.vikatan.com/author/456-jayavel-அபினேஷ் தா :
சட்டமன்றத் தேர்தலுக்கு ‘நமக்கு நாமே’ திட்டத்தைச்
செயல்படுத்தியது போல வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க சார்பில்
ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். கடந்த 9-ம்
தேதி திருவாரூரில் தனது பயணத்தைத் தொடங்கியவர் ஒவ்வொரு கிராமமாகச் சென்று
மக்களைச் சந்தித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து தனக்கென அமைக்கப்பட்ட சிறிய மேடையில் அமர்ந்து மக்களிடம் குறைகளைக் கேட்கத் தொடங்கினார். பெண்கள் ஒவ்வொருவராக எழுந்து கிராமத்தில் உள்ள பிரச்னைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். ``ரோடு ஒரே குண்டும் குழியுமா இருக்குதய்யா, இந்த ஊருக்கு நல்ல ரோடு வேண்டும்; குடிக்கத் தண்ணியே இல்லை… காலி குடத்தைத் தூக்கிக்கொண்டு தெருத்தெருவா அலையுறோம்; இந்த ஊருக்கு எரிமேடையே இல்லை. ஊரில் ஆடு மாடு போவதற்கு வழியில்லை. 100 நாள் வேலைக் கிடைப்பதில்லை. பொங்கல் பரிசு 1,000 ரூபாய் இன்னும் கொடுக்கவில்லை” என ஒவ்வொரு பெண்களாகப் பிரச்னைகளைச் சொல்லத் தொடங்கினார்கள். ஒரு பெண் பிரச்னைகளைப் பாட்டாகப் படித்தார். இதனால் கிராம மக்கள் மத்தியில் ஒரே சிரிப்பலை எழுந்தது.
அடுத்துப் பேசிய பெண் ஒருவர், “நிறைய பேர் மது குடிக்கறாங்க அதனால மதுவை நிறுத்துவோம்னு சொன்னீங்க… இப்ப இருக்குற ஆட்சியில கொஞ்ச நாள் மூடிய கடைகளைத் திரும்பவும் திறந்துட்டாங்க. இதற்கு எங்களால் ஒரு நிரந்தர தீர்வு காண முடியல. நீங்க முதல்வரா வந்தா, உங்களால் இதற்குத் தீர்வு காண முடியுமா? சொல்லுங்கய்யா…” என்றதும் கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்கத் தொடங்கினார்கள். ஆனால், அந்தப் பெண் பேச்சை நிறுத்தாமல் கோபமாக, “எல்லோரும் சிரிக்கறாங்க… இந்த மதுவால நாங்க குழந்தைகளை வைத்துக்கொண்டு அழுகிறோம். உங்களால் நிறுத்த முடியுமாய்யா… சொல்லுங்கய்யா…” என விடாமல் திரும்ப திரும்ப அழுத்தமாகக் கேட்டார். இதற்குப் பதில் அளித்த ஸ்டாலின், ``நாங்க ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம்னு தேர்தல் உறுதி மொழி கொடுத்திருக்கிறோம். நீங்க படித்துப் பார்தீங்களா?’’ என்றார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக