கௌசல்யாவின் படிப்புச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும், இந்த கொலையில் நேரடி தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த கொலை சதித்திட்டத்தை தீட்டிய, அதற்கு தூண்டுதலாக இருந்த கௌசல்யாவின் குடும்பத்தாரை, குறிப்பாக அவரது தாயாரை கைது செய்ய வேண்டும்.
'சாதி ஆணவக் கொலை நடைபெறுவதற்கான அச்சுறுத்தல் இருந்தும் அதைத் தடுக்கத் தவறும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி சங்கரும், கௌசல்யாவும் தொடர்ச்சியாக அச்சுறுத்தலைச் சந்தித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கூறியும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க காவல் துறை தவறிவிட்டது. காவல்துறை நடவடிக்கையால் ஊக்கம் பெற்ற கொலைகாரர்கள் சங்கரைக் கொலை செய்துள்ளனர். எனவே இதில் தொடர்புடைய பழனி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் காவல் நிலைய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரின் கல்விக் கடனைத் திருப்பி செலுத்தும் பொறுப்பைத் தமிழக அரசே ஏற்க வேண்டும், சாதி ஆணவ கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
தற்போது இளைஞர்கள் மத்தியில் சாதிய உணர்வு தூண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே சாதி ஆணவத்தை, சாதி வெறியைத் தூண்டக்கூடிய சக்திகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய கட்டமைப்பு, சாதிக்கு எதிராக மனிதநேயத்தை முன்னிறுத்தி தமிழக அரசே பரப்புரை செய்ய வேண்டும். தேர்தலில் அரசியல் கட்சிகள், சாதிய கட்சிகளுடன் உடன்பாடு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மாதர் சங்கம் வலியுறுத்துகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
-ச.ஜெ.ரவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக