திங்கள், 5 செப்டம்பர், 2011

சோனியா, ராகுல், சிதம்பரத்துக்கு நக்சலைட்டுகள் குறி?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் நக்சலைட்டுகள் தாக்குதல் பட்டியலில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலம், தம்தாரி மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகளைத் தேடும் பணியில் மத்திய போலீஸ் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடர்ந்த காட்டுக்குள் ஒரு முகாம் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அந்த முகாமில் யாருமே இல்லை.

அங்கு சோதனை நடத்தியதில் ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கிடைத்தன. மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரது புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த 4 பேரும் நக்சலைட்டுகள் தாக்குதல் பட்டியலில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கருத்துகள் இல்லை: