செவ்வாய், 30 நவம்பர், 2010

57 மில்லியன் பெறுமதியான தங்கம்,வெளிநாட்டு நாணயம் கடத்தல்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூவர் கைது!

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல முற்பட்ட 27 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கமும் 30 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

விமான நிலையத்துக்கு உணவு கொண்டு செல்லும் லொறியொன்றில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் இருவரும் இந்தியர் ஒருவரும் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: