புதன், 8 பிப்ரவரி, 2017

சசிகலா பிரபல கட்டிபிடி சாமியாரினி அமிர்ந்தானந்த மாயிடம் ஆசி பெற்றார் !


மாதா அமிர்தானந்தா மயியை நேற்று முன்தினம் இரவு சசிகலா சந்தித்து ஆசிபெற்றார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மாத அமிர்தானந்த மயி மடத்தில், நேற்று முன்தினம் இரவு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆசி பெற்றார். சசிகலா இன்றோ அல்லது நாளையோ முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் விரைவில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வரவிருப்பதால் பதவியேற்பதில் எந்தவித சிக்கலும் வந்துவிட கூடாது என்பதற்காக சசிகலா அமிர்தானந்தா மயியை சந்தித்து ஆசி பெற்றதாக கூறப்படுகிறது. சசிகலாவின் இந்த சந்திப்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் உடன் இருந்தார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: