வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மதுபானம் போதைப் பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருபவர்களுக்கு அரச ஆஸ்பத்திரிகளில் ஜனவரி முதல் கட்டணம்

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனை காரணமாக நோய்க்கு உள்ளாகி அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெற வருபவர்களிடம் சிகிச்சைக்கான செலவு அடுத்த வருடம் முதல் அறவிடப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படவிருக்கின்றது. மாறாக திறைசேரி பணம் திரட்டும் நோக்கம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: