![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5sRXTWG_gZuAWmyuiWJxeozxuUgx1Eeaohig-3b1d5TIWb8AleWhKdphuQv9fwSRZkrB7B8ytnCw7nHHQUw2EEGjkhTvqtc3qZS33LpptupQLW7PdTqKYoamYm-PfLMkto3h6zlNipjA/s200/bala3.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjzbL8jyRewpeUahjIxblQJ1NOUNECGS5LGZnroeXTzx1JhX0WIlJyUG5LP_AZxDUi7sHvjsWADjAg3txvWV4hfZi6Cw1yeu4x_k2BFS5kH3b5qfa-_ujatXG2Dj1fkh7tPr0TQOlj-vM/s200/07tvf_ozhimuri_GNG_1201229g.jpg)
நான் கடவுள்....ஆம்பிளை கடவுள். அதாவது பெண்களின் கற்பு கௌரவம் மற்றும் பெண்மை அல்லது பாரம்பரியம் இன்னும் என்னனவோ காரணங்கள் இருப்பதாக ஆண்கள் கருதினால் அந்த பெண்ணை கொல்வது அவளுக்கு நீங்கள் செய்த சேவையாகும். இதுதான் ஜெயமோகன் எழுதி பாலா இயக்கிய நான் கடவுள் படத்தின் செய்தியாகும்
.
என்னன்னவோ காரணங்கள், இந்துமதம், சந்தன தர்மம், அஹம் பிரமச்வாமி, சுகம் மனித இறைச்சி என்று பித்தலாட்டங்கள் எல்லாம் படம் பிடித்தாலும் சொல்ல வந்த கருத்து என்னவென்றால்: கதாநாயகியின் புனிதத்தை காப்பாற்ற அவளுக்கு பூலோகத்தில் இருந்து அந்த ஆம்பிள சுவாமி விடுதலை கொடுத்தான்.
இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெண்களுக்கு கொடுக்கும் மரணதண்டனைதான் அந்த வரம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLrw_Ex0OJG5P3Tqkdx48QzXxq4w3d55qs3dg1S0Psz908-uNu2x0h03ZrxCa1svR0LY93SYuhtJneZq9dNr7Xi-aMNSRIz-hi25GRH3QY2pxcgin8KCX7bclqrXwn5bxGMpLOXxDJOW8/s320/naan-kadavul-new-more-stills07.jpg)
கணக்கான சமயங்கள் கலாச்சாரங்கள் தோறும் காலத்துக்கு காலம் இடம்பெற்று இருந்தமை வரலாற்று சோகம்.
இந்த காட்டுமிராண்டித்தனம் இன்னும் இந்தியா பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் தொடர்வது மனித சமுதாயம் வெட்கி வேதனை படவேண்டிய விடயமாகும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrf2viCkPjDP0YCVjqKo7DKbIVWS_lmCB_-NQfCbOikhafkvta4VWgjUcfMrwF5JxHQOi-5JRPi8jdle_J8XTXF17eZ0UyR3e1u_sJQ8OnHfCofrz6bVm2Y4UV2NJifS_5_J47UnzJAqo/s200/nankadavulfgfhfhfhfh.jpg)
நான் கடவுள் படத்தை பற்றி எதுவுமே சொல்ல தோன்றவில்லை .
எத்தனையோ நல்ல காட்சிகள் எல்லாம் இருந்தும் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல பெண்ணை கொலை செய்வது இந்து தர்மத்தை காப்பதற்காக அல்லது அவருக்கு விடுதலை கொடுப்பதாக காட்டியது மிக
பெரும் குற்றம்.
தமிழ் சினிமா பெண்களை சாட்சாத் அம்பிகை ஸ்தானத்தில் வைப்பதாக கூறிக்கொண்டு ஒரு கடைத்தர மஞ்சள் பட ரேஞ்சுக்கு காட்டுவது அந்த கால எம்ஜியாரில் இருந்து தொடர்கிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE7Tk1jaG29VH-GZqqK1PrJ8rdVBJXb0TNSUxbulSYA4pPxTbGlsP6A1IraeMlOgHE10q3VYxYeRFcGorI932C1flZdHR-er-G2Th_1H79E-0procC_3jYLPuBqBz8rCcSmWJ4_47MbuM/s320/naan-kadavul6r7r.jpg)
பழைய பாலச்சந்தர் பெண்களை வேண்டும் என்றே கெட்டுபோவதாக காட்டி Erotic blue film எடுத்துவிட்டு... பின்பு இந்து அல்லது பாரத தர்மத்தை காப்பதற்காக அவளை கொன்றுவிடுவார்.
இந்த புதிய பாலாவும் அதைதான் இன்னும் பலபடிகள் முன்னேறி பயங்கரமாக கழுத்தை கடித்து கொன்று விடுகிறார்.
நமக்கு என்னனவோ விபரீதமான சந்தேகம் எல்லாம் வருகிறது. தம்பி பாலா RSS சிடம் அல்லது வேறு சமய பயங்கரவாதிகளிடம் கொள்கை பரப்பு
செயலாளர் பதவி பெற்று விட்டாரோ? cinepass.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக