திங்கள், 29 நவம்பர், 2010

முஸ்லிம்களை வெளியேற்றி ethnic cleansing செய்ததை எந்த முகத்தோடு நியாயப்படுத்தப் போகிறோம்?

அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்  (பகுதி 2)
ஜோர்ஜ் இ,குருஷ்சேவ் (தாயகம்)
வெளியில் போனால் இரவில் பெண்;பிள்ளைகளுடன் வாழ்வது பயம் என்று முகாமில் இருக்க முடிவு செய்தவர்களின் உறவினர்களையும் காட்ட முடியும்,

தெய்வம் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காதது போல. மக்கள் வதைமுகாமுக்குள் வதைக்கப்படுகிறார்களாம்? ஆடு நனைகிறது என்று இந்த இரத்தவெறி பிடித்த ஓநாய்கள் அழுகின்றன,

மனித உரிமை மீறல்கள்,,, அது பெண்;கள் மீதான வன்முறையாக இருந்தால் என்ன? தங்கள் வாழிடங்களில் வாழ முடியாமல் தடுத்து நிறுத்தப்படுவதாக இருந்தால் என்ன? குற்றம் சாட்டும் போது. ஆதாரங்களுடன் வெளியிடும் போது தான் அதற்கு வலிமை இருக்கும், அது குறித்து மேலதிகமாக நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க முடியும், புலன் பெயர்ந்த தமிழர்களைக் குசிப்படுத்துவதற்காக. தமிழக அரசியல்வாதிகள் பாணியில்,,, அங்கே தமிழ்ப் பெண்;களின் மார்பகங்கள் அறுக்கப்படுகின்றன என்று உணர்ச்சிப் பேச்சுப் பேசுவதால்; எந்தப் பயனும் இல்லை,

சரி. கற்பழிப்பு. கொடுமை என்கிறீர்கள், உங்களில் யார் சர்வதேச மன்னிப்புச் சபை. மனித உரிமைகள் கண்;காணிப்பகத்துடன் இங்கே தொடர்பு கொண்;டு. அங்கே இன்னாருக்கு இன்ன நடந்தது. இது குறித்து ஆவணப்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் நோக்கம் எல்லாம் இந்த தமிழ்ப் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு இந்த புலன் பெயர்ந்த கூட்டத்தைக் குசிப்படுத்தி காசு பண்ணுவது மட்டும் தான்,

எங்கள் எதிரி மீதான
obsession    எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்;டும் என்பதற்காக எங்கள் மூக்கை நாங்களே அறுத்துக் கொள்ள வைக்கிறது, அகதி முகாம்களை வதை முகாம்கள் என்றோம்,,, கிட்லரின் உழnஉநவெசயவழைn உயஅp  வதை முகாம்களோடு ஒப்பிட்டு, அவர்கள் எல்லாம் விசவாயு அடித்துக் கொல்லப்படுவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று,

கனடாவிலும் அமெரிக்காவிலும் இரண்;டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியர்கள். ஜெர்மானியர்கள். இத்தாலியர்கள். உக்ரேனியர்கள் என நேசநாடுகளுடன் எதிர்த்துப் போரி;ட்ட நாடுகளின் வம்சாவளியினர் i
internment camps  எனப்படும் முகாம்களில் உளவுக்குற்றச்சாட்டிலும் ஆதரவு வழங்கிய சந்தேகத்திலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள், ழேலியல் விஞ்ஞானி டேவிட் சுசுகி கூட இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர் தான், இந்த வாரம் கூட ரொறன்ரோ ஸ்டாரில் இத்தாலியர்கள் கனடாவில் இவ்வாறு அடைக்கப்பட்டிருந்ததை ஆவணப்படுத்துவதற்கு மத்திய அரசு தடுத்து வைக்கப்பட்டிருந்த இத்தாலியர்களிடம் விபரம் கேட்டிருக்கிறது,

இப்படியான தடை முகாம்களை இனப்படுகொலை செய்வதற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் க்pட்லரின் வதை முகாம்கள் என்று நாங்கள்,,, ஓநாய் வருகிறது என்று கூச்சல் போட்டுக் கொண்;டிருந்தோம், யாருமே கண்க்கெடுக்கவில்லை,

இந்த முகாம்களில் விபசாரம் நடக்கிறது என்று வாய் கூசால் அன்று அபலைகளாக வந்திருந்த எல்லாப் பெண்;கள் மீதும் விபசார முத்திரை குத்தினோம், எங்களுக்கு எங்கள் மூக்கு போனது பிரச்சனையில்லை, எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்;டும் என்பது முக்கியம்,

மகிந்த மீது இனப்படுகொலை மீதான விசாரணை; நடக்க வேண்;டும் என்று கூக்குரலிடுகிறோம், இங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்த போது கூட. கனடிய ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த தமிழ் புத்திசீவிகளும் இனப்படுகொலை என்று கிளிப்பிள்ளை போலச் சொல்லிக் கொண்;டிருந்தார்கள், காரணம் பொஸ்னியாவில். டோனில். றுவார்;டாவாவில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேசம் காட்டிய அக்கறையை எங்களிடம் காட்டும் என்ற அற்ப நம்பிக்கையில்,

இனப்படுகொலை என்பதற்கான வரைவிலக்கணம் என்ன? கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பது உண்;மை, ஆனால் தமிழர்கள் எல்லாரும் கொல்லப்படவில்லை, தமிழர்கள் என்ற வெறும் காரணத்திற்காக. போராட்டங்களில் எந்த சம்பந்தமும் இல்லாத எல்லாத் தமிழர்களையும் கொன்றால் அது இனப்படுகொலை, ஜெர்மனியில் யூதர்களுக்கும் றுவார்;டாவில் ருற்சிகளுக்கும் பொஸ்னியாவில் முஸ்லிம்களுக்கும் நடந்தது இதுதான்;, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டதை
massacre, slaughter     எனறு யுத்தக் குற்றங்கள் என்ற வரையறைக்குள் அடக்கலாமே தவிர. இனப்படுகொலை என்று நாங்கள் சர்வதேசத்தை நம்ப வைக்க முடியாது, தீவிரவாதிகளை அழிக்கும் நோக்கத்தில் அப்பாவி மக்கள் செறிந்த இடங்களில். தீவிரவாதிகள் மறைந்திருந்தாலும் குண்;டுதாக்குதல்கள் நடத்துவது யுத்தக் குற்றங்களுக்குள் அடங்கும், தெரிந்து கொண்;டு திட்டமிட்டு மக்கள் அழிவைக் கருத்தில் எடுக்காமல் நடத்தும் தாக்குதல்கள் சர்வதேச கண்;டனத்திற்குரியவை, அதைச் சாதகமாக்கி யுத்தக் குற்றங்களுக்கு விசாரணை; நடத்த வேண்;டும் என்று கோருவது நியாயமானது, ஆனால் இன அழிப்பு என்று கூச்சல் போடுவது அந்த நியாயத்தை மழுங்கடிக்கவே உதவும் என்பதை இவர்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை, தமிழர்கள் எல்லோரும் கொல்லப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் எப்படி கொழும்பு வந்து கனடாவில் அகதிளாகுகின்றீர்கள் என்று கேட்க மாட்டார்களா?

வை,கோ. சீமான் சொல்லும் தமிழ்ப் பெண்கள் கதறக் கதற கற்பழிக்கப்படுகிறார்கள். தமிழ்த் தாய்மாரின் மார்பகங்கள் அறுக்கப்படுகின்றன என்பதெல்லாம் இனஅழிப்பு விசாரiர்யில் சாட்சியமாகப் பயன்படுத்த முடியாது, யுத்தக்குற்றத்திற்கான ஆதாரங்களைத் தேட நீங்கள் எங்கே ஒற்றுமையாக இருக்கிறீர்கள் நீங்கள் ஆளை ஆள் துரோகி என்று புலிகளின் சொத்துக்களைக் கைவசப்படுத்த சண்;டை போட்டுக் கொண்;டிருக்கிறீர்கள்,

Genocide என்று கூச்சல் போட்ட நாங்கள் தான் முஸ்லிம்களை வெளியேற்றி
ethnic cleansing   செய்ததை எந்த முகத்தோடு நியாயப்படுத்தப் போகிறோம்? வெள்ளைக் கொடியோடு வந்த புலிகளின் தலைவர்களை படுகொலை செய்தது பற்றி நாங்கள் குமுறுகிறோம், சரணடைந்தவர்களைக் கொல்வது யுத்தக் குற்றம் தான்;, ஆனால் இதே புலிகள் தான் மக்கள் வெள்ளைக் கொடிகளோடு தப்பிச் செல்லும்போது சுட்டு விட்டு இராணுவம் சுட்டது என்று வெளிநாட்டில் செய்தி வெளியிட்டார்கள் என்ற உண்மையை மறந்து விடுகிறோம், மக்கள் போக விரும்பவில்லை. புலிகளோடேயே இருக்க விரும்புகிறார்கள் என்று சொன்ன நடேசன். எந்த முகத்தோடு வெள்ளைக் கொடியைத் தூக்கிக் கொண்;டு தன்னுடைய உயிரைக் காப்பாற்ற எதிரியிடம் சரண்டைந்தார் என்ற கேள்வியை இன்று வரைக்கும் கேட்க ஒருவரும் தயாராயில்லை, காரண்ம். தங்களுடைய தறுதலைகளின் பொட்டுக் கேடுகள் வெளியில் வந்து விடும் என்ற பயம்,

யுத்தக்குற்றச்சாட்டுக்கள் பற்றிச் சொல்வோர் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள மறந்து விடுகிறார்கள், ஐ,நாவோ. சர்வதேச ச்முகமோ நாங்கள் கேட்பது போல. மகிந்தவை மட்டும் விசாரணைக்குட்படுத்தாது, இந்தக் கோரிக்கை
double edged sword   என்பது போல. எங்களையும் வெட்டித் துண்;டாடும், ஆரம்பத்திலிருந்தே ஐ,நாவும் மற்ற சர்வதேச அமைப்புகளும் புலிகள் மீதும் யுத்தக் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்;டும் என்றே கூறி வருகின்றன, அவ்வாறான நிலை வரும் போது. அரசு என்ன செய்யும். தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கே,பி தொடக்கம் புலிகளின் இடைமட்டத் தலைவர்களைப் பயன்படுத்தி. புலிகளின் யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்தும், அதற்கு நாங்கள் தயாரா நாங்கள் தான் எதிரியின் சகுனம் பிழைக்க எங்கள் மூக்கை அறுக்கும் பழக்கமுடையவர்கள், எதிரியை அவமானப்படுத்த வேண்;டும் என்ற ஒரே நோக்கில் அதற்கும் நாங்கள் தயாராக இருப்போம்,

மகிந்தவை மட்டும் குறை சொல்லிக் கொண்;டிருக்கிறோம், யாழ்ப்பாண்த்திலிருந்து வந்திருந்த ஒரு குருவானவரிடம் கேட்டேன்,,, தமிழர்களை புலனாய்வுத் துறை கடத்திக் கொல்வதைப் பற்றி,

அவர் ஒரு வார்த்தையில் சொன்னார்,,, அட. இவங்கள் செய்யாத என்னத்தை அவங்கள் செய்தாங்கள்

அரசியல் வேலைக்காக என்று வந்து ஆடிய ஆட்டத்தால் அவ்வளவுக்கு புலிகளால் மனம் சலித்துப் போயிருந்தவர்கள் யாழ்ப்பாண்த்தவர்கள், புலிகளை விட. இராணுவம் பரவாயில்லை என்ற மனநிலையில் இருந்தார்கள், நாங்கள் இங்கே இருந்து கொண்;டு மகிந்த மீது கறுவிக் கொண்;டிருக்கிறோம்,,, எங்கள் தறுதலையின் சேட்டைகளைப் பற்றிக் கதைக்காமல்?

அடுத்ததாக. நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள்
victims    என்ற முகமூடியுடன் அனுதாபம் தேடத் தொடங்கியிருக்கிறோம், நாங்கள் அப்பாவிகளைப் போட்டு அடிக்கும் போது தட்டிக் கேட்பவர்களைப் பார்த்து. பேசாமல் உன்ரை வேலையைப் பார் என்று சொல்கின்ற நாங்கள் எங்களுக்கு அடி விழும்போது ஐயோ. இந்த அநியாயத்தை கேட்பார் யாருமே இல்லையா என்று ஒப்பாரி வைப்பது எங்கள் பழக்கமாகவே இருந்து வருகிறது,

உங்களுக்குத் தெரியும். பள்ளிக்கூடங்களில் சில மாணவர்கள் மற்றவர்களுடன் சொறிச்சேட்டைகளில் ஈடுபடுவார்கள், காரணமில்லாமல் அடிப்பார்கள், ஒரு பெடிப்பிள்ளை ஒருநாள் விசயம் தெரியாமல் ஒரு அப்பாவியின் மேல் கை வைத்திருக்கிறார், அதுவரை நாள் பொறுத்திருந்த அப்பாவி திருப்பி விளாசி விட்டான், இவர் அழத் தொடங்கியிருக்கிறார், வாத்தியார் கண்;டு வந்து கேட்டார், ஆர் சண்;டை தொடக்கினது அப்பாவி சொன்னான். அவன் தான் முதலில் எனக்கு அடிச்சான், மற்றவர் சொன்னார். இல்லை. அவன் தான் முதல்ல எனக்கு திருப்பி அடிச்சான்,

நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் இவ்வாறானது தான், சண்;டையைத் தொடங்கி அடி வாங்கி விட்டு அநியாயத்தைக் கேட்பார் யாருமே இல்லையா என்ற ஒப்பாரி, எங்கட தலைவருக்குத் திருப்பி அடிச்சுப் போட்டான் என்பது தான் எங்களின் பிரச்சனை, ஏன் தலைவர் முதல் அடிச்சார் என்று கேட்க மாட்டோம், ஏனென்றால் அது எங்கள் செல்லப்பிள்ளை,

ரொறன்ரோ நகரத்தைச் சுற்றி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடக்கிறது, நெஞ்சில் அடித்துக் கதறிக் கொண்;டே காப்பாத்து. காப்பாத்து என்று பகிரங்கமாக வெட்கத்தை விட்டு ஓலமிடுகிறோம், பார்த்தால். ரொறன்ரோவின் மையப் பகுதியின் முனையான யூனியன் சப்வே நிலையத்தின் முன்பாக. கெரில்லாச் சீருடையில் நெஞ்சை நிமிர்த்தி ஒரு கூட்டம் போஸ் கொடுக்கிறது, நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். எங்கள் மீது இரக்கம் கொண்;டு காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறோமா இல்லை. பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்ட இயக்கத்தை அங்கீகரித்து எங்கள் பயங்கரவாதத்தை அங்கீகரியுங்கள் என்கிறோமா

தலைவர் இறந்து விட்டார் என்றதும் கருப்பு உடைகளுடன் போய் பகிரங்கமாவே மரணச் சடங்கில் ஒப்பாரி வைத்தது போல கூத்துக் காட்டுகிறோம், நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் ஏன் புலிக் கொடி பிடிக்கிறோம்

யாழ்ப்பாணத்தவர்கள் தங்களை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறும் போது அருவருப்பும் எரிச்சலும் தான் வருகிறது, வன்னி மக்கள் தாங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கருணை காட்டுமாறு கேட்பதில் நியாயம் இருக்கிறது, யாழ்ப்பாணத்தவர்களைப் போல மணி ஓடர் பொருளாதாரத்தை நம்பியிராமல். மண்;ணையும் மழையையும் நம்பி வாழ்ந்த மக்களை எதிரியிடம் கை ஏந்த வைத்தது யார்? அந்த பூமியை ஆக்கிரமித்து அவர்களின் பொருளாதாரத்தைக் கெடுத்ததுமல்லாமல். அவர்களின் குழந்தைகளைப் பிடித்துக் கொண்;டு போய் பலி கொடுத்த கூட்டம் அந்த அகதிகளைக் காட்டிப் பிச்சை எடுக்க முயற்சிப்பதைப் பார்த்து அருவருப்படையாமல் என்ன செய்ய முடியும்?

இன்றைக்கும் யாழ்ப்பாணத்தில் சிங்கள அரசியல்வாதி வந்தால் என்ன? வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் வந்தால் என்ன கண்ணீPரும் கம்பலையுமாய் காணாமல் போன தங்கள் பிள்ளைகளை. கணவன்மாரை கண்;டுபிடித்துத் தருமாறு கெஞ்சும் அந்த மக்கள் தங்களை பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது,

யாழ்ப்பாணம் தன்னை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறும்போது எரிச்சல் வராதா தன் கையில் அதிகாரமும் ஆதிக்கமும் இருக்கும் போது தனக்குக் கீழானவர்களை நாயிலும் கேவலமாக நடத்துவதில் யாழ்ப்பாணம் கை தேர்ந்தது, தன்னுடன் அதே பூமியில் வாழ்ந்த மக்களை தீண்;டத்தகாதவர்கள் என்று சொல்லி கோயில்களிலும் உணவகங்களிலும் சமமாக நடத்தாமல் திமிர் காட்டிய பூமி அது, அந்த மக்கள் தாங்களும் மனிதப் பிறவிகள் என்பதை நிலை நாட்ட எத்தனை போராட்டங்கள் நடத்த வேண்;டி வந்தது. அந்த மக்களை அடக்கி வைத்திருந்த இந்த யாழ்ப்பாணத்திற்கு தன்னை ஒரு பாதிக்கப்பட்டவர் என்று சொல்வதில் வெட்கமாயில்லையா?

மலையகத்திலிருந்து சின்னம் சிறுசுகளைக் கொண்டு வந்து அடிமைகளாக வைத்து வேலை வாங்கியது தானே இந்த யாழ்ப்பாண்ம். பழஞ்சோறு கொடுத்து. கொதி எண்;ணெய் ஊற்றி. நஞ்சு வைத்துக் கொன்று என யாழ்ப்பாணம் செய்த கொடுமைகளை நேரில் கண்;டவன் நான், அங்கே சாப்பாடு இல்லாமல் கிடந்ததுகளுக்கு கொண்டு வந்து சாப்பாடு குடுத்தனாங்கள் தானே என்று ஏதோ புண்ணியம் செய்த திமிர்க்கதை கதைத்து இந்த யாழ்ப்பாணம், இந்த சமூகத்திற்கு தன்னை ஒரு பாதிக்கப்பட்டவர் என்று ஒப்பாரி வைக்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

அந்த மண்ணில் நூற்றாண்;டுகளாக வாழ்ந்த இஸ்லாமிய மக்களை சொத்துக்களைப் பறித்து மர்p நேரத்திற்குள் விரட்டிய போது. கயிறு கட்டிப் பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்று கயிறு திரித்தது தானே இந்த யாழ்ப்பாணம், தன் மீது இரக்கம் காட்டு என்று சர்வதேச சமூகத்திடம் மன்றாட இந்த சமூகத்திற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

மட்டக்களப்பிலிருந்து ஈழத்திற்காகப் போராட என்று வந்த போராளிகளை எரியும் டயருக்குள் எறிநத் போது கோலாக் கொடுத்த சமூகம் தானே இது, வன்னியிலிருந்து பிள்ளைகளைப் புலிகள் பிடித்து கட்டாயப் படை சேர்ப்பில் ஈடுபடுகிறார்கள் என்று சர்வதேசமே குற்றம் சாட்டிய போது. அவர்கள் விரும்பிச் சேர்கிறார்கள் என்று புலுடா விட்ட கூட்டம் தானே இது,

ஐயோ. இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா என்று புலம்ப இந்த சமூகத்திற்கு என்ன மனச்சாட்சி இருக்கிறது

அதிகாரத்திலிருக்கும் போது செய்த அநியாயத்திற்கு பட்டு அனுபவிக்கும்போது எவன் வருவான் உங்களை மீட்க..

அநாதைப் பிணத்தைக் காட்டி கிடைக்கும் காசைச் சுருட்டும் திருட்டுக் கூட்டம் போல. அந்த அப்பாவிகளைக் காட்டி புலிகளுக்கு அங்கீகாரம் தேடி. ஈழம் பெறும் முயற்சிதான் நடக்கிறது,

இப்படிக் குத்தி முறிந்து குளறியும் யாருமே ஏன் நாயே என்று கேட்கவில்லை,

விடுமா இந்தக் கூட்டம்

இனிமேல் ஆயுதப் போராட்டம் இல்லை, ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டோம், இன்று முதல் அகிம்சைப் போராட்டம், பாராளுமன்ற அரசியல் தான் தீர்வு,

யுத்தம் முடிந்து பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது, கூட்டமைப்பா? குதிரையமைப்பா? என்ற போட்டி, புத்தருக்கு போதி மரத்துக்கு கீழே ஞானம் பிறந்தது போல. இவர்களுக்கும் ஞானம் பிறக்கிறது, யுத்த முடிவில் கே,பி சொன்ன ஆயுதங்களை அமைதியாக்கும் கதையல்ல இது,

ஆயுதப் போராட்டத்தை கைவிடுகிறோம், இனிமேல் அரசியல் தீர்வு தானாம்,

என்ன கதை ஐயா இது? உங்களிடம் எங்கே இருக்கிறது ஆயுதம். கீழே வைப்பதற்கு? அவன் தானே வந்து எல்லாவற்றையும் பிடுங்கி கௌபீனத்தோடு விட்டு விட்டான், இதென்ன புதக்கதை. இன்று வரைக்கும் உங்கள் புனிதப் போராளிகள் தான் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைக் காட்டிக் கொடு;த்துக் கொண்;டிருக்கிறார்கள்,

இது வரை காலமும் இங்கே உள்ள அரசியல் கற்றுக்குட்டிகள் எல்லாம். அரசியல் தீர்வு சரி வராது என்று தீர்க்கதரிசனத்தோடு முடிவு எடுத்துத் தான் தேசியத் தலைவர் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியதாக இங்கே உள்ள ஊடகங்களுக்கு கதை சொல்லிக் கொண்;டிருந்தார்கள், புலிகளின் ஆயுதப் போராட்டம் மக்களை அழிவுப்பாதைக்கு கொண்;டு செல்கிறது என்று முன்னெச்சரிக்கை செய்தவர்களைத் துரோகியாக்கி மண்;டையில் போட்டு புலி தாண்;டவம் ஆடிய போது. மெய் சிலிர்த்தவர்கள் இவர்கள், பாராளுமன்ற அரசியல் சரிவராது என்று தானே கூட்டணி உட்பட்ட சகல அரசியல்வாதிகளையும் போட்டுத் தள்ளினார்கள், இப்போது என்ன திடீரென்று

எம்,ஜி,ஆர். ஜெயலலிதா அரசுகளில் மந்திரியாக இருந்த திருநாவுக்கரசு பற்றி ஒரு கதை உண்;டு, இவருக்கு மனைவியின் தங்கை மீது ஒரு கண்;, ஒரு நாள் மனைவியைக் கோயிலுக்கு அனுப்பி விட்டு. மனைவியின் தங்கையை தன் இச்சைக்குள்ளாக்கி விட்டார், மனைவி கோயிலிலிருந்து திரும்பி வந்த போது சொன்னராம்,,,

இன்று முதன் உன் தங்கையும் என் மனைவி?

இதைப் போல இவர்களும் இன்று முதல் நாங்கள் அகிம்சைப் போராட்டம்?

ஆயுதம் கையிலிருந்த போது. புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கார் வேண்;டும் என்று சொன்னவர்களை எல்லாம் திட்டித் தீர்த்தவர்கள் இவர்கள், தலைவருக்கு எல்லாம் தெரியும், சர்வதேசம் எங்கள் விடுதலையை மழுங்கடிக்கப் பார்க்கிறது என்று வீரம் பேசியவர்கள் இவர்கள், திடீரென்று ஞானம் பிறந்து,,,

இன்று முதல் உன் தங்கையும் என் மனைவி?

ஆயுதங்களோடு பலம் வாய்ந்த நிலையில். இந்த ஆயுதப் போராட்டத்தால் நாங்கள் எதையும் சாதிக்கவில்லை. எங்கள் மக்களுக்கு அழிவு தான் மிஞ்சியது. இனிமேல் பேச்சுவார்த்தை மூலம் தான் அரசியல் தீர்வு காணப் போகிறோம் என்று சொல்லியிருந்தாலும் உலகம் மதித்திருக்கும்,

சமாதானப் பேச்சு நேரத்தில் புலிகள் மக்கள் படை அமைத்த போது. ஆணையிடு தலைவா. களமிறங்கக் காத்திருக்கிறோம் என்று ஊர்வலமாய் கொடி பிடித்தவர்கள் என்று. ஆயுதங்களை மட்டுமல்ல. ஆடைகளையே களைந்த பின்னால். பெரிய எடுப்பில். இனிமேல் ஆயுதப் போராட்டம் இல்லை என்றால் என்ன கதை இது

சரி. ஆயுத ஒப்படைப்பு முடிந்தது, புதிதாகத் தொடங்கியிருக்கிறது,,, நாடு கடந்த அரசாங்கம், மக்களவை, சர்வதேசப் பரப்பில் எங்கள் ஆயுதமில்லாத அரசியல் விரிவடைகிறது,

எங்களை பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒப்பாரி வைத்துப் பார்த்தோம், ஏனென்று யாரும் கேட்பதாய் காணோம், ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுகிறோம். இனிமேல் அரசியல் தீர்வு தான் என்றும் சொல்லிப் பார்த்தோம், இந்தப் பருப்பு இங்கே வேகாது என்று தெரிந்ததும் ஆரம்பிக்கிறது வாக்களிப்புக் கூத்து, நாங்கள் எல்லாரும் வாக்களித்தால் சர்வதேசம் திரும்பிப் பார்க்குமாம், ஆகா,, ஜனநாயகத்தைக் கண்;டுபிடித்து விட்டார்கள்,

இதுவரை காலமும் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் தமிழீழத்தைக் கண்;டுபிடித்தார் என்று கதை விட்டுக் கொண்;டிருந்தவர்கள் திடீரென்று தமிழர்கள் புலிகளுக்கு முன்பாகவே ஈழத்துக்கு ஆதரவு அளித்தார்கள் என்று வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு ஆரம்பித்தார்கள்,

உலகெங்கும் 99 வீதமான தமிழர்களின் ஆதரவுடன் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு பெருவெற்றி,

மூன்று லட்சம் தமிழர்கள் வாழுகின்றார்கள் என்று மிரட்டும் கனடாவில் முப்பதாயிரம் பேர் வாக்களிப்பு, வெறும் பத்து வீதத் தமிழர்கள் தான் வாக்களிக்க வந்தார்கள் என்பதை மறைத்து 99 வீத சுத்தல் நடந்தது, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் சூத்திரதாரிகளை மண்;டையில் போட்டு விட்டு வட்டுக்கோட்டைப் பிர்த்தை தோண்;டியெடுத்து கூத்து நடந்தது,

பின்னால் நாடு கடந்த ஈழ வாக்கெடுப்பு,,, பிறகென்ன,,, எங்கட ஒற்றுமையை. பலத்தைக் காட்டியிட்டம், இதோ ஆதாரம்,,, நாங்கள் எல்லாம் ஈழத்துக்குத் தான்,,, சர்வதேசம் அங்கீகரிக்காமல் இருக்கட்டும் பாப்பம்? பிறகு நடக்கிறதை? இனிமேல் அபே ஆண்;டுவ தான்? பொங்கிப் பூரித்துப் போயிருக்கிறோம்,

திபெத்தியர்கள் கூட சமீபத்தில் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள தர்மசாலாவில் தேர்தல் நடத்தினார்கள், அவர்களுக்கு சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக தலாய் லாமா உள்ளார், எங்களுக்கு எங்களுடைய முகமது பின் துக்ளக் தான் இருக்கிறார்,

ஐரிஸ் குடியரசு இராஹவத்தின் அரசியல் பிரிவான சின் பெயின் அமைப்பின் ஜெரி அடம்ஸ் ஒவ்வொரு சென்,பற்றிக்ஸ் தினத்திற்கும் வெள்ளை மாளிகைக்கு அழைத்துக் கௌரவிக்கப்பட்டிருந்தார், இனிமேல் உருத்திரகுமாரனை அடுத்த பொங்கலுக்கு ஒபாமா வெள்ளை மாளிகை நீள்வளைய அலுவலகத்தில் அழைத்து விருந்து வைப்பார் என்று இந்தத் தமிழர்கள் கனவு கண்டு கொண்;டிருக்கக் கூடும், காணும் கனவோடு கனவாக. ஐ,நா சபையில் பார்வையாளர் அந்தஸ்து பெற்று அரபாத் உரையாற்றியது போல. பான் கி மூனும் உருத்திரகுமாரனை அழைப்பார் என்று கனவைக் காணட்டும்,

இந்த நாடு கடந்த ஈழத்திற்கு புலன் பெயர்ந்தவர்களின் அங்கீகாரமும் இல்லை, ஈழத்தில் உள்ளவர்கள் ஐயோ. எங்கள் நிம்மதியைக் குலைக்காதீர்கள் என்று ஓலமிடுகிறார்கள், ஆனால் இவர்களோ சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்ற கனவில் பிரதமர். மந்திரிசபை என்று கும்மாளம் போடுகிறார்கள், ஒரு அமர்வு முடிவதற்கு முன்னாலேயே எதிர்க்கட்சி பிறந்து விட்டது, மந்திரிப்பதவி கிடைக்காதவர்கள் அரசிலிருந்து வெளியேற்றம், எங்களுக்கு வந்து கிடைத்திருக்கிற முகமது பின் துக்ளக்கு புத்தி இருந்திருந்தால். எல்லாருமே இலாகா இல்லாத மந்திரிகள் என்றிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கும்,

இப்போது நாடு கடந்த அரசும் எதிர்க்கட்சியும் பாராளுமன்ற அமர்வுக்கு வெளியில் மொட்டை நோட்டீஸ் விட்டுக் கொண்;டு திரிகிறார்கள்,


இவ்வளவு திருக்கூத்து நடத்துபவர்களுக்கு இன்னமும் இன்றைய தங்கள் நிலைக்கு காரணம் என்ன என்பதை விளங்கிக் கொள்ளும் அளவுக்கு விபரமும் இல்லை, துணிச்சலும் இல்லை, இவ்வளவு கூத்து நடந்தும் இன்னமும் இவர்கள் ஒரு முழு அளவிலான உளவிசாரணைக்கு.  எங்கள் மாற்றுக்கருத்து நண்;பர்களின் பாசையில் சொல்வதாயின். சுயவிமர்சனத்துக்கு தயாராக இல்லை,

ஆங்காங்கே குசுகுசுக்கிறார்கள், பொருமுகிறார்கள், முணுமுணுக்கிறார்கள், யாரும் முழுமையாக இந்த இழிவுநிலையின் அடிமுடியைத் தெரிந்து கொள்ளத் தயாராக இல்லை, காரணம்,,, தங்கள் மீது வன்முறை நிகழலாம் என்ற பயம், இதுவரையும் மற்றவர்களை வன்முறையைக் காட்டிப் பயப்படுத்தியவர்கள் என்று தங்களுக்குள் நிகழும் வன்முறைகள். மிரட்டல்கள் குறித்து மூக்கால் அழுகிறார்கள்,

புதினப்பலகையில் ஒரு கட்டுரை வருகிறது,,, புலன் பெயர் ஊடகங்கள் எல்லாம் புலிகளின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதற்காக இயங்கினவே தவிர தமிழ் மக்களின் நலன் சார்ந்து அல்ல, புதிய கண்;டுபிடிப்பு,

கனடிய வானொலி அறிவிப்பாளர் ஒருவர் கட்டுரை எழுதுகிறார்,,, கனடாவில் மக்களின் சொத்துக்கள் தனியார்களின் கையில் உள்ளன, அதாவது புலிகளின் சொத்துக்கள் பினாமிகளின் கையில் உள்ளன, இன்னொரு மகத்தான கண்;டுபிடிப்பு, என்னால் இன்னமும் கண்;டுபிடிக்க முடியாத ஒரு உண்;மை இருக்கிறது, இந்த மக்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார் மக்களிடம் சொத்துக்களை திருப்பிக் கொடுக்க வேண்;டும் என்றால் யாரிடம் திருப்பிக் கொடுப்பது

எங்கள் ஊரில் ரயில் என்ஜின் ராசையா அர்;iர் என்று ஒருவர் இருந்தார், சித்த சுயாதீனம் இழந்தவர், இவர் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் போலவே உடுத்தியிருப்பார், தன்னை ஒரு ரயில் சாரதியாகவே நினைத்துக் கதை சொல்லிக் கொண்;டிருப்பார், ஒரு தடவை தண்;டவாளத்தில் படுத்திருந்த யானையை தான் எப்படி ரயிலை நிறுத்தி பின்னால் போய் பெட்டிகளை கழற்றிவிட்டு வேகமாய் வந்து அடித்துக் கொன்றார் என்பதை வர்ணித்துக் கொண்;டிருந்ததை சிறுவயதில் கேட்டுக் கொண்;டிருந்தேன், தான் அடித்த அடியில் நெய் சிதறிக் கிடந்தது என்ற போது நானும் விசயம் விளங்காமல் நெய் என்றால் என்ன என்று நான் கேட்ட போது மூளை என்று சிம்பிளாய் பதில் சொன்னார்,

எங்கள் ஊரில் யாரோ இறந்த போது. பாடை கட்டி ஊர்வலமாய் கொண்;டு போய் மயானத்தில் சிதையின் மேல் உடலை வைத்து இறுதிக் கிரியைகள் செய்து கொண்;டிருக்கிறார்கள், அங்கே வந்த ராசையா அண்;ணை பிணத்தின் கையைத் தூக்கிப் பார்த்து விட்டுச் சொன்னார்,,,, ஆள் முடிஞ்சுது?

அதாவது ஊர் முழுக்கத் தெரிந்த உண்மை அப்போது தான் ராசையா அண்;ணைக்கு தெரிந்திருக்கிறது,

அதைப் போல. இருபது வருடங்களாக நாங்கள் சொல்லிக் கொண்;டிருந்த உண்மை இப்போது தான் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது,

புலிகளின் ஆயுதப் போராட்டம் அழிவுக்கு வழி வகுக்கிறது, புலன் பெயர்ந்த ஊடகங்கள் புலிகளுக்கு சரியான வழியைக் காட்டாமல் சீரழிக்கின்றன, போராட்டத்திற்காக சேர்த்த பணத்தை பலர் கையாடுகிறார்கள்,

இத்தனை வருடங்களாக இதை நாங்கள் சொல்லிக் கொண்;டிருநத போது எங்களைத் துரோகிகள் என்று தூற்றியவர்கள் இன்று ராசையா அண்;ணையைப் போல இந்த உண்;மையைக் கண்;டு பிடித்துக் கொண்;டிருக்கிறார்கள்,

இருபது வருடங்களுக்கு முன் தாயகத்தில் எழுதியிருக்கிறேன்,,, யாழ்;ப்பாணத்து பிராங்கென்ஸ்டைன் பற்றி, யாழ்ப்பாணம் ஒரு பிராங்கன்ஸ்டைன் மிருகத்தை உருவாக்குகிறது, அது தன்னை உருவாக்கியவர்களையும் அழித்து தன்னையும் கடைசியில் அழிக்கும் என்று, பட்டுத்துகிலுக்கு ஆசைப்பட்டு கோவணத்தையும் இழக்கப் போகிறோம். நாயர் பிடித்த புலிவால் தமிழர்களை அழிக்கப் போகிறது என்றெல்லாம் ஏடு இட்டோர் இயலில் எழுதியிருந்தேன்,

தேசியத் தலைவர் மாதிரி நான் ஒரு தீர்க்கதரிசி இல்லை, ஆனால் என் சிற்றரிவுக்கு இந்த உண்;மைகள் அப்போதே தெரிந்திருந்தன,

இவர்களுக்கு இப்போது தான் எல்லாம் ஓடி வெளிச்சிருக்கிறது. ரயில் என்ஜின் ராசையா அண்;ணை போல?

முழுமையாக இந்த அழிவுக்கான காரணத்தை இன்னமும் அறிந்து கொள்வதில் இவர்களுக்கு விருப்பம் இல்லை,

அதுவும் எங்கள் யாழ்ப்பாணப் புத்தி தான்,

உங்களுக்குத் தெரியும், அங்கே ஒவ்வொரு ஊரிலும் பல வீடுகளில் பல இரகசியங்கள். பரகசியங்கள் இருக்கும், எல்லாருக்கும் தெரிந்தது, யாருமே அதைப் பற்றி பேச மாட்டார்கள், எங்கட பொட்டுக்கேட்டை நாங்கள் வெளியில காட்டக் கூடாது, இது யாழ்ப்பாணத்தின் எழுதப்படாத விதி, எங்கட பல்லைக் குத்தி மற்றவனுக்கு மணக்கக் குடுக்கக் கூடாது, இது என் காதுபடக் கேட்ட திருவாசகம்,

சிறுவர்களான எங்களுக்கு இதில் பல விடயங்கள் தெரியாது, வேலிச்சண்;டை வரும், கிணற்றடிச் சண்;டை வரும், அப்போது தான் யார் யாரோடு படுத்தது யார் யாருக்குப் பிள்ளை பெற்றது யார் யாருடைய பிள்ளையை அழித்தது எல்லா விபரங்களும் வானலையில் தவழ்ந்து வரும்,

எங்களுக்குக் காலங் காலமாய் கற்பிக்கப்பட்டது இது தான், பொட்டுக்கேடுகளை மூடி மறை?

இன்றைய அழிவுக்கான காரணம் என்ன? அதன் சூத்திரதாரிகள் யார் என்பதெல்லாம் எங்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனால் அதை பகிரங்கமாக பேசுவதற்கு நாங்கள் தயார் இல்லை, காரணம். எங்கள் பொட்டுக்கேடுகள் அம்பலமாகி விடும்,

இதனால் தான் இன்று வரைக்கும் தேசியம். புனிதப் போராளிகள். மாவீரர்கள் என்று புலுடா விட்டுக் கொண்;டிருக்கிறோம், அதைப் பேச விரும்புகிறவர்களையும் இன உணர்வைக் காட்டி ஒரு குற்ற உணர்வுக்குள்ளாக்கி. அதைக் கதைக்கிறது எத்தனை பேருடைய வாழ்க்கையைப் பழுதாக்கிப் போடும் என்று பயமுறுத்தி மூடி மறைத்துக் கொண்டிருக்கிறோம்,

இதையெல்லாம் விசாரிக்கப் புறப்பட்டால். எங்களுடைய தவறுகள் அம்பலமாகி நாங்கள் தான் குற்றவாளிகள் என்று முடிந்து விடும், இதனால் கதையை மாற்றி குஞ்சப்புவைப் போல. விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டம் என்று சமாளித்துக் கொர்;டிருக்கிறோம். எங்களை?

ஒவ்வொரு சமூகத்திலும் புத்திஜீவிகள் இருக்கிறார்கள், இவ்வாறான அழிவுஜகளின் போது முதலில் மௌனம் கலைப்பது அவர்கள் தான், தங்களுடைய சமுகம் இந்த இழிநிலைக்கு வந்த காரணம் என்ன என்பதை ஆராய்வது அவர்கள் தான்,

எங்கள் சமூகத்திலிருந்த புத்திஜீவிகள் எங்கே போய் விட்டார்கள். எங்கள் சமூகத்தில் படித்தவர்கள் இருந்தார்களே தவிர. சிந்தனையாளர்கள் இருந்ததில்லை, மந்தைப்புத்தி ஜீவிகள் தான் எங்கள் இனத்தில் இருக்கிறார்கள், கோழி மேய்த்தாலும்  கவுண்மேந்தில மேய்க்க வேணும் என்பதற்காக பல்கலைக்கழகம் போனவர்கள் இவர்கள், இவர்களின் சிந்தனை எந்த விதத்திலும் வளர்ச்சியடைந்ததில்லை, பல்கலைக்கழகம் போனவர்கள் கூட அதைக் காட்டி சீதனம் வாங்குவதிலேயே குறியாக இருந்தார்கள்,

எமது சமூகம் மாற்றுச் சிந்தனையாளனை அங்கீகரித்ததில்லை, அவனை மட்டம் தட்டுவதிலேயே கண்ணாயிருந்தது, தனித்துவத்தை ஜீரணிக்க முடியாத கூட்டம் இது,

இந்த சாம்பலிலிருந்து எழுந்த பீனிக்ஸ் புலி என்ன செய்யும் தமிழில் அரசியல் பிரக்ஞை. சமூகப் பிரக்ஞை உள்ள எல்லாரையும் போட்டுத் தள்ளியது, சிந்திக்கத் தெரிந்தவர்கள் மண்;டியிட வைக்கப்பட்டார்கள், ஊhயசயஉவநச யளளயளளiயெவழைn  செய்யப்பட்டு அவமானத்தால் மனம் வெதும்பி வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள்,

உலக நாடுகளிலெல்லாம் முற்போக்குச் சிந்தனை கொண்;ட பல்கலைக்கழகங்கள் போல இல்லாமல் தமிழ்த்தேசியக் குட்டையில் மட்டைகளை ஊறப் போட்டுக் கொண்;டிருந்தது யாழ் பல்கலைக்கழகம், மத அமைப்புகள். இலக்கிய அமைப்புகள். ஊடகங்கள். பத்திரிகையாளர்கள் என எல்லாம் புலிகளால் மண்டியிட வைக்கப்பட்டன, ஊதுகுழல்களாக்கப்பட்டன, முடியாதவை நிர்மூலமாக்கப்பட்டன,

மற்ற இயக்கங்கள். கட்சிகளில் இருந்த சிந்திக்கத் தெரிந்தவர்கள் புலிகளால் விசேடமாகக் குறி வைக்கப்பட்டார்கள்,

திட்டமிட்டு புலிகளால் இந்த இனத்தின் சிந்தனை எழுச்சி மழுங்கடிக்கப்பட்டது, மிஞ்சியது யார்? பதவிகளுக்காகவும். தங்கள் சமூக விரோதச் செயல்களுக்குப் பாதுகாப்புத் தேடுவதற்காகவும் புலிகளோடு ஒட்டிக் கொண்;ட அயோக்கியர்கள் தான் மிஞ்சினார்கள்,

பேராசிரியர் ரத்தினஜீவன் கூல் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட போது. புலிகள் குதிரை மூலமாக மார்வர்களைத் திரட்டி நடத்திய கூத்து எங்களுக்குத் தெரியும், தற்போது அவர் மீண்;டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்றதும் இங்குள்ள கொல்கலாசார வானொலி செய்தி வெளியிடுகிறது, சென்ற தடவை அவர் நியமிக்கப்பட்ட போது. மாணவர்களின் எதிர்ப்புக் காரணமாக பதவியேற்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

சிந்தனை எழுச்சி எப்படி வரும் ஆன்மாவுக்கான தேடல் எப்படி வரும்

தென்னாபிரிக்காவில் வுசரவா யனே சநஉடிnஉடையைவiடிn என்று உண்;மையை அறிந்து பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் முயற்சி போல. எங்கள் மர்;ர்pல் எப்படி வரும்

அப்படி ஒன்று வந்தால். புலிகளால் மக்களுக்கு இழைக்கப்பட்ட அக்கிரமமும் அட்டுழியமும் அநியாயமும் அம்பலத்திற்கு வந்துவிடும். அதன் பைனான்சியர்கள் யார் என்ற உண்;மை வெளியில் வந்து விடும்,

இப்படியாக இத்தனை அழிவுகளைக்கு உள்ளாகிய பின்பும் தன்னுடைய யாழ்ப்பாண மனோபாவத்தை அழிக்க மறுத்துக் கொர்;டிருக்கிறது இந்த இனம்,

முன்பு புலிகள் இருந்தபோது. புலிகளின் போக்கு மக்களை அழிவுப்பாதைக்குள் கொண்;டு செல்கிறது என்று சுட்டிக் காட்டினோம், சும்மா அவங்களை தேவையில்லாமல் விமர்சிக்கினம். போராட்டத்தைப் பின்னடையச் செய்யினம். கொச்சைப்படுத்தினம் என்றார்கள், இப்ப அவங்களோட சேர்ந்து அடிபட்டு ஈழத்தைப் பிடிப்பம். பிறகு எங்கட பிரச்சனை தீர்த்துக் கொள்வோம் என்றார்கள்,

முன்பு கூட்டணியும் சாதிப்பிரச்சனைக்கும் இதைத் தான் சொன்னது. முதல்ல எங்களோட சேருங்கோ. பிறகு எங்கட பிரச்சனையை தீர்ப்பம்,

ஒருபோதுமே தங்களின் தவறை உணர்ந்து திருந்தும் பழக்கம் இந்த சமூகத்திற்கு கிடையாது,

இப்போது கேட்கிறார்கள்,,, அவங்கள் இப்ப இல்லை. பிறகென்னத்துக்கு பழசுகளைக் கிளறுறியள்

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர். தலைவரும் புலிகளும் புனிதமானவர்கள். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று மூடி மறைக்கவே இந்த சமூகம் இன்றும் முனைகிறது,

எங்களுடைய சமுகத்தில் இப்படி ஒருவன் மாற்றுக் கருத்தைச் சொன்னால். அவன் யார் அவனுடைய பின்னர்p என்ன என்று அவனை ஒரு வகைப்படுத்தி முத்திரை குத்தி. அவனுடைய தனிப்பட்ட விடயங்களை விமர்சித்து அவனை மட்டம் தட்டி விரட்டுவதில் அக்கறை காட்டுவதைத் தவிர இந்த சமூகம் வேறெதையும் செய்ததில்லை, குலத்தளவே ஆகுமாம் குணம் என்று சொல்லி வைத்திருக்கிறது இந்தச் சமூகம், ஊரோடு ஒத்தோடு என்று கற்பிக்கின்ற சமூகம் எந்த ஒரு மனிதனுக்கும் தனித்துவம் இருப்பதை மறுக்கிறது, அவன் இன்ன சாதியைச் சேர்ந்தவன். இன்ன இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனது இயல்பும் பொதுவானதாகத்தான் இருக்கும் என்பது தான் இந்தச் சமூகத்தின் முடிவு,

இன்றைக்கு. என்னைப் பார்த்துக் கூட. உவர் இப்ப உவையோடு நிக்கிறார் என்றோ. உவைக்காண்;டி வேலை செய்யிறார் என்றோ சொல்லக் கூடும்,

குலத்தளவே ஆகும் குணம் என்று மட்டம் தட்டி விட்டுப் போவதன் மூலம் என்ன செய்கிறோம்

சொல்லப்படுகின்ற மாற்றுக் கருத்தில் உண்;மை இருக்குமா என்ற விவாதத்தை அத்தோடு நிறுத்தி விடுகிறோம், காரணம் என்ன எங்களுடைய தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எங்களுக்கு இல்லை, சும்மா பழசைக் கிளறிக் கொண்;டிருக்கிறார் என்று உதறி விட்டுப் போவதன் காரணம் என்ன?  பொட்டுக்கேடுகள். வண்டவாளங்கள் வெளியில் வந்து நாறிவிடும், எனவே பழையதைக் கூட்டி நிலவிரிப்பின் கீழ் மறைத்து விட்டு வருபவர்களுக்கு நாங்கள் சுத்தமானவர்கள் என்று காட்டுவதில் தான் எங்களுக்கு அக்கறை, பிரச்சனைகளை மூடி மறைத்தே பழக்கப்பட்டவர்கள் நாங்கள், காதல் வந்தால் கூட. உணர்ச்சிகளை அடக்கி. குடும்பத்திற்கு பயந்து. கௌவரத்திற்காக கலியாணம் செய்ய வேண்;டும் என்று எதிர்பார்க்கும் சமூகத்திலிருந்து வந்தவர்கள் நாங்கள், உணர்ச்சிகளை அடக்கி. மற்றவர்களின் விருப்புகளுக்கும் வெறுப்புகளுக்குமாக வாழ வேண்;டும் என்று நிர்ப்பந்திக்கும் இனத்திலிருந்து வந்தவர்கள் நாங்கள், எதையும் திறந்த மனதோடு எதிர்கொண்;டும் விவாதிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்காத பரம்பரையினர் நாங்கள், பிழையையும் உண்;மையையும் ஏற்றுக் கொள்ளாமல் விதண்;டாவாதம் பணணி அதகடிக்கும் பழக்கம் கொண்;டவர்கள் நாங்கள், பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல். பேசாமல் விடுவதன் மூலம் பிரச்சனைக்கான காரண்த்தை. அதில் எங்களுடைய பங்களிப்பை மூடி மறைக்கலாம் என்று பாசாங்கு பண்ணிக் கொண்;டிருக்கிறோம்,

புலிகளைப் பாதுகாப்பது என்பதை விட. அவர்களை நம்பிய பொட்டுக்கேட்டை. அவர்களின் தோல்வியால் ஏற்பட்ட அவமானத்தை மறைக்க. எங்களுடைய நிலைக்கான காரணங்களை ஆராயாமல் மற்றவர்களைக் குற்றசாட்டுவதன் காரணம் இதுதான்,

பழசைத் தோண்;டினால் நாறும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும், எங்களுடைய பழைய பெருமையைக் காட்ட தோண்;டினோம்,,, கந்தரோடையில், கிண்று வெட்டப் பூதம் வந்த மாதிரி. புத்தவிகாரைகள் வந்தன, அத்தோடு பழையதைத் தோண்;டுவதை நிறுத்தி விட்டோம், பழையதைத் தோண்;டினால் தானே பிரச்சனை என்று புதிதாகத் தோண்;ட வெளிக்கி;ட்டோம்,,, பங்கர்களையும் புதைகுழிகளையும், இன்று முழு இனத்தையும் அதன் எதிர்காலத்தையும் சேர்த்து புதைத்து விட்டோம்,

பெரியோர்களே. நர்;பர்களே. ஆர்வலர்களே.

ஊருக்கு வா கவனிப்போம் என்றவர்கள் எல்லாம் இன்று காணாமல் போய் விட்டார்கள், இருந்தாலும் யாழ்ப்பாணப் பாரம்பரியத்தை தொடர்ந்தும் பேண இங்கே இருக்கிறார்கள் புத்திஜீவிகள்,,, உண்மையைச் சொல்வதென்றால் இதுவரைக்கும் தன்னுடைய சிந்தனைகளால் எங்களைப் பிரமிக்க வைத்த எவரையும் நான் கண்;டதில்லை, புத்திஜீவிகள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்கள் இங்கே ஏராளம்,

இவர்கள் மண்;டையில் போடுவதை மனதார ஏற்றுக் கொண்;டாலும். வெளியில் அவரோட கருத்துக்களோட எனக்கு உடன்பாடில்லை என்று தங்கள் புத்திஜீவித்தனமாக வேசம் போடுபவர்கள், இவர்களிடம் எதிரியை மடக்க கடைசியாக விடும் பெரிய நாகாஸ்திரம் ஒன்று இருக்கும்,

அதுதான்,,, அப்ப உம்மட தீர்வு என்ன?

எங்களைக் கேட்காமலேயே ஆயுதப் போராட்டம் தான் தீர்வு என்று படுகுழிக்குள் கொண்;டு போனவர்களைப் பார்த்து வாய் திறக்காதவர்கள் எல்லாம் மாற்றுக்கருத்து என்று வந்தவுடன் தீர்வு கேட்பார்கள், இவர்கள் தீர்வு கேட்பது ஒன்றும் அதைக் குறித்து விவாதம் செய்து சரியான வழியைத் தேர்ந்தெடுப்பதற்கல்ல, விமர்சிப்பதற்கு? கும்பலாகச் சேர்ந்து தர்ம அடி போடுவதற்கு?

சமூகத்தின் நன்மைக்காக. இந்த சமூகத்தின் அழிவை தடுத்து நிறுத்த வேண்;டும் என்ற நல்ல எண்ணம் கொண்;டவனை களைத்துச் சலிக்கப்பண்ணுவதற்காக?

தீர்வு என்பதை விட. நாங்கள் செய்ய வேண்;டும் என்று நினைக்கின்ற சில வழிமுறைகளை இங்கே தரலாம் என்று நினைக்கிறேன்,
(தொடரும்)

கருத்துகள் இல்லை: