![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZSzON37NphpqT997_a6fZ_aNJ8rBQopjiWmVqAd3cSyP0vKveTzE8uF6OMRQFZ7kfRwDpQzQuaU5tFB3t-nrkFViFAZrFrVUCmtDyDu_hxZYPq4KCrxduxeeBLGSj68S4LHKJp_ZN-4Q/s1600/ssaaaaaaaaaaa.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixjal0aw8s4J6ahQDdMw733ZO3H5gWexBrgA1NV48drHHYLJ05rBAgbUg0id3hIzK8iuXWXYLD8PFw2PHym2somZOtFvU_HDAMSwgaXAXWbc6k5o5CJP6CyvWJs-yDdzOTsX-YdB4drzg/s1600/imagesfeeee.jpg)
கடந்த 2004 ஆம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு பேர் எண்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் மோடியை கொல்ல சதிதிட்டம் தீட்டியதால் இந்த எண்கவுண்டர் நடந்ததாக கூறப்பட்டது.;இது குறித்து விசாரணை நடத்திய சிபிஐ இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோர் போலி எண்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் சம்பவத்தில் பாண்டே,சிங்கால் உள்ளிட்ட இரணடு போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில் சிங்கால் ஒரு சிடி ஆதாரத்தை சிபிஐயிடம் வழங்கியுள்ளார். அந்த ஆடியோ சிடி 70 நிமிடம் பதியப்பட்டுள்ளது. அதில் மோடியின் தனி செயலாளரான ஜி.சி. முர்மு, ஏ கே சர்மா உள்ளிட்ட அமைச்சர்கள் எண்கவுண்டர் வழக்கு குறித்து பேசுவது போல் அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் புதியதாக சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக