சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்து வந்த இரு இளம் பெண்கள் பாலியல் கொடுமை புகார் கொடுத்துள்ளனர்.
அதில் சசிகலா புஷ்பா நிர்வாணமாக படுத்துக் கொண்டு மசாஜ் செய்யச் சொன்னதாகவும், அவரது கணவரும், மகனும் பாலியல் இச்சைக்கு ஆளாகுமாறு தங்களைக் கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருந்தனர்.
அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக சசிகலா புஷ்பா குடும்பத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவரும் காலையில் தனது குடும்பத்தோடு ஆஜரானார். அவரிடம் மாலை வரை போலீஸார் விசாரணை நடத்தினர் tamiloneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக