ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனைக்கு பதிலாக சாகும் வரை சிறை


கும்பகோணம்: ராஜிவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்
பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு பதில் சாகும் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும் என மணிசங்கர் அய¢யர் எம்பி தெரிவித்
தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளாட்சி தேர்தல் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் மணிசங்கர் அய்யர் எம்பி பேசியதா
வது:
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம் அல்லது  தனித்து போட்டியிடலாம். 2009 பாராளுமன்ற தேர்தலில் எனக்கு துரோகம் செய்தவர்களும், கூட்டணிக்கு துரோகம் செய்தவர்களும் உண்டு.
அதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும் துரோகங்கள் தொடர வாய்ப்புள்ளது. அதை தாங்கக்கூடிய, முறியடிக்ககூடிய சக்தி, ஆற்றல் உள்ளவர்கள் தைரியமாக தேர்தலில் போட்டியிடுங்கள். உங்களுக்கு துணைநின்று நான் வாக்கு சேகரிக்கிறேன்.
ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனைக்கு பதில், சாகும் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும். இதேபோல் அஜ்மல் கசாப்பையும் தூக்கில் போடாமல், சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும்.
ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைத்தால் அவர்கள் விடுதலையாகி வெளியே வந்து மீண்டும் ஒரு முதல்வரையோ, பிரதமரையோ கொலை செய்யவும் வாய்ப்புள்ளது.
எனவே, ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆ சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு மணிசங்கர் அய்யர் பேசினார்.

கருத்துகள் இல்லை: