புதன், 8 பிப்ரவரி, 2017

ஸ்டாலினும் ஒபிஸ்ஸும் சிரித்து கொண்டிருந்தார்கள்.. சிரிப்பதே குற்றம்.. ஜெயலலிதாவின் தோழி வேற எப்படி பேசுவார்?

ஸ்டாலினும் ஒபிஸ்ஸும் சட்டசபையில் சிரித்து கொண்டிருந்தார்கள் - சசிகலா
ஜெயலலிதா பட்டறையில் இருந்து வெளியே வருகிறவர், இத்தகைய குற்றசாட்டை சொல்லாமல் ஆக்கபூர்வமான அரசியல் பிரஸ்மீட் வைத்து கலக்குவார் என்றா எதிர் பார்க்க முடியும்? கட்சி தாண்டி, கொள்கை தாண்டி, அரசியல் நட்பு கொண்டிருக்கும் கலாசாரத்தை சீரழித்தவரே ஜெயலலிதா தான். "மிஸ், he is pinching me " ரக கம்பளைண்ட்டுகளுக்கு எல்லாம் கட்சியில் இருந்து ஆட்களை துச்சமாக அவர்களது அரசியல் உழைப்பை பார்க்காமல் தூக்கி வீசியது, அதிமுக காரர்கள் திமுகவினரின் குடும்ப நிகழ்வுகளுக்கு போக விடாமல், திருட்டுத்தனமாக மொய் கவர் கொடுத்து அனுப்பும் சூழலை ஏற்படுத்தியது என்று அடிமை கூட்டத்தை விசுவாசிகளாக முன் நிறுத்தியதனால் தானே, ஓபிஸ் வாயை திறந்து பேசியதையே விஸ்வரூபம் கமல்ஹாசன் கழுத்துமேல உக்காந்து கண்ணுக்குள்ள விரலை விட்ட சண்டையை போல slow motion ல பார்த்துட்டு இருக்கோம்.
அரசியல் நட்புகளை கள்ளத்தொடர்புகளாக ஆக்கியத்தில் ஜெயாவுக்கு முக்கிய பங்குண்டு. சசியை திட்டுறவங்க, அவரை ஜெயலலிதாவின் அரசியல் replica என்று சொல்லாததால் சொல்கிறேன்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: