சனி, 28 ஆகஸ்ட், 2010

எஸ்.ஜே.சூர்யா புலி படத்தின் புலி பாய்வதில் சிக்கல்

குஷி, வாலி படங்களின் மிகப்பெரிய வெற்றியால் இளமை இயக்குனர் என்று பேசப்பட்டவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் பிறகு தானே இயக்கி, நடித்த நியூ படத்தினைத் தொடர்ந்து நடிகனாகவே வலம் வந்தார். இப்படி இவர் நடிகனாக நடித்தப் படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லாமல் போனது. இந்நிலையில் மீண்டும் இயக்குனராக களமிறங்கினார் தமிழில் அல்ல தெலுங்கில்.
கடந்த இரு ஆண்டுகளாக தெலுங்கில் இவர் இயக்கி வந்தப் படம் ‘புலி’. இதில் பவன் கல்யாண் நாயகன். இவர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். தெலுங்கில் மூத்த முன்னணி நடிகரான பவன் கல்யாண் இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு துறைகளில் வல்லவராவார். இவரின் ‘பத்ரி’ போன்ற பல ஹிட் படங்கள் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன எனபது தனிச் செய்தி. அது ஒரு புறமிருக்கட்டும். தற்போது பவன் கல்யாண் நடித்துள்ள புலி படத்தின் நாயகி புதுமுகம் நிகிஷா.

தனது ஒவ்வொரு படத்திலும் கவர்ச்சிக்கு கொடிபிடிக்கும் சூர்யா, புலி படத்தில் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு ஸ்ரேயாவை ஆடவைத்துள்ளார். (ம்ம்ம்... பாத்துங்க, இதுக்காக தணிக்கை குழுவினருடம் சண்டை பேட்டுக்க போராரு)
படம் முடியும் தருவாயில் இருக்கும் போது ‘புலி’ படத்தின் தலைப்பினை "கொமரம் புலி' என மாற்றியுள்ளனர். இதனாலேயே புலி பாய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்...

கொமரம் பீம் என்பவர் தெலுங்கானா போராட்டத்தில் முக்கியமானவராக உள்ளார். எனவே கொமரம் என்ற பெயருக்கு ஆந்திராவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைப்பில் இருந்து கொமரம் என்ற பெயரை நீக்குமாறும் இல்லையென்றால் வழக்கு தொடருவோம் என்றும் ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். இரண்டு வருட உழைப்பில் படம் உருவாகியிருப்பதால் படத்தின் வெளியீட்டில் தாமதம் வேண்டாம் என நினைத்த எஸ்.ஜே.சூர்யா கொமரம் என்ற தலைப்பை மாற்றலாம் என கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால் அதற்கு நடிகர் பவன் கல்யாண், ‘ஏற்கனவே தெலுங்கில் கொமரம் பீம் பற்றி படம் வெளிவந்துள்ளது. எனவே இந்தத் தலைப்பை நீக்க வேண்டிய அவசியம் இல்லை’ என எதிர்க் கருத்து தெரிவித்துள்ளாராம். இதனால் இயக்குனருக்கும், நடிகருக்குமிடையே டிஷ்யும் டிஷ்யும்மாம்.. இந்தச் சிக்கலால் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக இருக்கு...

கருத்துகள் இல்லை: