செவ்வாய், 30 நவம்பர், 2010

ஈழத்து தமிழ்நாடக கலைஞர் முகத்தார் ஜேசுரத்தினம் பிரான்சில் காலமானார்


ஈழத்து தமிழ்நாடக கலைஞர் முகத்தார் ஜேசுரத்தினம் கடந்த சனிக்கிழமை பிரான்சில் காலமானார்.1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தேசிய சேவையில் நாடக கலைஞராக தமிழ் நேயர்களுக்கு அறிமுகமான ஜேசுரத்தினம் முகத்தார்வீடு என்ற தொடர்நாடகத்தில் தனது முத்திரையை பதித்துக்கொண்டார்.

வாடைக்காற்று திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த ஜேசுரத்தினம் யாழ்ப்பாண வட்டாரவழக்கு சொற்களை நகைச்சுவைக்காக மட்டுமன்றி காத்திரமான படைப்புகளிலும் கையாள முடியும் என்பதை எடுத்துக்காட்டியவர் ஜேசுரத்தினம் ஆவார்.

1990களின் பின் பிரான்சிற்கு வந்த அவர் வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தார்.

அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கடந்த சனிக்கிழமை காலமானார் அன்னாரின் நல்லடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை பிரான்சில் நடைபெற உள்ளது

கருத்துகள் இல்லை: