செவ்வாய், 30 நவம்பர், 2010

சம்பந்தன் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதி

தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சுகவீனமுற்றநிலையில் நேற்று முன்தினம் கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருதயக் கோளாறு காரணமாக ஏற்கனவே தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்றிருந்த அவர் மீண்டும் திடீரென பாதிப்புக்கு ஆளாகிய நிலையிலேயே அவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.
இதேவேளை இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்த் நேற்று வைத்தியசாலைக்குச் சென்று சம்பந்தனின் நலன் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர் சம்பந்தனைச் சந்தித்து குசலம் விசாரித்தனர்.

கருத்துகள் இல்லை: