனால் முன்பு பாராட்டியதை நினைவு செய்து மகிழ்கிறார். அவரும் அவர் குடும்பம் மட்டும் நன்றாக வாழட்டும்....
கணேஷ் - அகமதாபாத்,இந்தியா
2010-08-18 10:32:21 IST
போதுமய்யா உன் வழவழ கொழகொழா வியாக்யானம்....
sankar - melbourne,ஆஸ்திரேலியா
2010-08-18 10:28:32 IST
murugan your are correct...
சி.ராமசாமி - tup,இந்தியா
2010-08-18 10:07:44 IST
இதுக்கு நீங்க தான் காரணம் .அவங்க கேட்டதை கொடுத்திருந்தா...எதுக்குமே வாய் திறந்திருக்க மாட்டார்கள்....பந்தியில் இடம் இருக்கு,ஆனா சாப்பாடு இல்லை...இதயத்தில் இடம் இருக்கு..ஆனா கூட்டணியில் இடம் இல்லை...இந்தமாதிரி பேசுனா அவங்க என்ன பண்ணுவாங்க.......
பாரதி - chennai,இந்தியா
2010-08-18 10:00:46 IST
திமுக வுக்கு மெஜாரிட்டி இல்லன்னு தெரிஞ்சி 4 வருஷம் ஆயிடுச்சி. நீ பெட்டி வேற தர்ரியாக்கும் .. காலா காலத்துல கிளம்பு .....
ராமன் - அரக்கோணம்,இந்தியா
2010-08-18 09:56:32 IST
ஜாதி கட்சி ராமதாஸ்...
m.sivakumar - chennai,இந்தியா
2010-08-18 09:54:50 IST
For the past 60 years, the governemnt has been implementing reservation scheme both in employment and educational opportunities. Why not the governemnt publish the correct data with regard to fact that how many people been benefited-with particulars like caste community and their economic back ground. To some extent it will reveal which segment has taken the benefit and we can review the whole policy. sivakumar...
unmai - chennai,இந்தியா
2010-08-18 09:39:33 IST
அதிமுக ஆட்சியல் நிறைவேற்றப்பட்ட சட்டம் , கொஞ்சம் குட வெட்கம் இல்லாமல் நா குசாமல் , திருக்குவளை தீயசக்தி பொய் சொல்வது, அதிமுகவிற்கு வரும் கூட்டத்தை பார்த்து பயந்து போய் உள்ளார்,என்பதை தான் கட்டுகிறது...
சிந்தனை செழியன் - சென்னை,இந்தியா
2010-08-18 09:17:56 IST
ஜாதி ஜாதி என்று பேசும் அரசியல்வாதிகளை தயவு செய்து நம்பாதீர்கள். கலப்பு திருமணம் செய்தால் ஜாதி ஒழியும் என்று கூறும் கருணாநிதி அந்த கலப்பு திருமணத்தில் பிறக்கும் குழந்தைகள் கு பள்ளிகளில் சேருவதற்கு ஜாதி சான்றித்சல் கேட்பது எனூ?...
விஜய ராசு - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-18 08:38:52 IST
ராமதாஸ் ஒரு பச்சோந்தி.எப்ப எங்கே எப்படி இருப்பார் என்று தெரியாது இன்று ஓன்று பேசுவார் நாளை ஓன்று பேசுவார்.இவர்களெல்லாம் நாட்டுக்கு தேவையா?...
ரா. ராமஹரி - chennai,இந்தியா
2010-08-18 07:55:49 IST
கோபாலபுரத்து கோப்பெருஞ்சோழன் அவர்களும் , தைலாபுரத்து விலை போகாத மருத்துவரும் தமிழ் நாட்டை கூறு போட்டு குதறி துப்பி மிதித்து விஷ விதை விதைத்து நாசம் செய்து வருகிறார்கள். பிற்பட்டோர் எப்போது முற்பட்டோர் ஆவார்கள்? இனிமேல் பிற்பட்டோர் என்பதை "எப்போதும் எக்காலமும் பிற்பட்டோர்" என்று அறிவிக்க வேண்டியது தானே !. அதிகார போதையில் நாட்டை மறந்து ஓட்டையும் வீட்டையும் மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளனர்.. கடவுள் நிச்சயம் ஏதாவது செய்வார் என்று நம்புவோம்....
shan - singapore,இந்தியா
2010-08-18 07:52:29 IST
"மு க விற்கு பயம் வந்துவிட்டது Dr ராமதாஸ் வேணாம் என்று சொன்னாலும் விட மாட்டார் கூட்டணி வைக்க தவிக்கிறார் "...
rabin - chennai,இந்தியா
2010-08-18 07:13:01 IST
குட் காமெடி...
கூலி - saakkadai,இந்தியா
2010-08-18 07:09:00 IST
கும்பகோணம் முருகன், நன்றாகச் சொன்னீர்கள்! வெறும் வேஷம்!...
மணி - சென்னை,இந்தியா
2010-08-18 07:03:58 IST
மிகவும் பிற்பட்டோர் பட்டியல் உருவாக்கியபோது முதல் சாதியாக தன் /சாதி'யை சேர்த்தவர் சுயநல கருணாநிதி. நல்லவேளை SC பட்டியலில் சேர்க்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. இல்லாவிட்டால் தன் சாதியை அதில் சேர்க்காமல் விட்டிருக்கமாட்டார் மஞ்சத்துண்டு.சாதி ஒழிப்பெல்லாம் வெளிவேஷம். தாழ்த்தப்பட்டோரோடு ஒன்றாக வயலில் கூலிவேலை செய்யும் வன்னியரும் , நரிக்குறவர்களும் இவரது சாதிக்கு இணையாக ஒரே பட்டியலில்! ஏதோ கிடைக்கும் என நினைத்து மீண்டும் மீண்டும் தீயசக்தியோடு கூட்டணி வைத்தது ராமதாசின் தவறே! ....
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-08-18 05:40:15 IST
ஏன்யா ஜோபெட்டு, நேற்றைய உன் கருத்துக்களிலேயே தெரியுது நீ ஒரு முட்டாள் என்று. நான் குறிப்பிட்டது ஒவ்வொரு தொகுதிக்கும் 64 பேர்களை வேட்பு மனு தாக்கல் செய்யவைத்து, வாக்கு சீட்டு முறையை கொண்டுவருவது. அதாவது வாக்கு இயந்திரத்தில் 64 வேட்பாளர்கள் பெயர்களுக்குள் இருந்தால் தான் அது வேலை செய்யும். அதற்க்கு மேல் போனால் இயந்திரம் வேலை செய்யாது. அதனால் 64 பேரை அதிமுக கட்சிகாரர்களை சுயேச்சையாக நிற்கவைத்து வாக்கு சீட்டு முறையை கொண்டு வருவது என்ற திட்டத்தை ஜெயலலிதா தீட்டியுள்ளார். 234*64*5000= 74880000 (7 கோடி ஐம்பது லட்சம் ரூபாய்) தான் ஆகும், இதில் 10 லட்சம் எப்படியா வரும்? உனக்கு கணக்கு உண்மையில் தெரியுமா? நீ படித்தவனா இல்ல படிக்காதவனா? 5000 வைப்பு தொகை அந்தந்த சுயேச்சை வேட்பாளர்கள் செய்யவார்கள் அல்லது உங்கள் தானை தலைவர் மக்களுக்கு வரி பணத்தை வோட்டுக்கு வாரி இறைப்பதை விட 7 கோடி ரூபாய் செலவு செய்தாலே வெற்றி நிச்சயம்... இதை சொல்லுவதில் என்ன கேவலம் இருக்கிறது? நீங்கள் வாக்கு இயந்திரத்தில் கோல் மால் செய்கிறீர்களே, நீங்கள் தான் அசிங்கப்பட வேண்டும். நீங்க வாக்கு பதிவு இயந்திரத்தில் கோல் மால் செய்வீன்கலாம், நாங்க வாயில் விரலை வைத்து கொண்டு போக வேண்டுமாம்... என்ன நியாயம் அய்யா இது? முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும், உங்கள் வழியிலேயே சென்று நாங்கள் வெற்றியை தேட போகிறோம். அஹிம்சை வழியில் சென்றால் நியாயம் கிடைக்காது.......
p.sakthivel - Dharapuram,இந்தியா
2010-08-18 05:39:32 IST
ராமாதாஸ்... ஒரு நிறம் மாறும் பச்சோந்தி. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறிக்கொண்டு தன்னை வளர்த்துக் கொள்பவர். கலைஞர்... தமிழ்நாட்டையே தன் குடும்ப ஆட்சிக்குள் கொண்டுவர நினைக்கும் ஒரு ஆக்டோபஸ். இருவருமே சமூக நீதி பற்றிப் பேச தகுதியற்றவர்கள் !.....
இராமச்சந்திரன் - Virginia,யூ.எஸ்.ஏ
2010-08-18 05:06:19 IST
உங்க ரெண்டு பேருக்குமே துளியளவு கூட விவஸ்தை, வெட்கம் கிடையாது. இது தெருக்குழாய் சண்டையை விட கீழ்த்தரமாக இருக்கிறது. நீங்க எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு முன் பல ஆண்டுகள் முதல்வராக இருந்தீர்களே. அப்போ சமூக நீதி காத்துல பறந்ததா? சும்மா பூக்கூடைக்குள்ள காத போடக்கூடாது. நாற்காலி பூட்டு என்ன பதவி வாங்கலாம் கொள்ளையடிக்கலாம்னு பேசிஇருப்பீங்க..........உங்களுக்கு இப்போ ஜால்ரா போடும் வீர(?)மணி ...ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை-ன்னு பட்டம் கொடுத்தாரே.......அட யாருதான் சமூக நீதியின் காவலர்...தயைசெய்து சொல்லிருங்க...கடைசியா இந்த சமூக நீதி...சமூக நீதி-ன்னு சொல்றீங்களே ...அப்படீன்னா என்ன...? அதை மொதல்ல சொல்லிவிடுங்க தயவுசெய்து......
பொன்மணி - chennai,இந்தியா
2010-08-18 02:46:09 IST
அதிமுகவிற்கு வரும் கூட்டத்தை பார்த்து பயந்து போய் உள்ளார் முதல்வர். ராமதாசை எப்படியாவது தாஜா செய்து தன்னிடம் வைத்து கொள்வார். அதை எதிர்பார்த்தே ராமதாஸ் இப்போது தாக்குதல் கொடுத்து வருகிறார்....
Rajan சவுதி ரியாத் அசிசியா - செட்டிகுளம்,இந்தியா
2010-08-18 01:55:17 IST
வன்னியர்களுக்காக குரல் கொடுத்து கொடுத்து இழக்க கூடாததெல்லாம் இழந்து நடு வழியில் வந்து நிற்கிறோமே உங்களுக்கு கண்ணே இல்லையா .. தயவு செய்து யாராவது கூட்டணியில் சேர்த்துகொள்ளுங்கள். இனி யாருக்கும் குரல் கொடுக்கமாட்டோம்....... ஆங்...ஆங்க்க்...............அம்மா ...அப்பா........
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-08-18 01:46:46 IST
நீங்கள் இருவரும் இருக்கும் வரை இந்த தமிழ்நாடு உருப்படவே உருப்படாது என்பது இதிலிருந்து "மிக"த்தெளிவாய் தெரிகின்றது. உமக்கு ஒரு தனியாய் நாற்காலி ஒன்றும் உம்மை "ஆஹா" ஓஹோ" என்று புகழ்ந்து விட்டால் அதையே நீர் மிகப்பெரிதாய் எண்ணிக்கொண்டு "நெஞ்சுக்கு" நீதியில் பதிந்து வைத்துகொண்டு பின்னாளில் அதை திரும்ப திரும்ப படித்துகொண்டு "இன்றைக்கு" புலம்புகின்றீரே அதுவே உமது வாடிக்கையாய் போனது..இது தமிழகத்தின் தலை எழுத்து..புகழ்ச்சி போதை ஒன்றே உமது "பலவீனங்களுள்" மிக பெரிது. என்றைக்கோ யாரோ "மேடை"மரியாதைக்காக சொன்னதையே நீர் பெரிதாய் நினைத்து "மயங்கி" நிற்பது உமது அறியாமையை காட்டுகின்றது..நீரும் உமது அரசியல் அனுபவமும்..கேவலமாய் இருக்கின்றது..சாதி பெயரை சொல்லியே காலத்தை ஓட்டிவிட்டீர்..சமயங்களில் அதையே "சாக்காய்"வைத்து..அழுது அறிக்கை விடுவதும் அதை நாங்களும் படித்து இப்படி மனம் நொந்து உம்மை வைவதும்..வெட்கமைய்யா..சீ என்ன மனிதர்களோ.....
சீ.முருகன் - கும்பகோணம்,இந்தியா
2010-08-18 01:30:38 IST
ஐயா முதல்வரே!இந்த ஒதுக்கீடு எல்லாம் கோபாலபுரம் வீட்டில் இருந்து ஒன்றும் எடுத்து கொடுத்து விடவில்லை. அதுபோகட்டும் இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று கூறியது எந்த விகிதத்தில் பொருந்தும். கடவுள் இல்லை என்று கூறிவிட்டு ரமலான் நோன்பு கஞ்சி குடிக்க சென்றது மட்டும் எந்த வகையில் பொருந்தும். இதில் யார் திருடர்....
அப்துல் jalil - trichy,இந்தியா
2010-08-18 01:13:29 IST
கருணாநிதி முதல்வராக வந்தால் தான், சமூக நீதியைக் காப்பாற்ற முடியுமென்று முழக்கமிட்டவர் ராமதாஸ்' அன்று தனது மக்களுக்கு ( வன்னியர்). இன்று மகன் வளர்ச்சி க்கு உதவாததால் (MP )...
நஞ்சப்பன் - namakkal,இந்தியா
2010-08-18 00:57:04 IST
இவருக்கு பிச்சுகிச்சுன்னா சொரிய எத வேணுன்னாலும் ஞாபகப்படுத்துவாரு. எல்லாம் கோவையும் திருச்சியும் படுத்தின பாடு !...

கருத்துகள் இல்லை: