பழம்பெரும் நடிகை ஜமுனாவுக்கு நடனதபஸ்வினி என்கிற விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. அப்போது சினிமா உலகம் குறித்து அவர் கோபத்துடன் பேசினார். அவர் கூறியதாவது: நான் சினிமா பார்த்து பல காலம் ஆகிறது. என் பேரன் விருப்பப்பட்டதால் பாகுபலி படம் பார்த்தேன். அது ஒரு ஸ்டுப்பிட் படம். வரலாற்று சிறப்புமிக்க படம் என்று எடுத்துவிட்டு படம் முழுவதும் விஷுவல் எஃபெக்ட் காண்பித்து அதை நிறைவு செய்திருக்கிறார்கள். தற்போதைய புதிய தொழில்நுட்பம் தவிர அதில் சொல்லும்படி ஏதும் இல்லை. கதாநாயகனைத் தவிர இதர கதாபாத்திரங்களுக்குச் சரியான தேர்வு இல்லை என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக