சனி, 28 ஆகஸ்ட், 2010

உலக பெண் சாரணிய அமைப்பின் நூற்றாண்டு விழாவிற்கு யாழ் மாவட்டத்திலிருந்து 36 பெண் சாரணர்கள் மலேசியா செல்கின்றனர்

உலக பெண் சாரணிய அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முகமாக மலேசியாவில் நடைபெற இருக்கும் ஒன்று கூடலில் பங்குபற்றுவதற்காக யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 36 பெண் சாரணர்கள் இன்று (27) யாழிலிருந்து புறப்பட்டனர்.

யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் பெண் சாரணர்களை வழியனுப்பும் வைபவத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சார்பில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் அவர்கள் கலந்து கொண்டார்.

இக்குழுவினர் நாளை கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து கோலாலம்பூர் புறப்படுவர். இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: