வியாழன், 26 ஆகஸ்ட், 2010

சீமான் வேலூர் சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.

சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் நேரில் சந்தித்தார்.   இந்த சந்திப்புக்கு பிறகு அவர்,  சீமானை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறார்.
சீமானை விடுதலை செய்யக்கோரி பல்வேறு அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் இன்று சீமான் வேலூர் சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். 

சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் அட்வைசரி போர்டு முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார்.

இதற்காக இன்று காலை 8.10மணிக்கு வேலூர் ஜெயிலில் இருந்து சென்னை கொண்டு செல்லப்பட்டார். இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

கருத்துகள் இல்லை: