முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு ஜெ. நினைவிடத்திற்கு
சென்று மவுன அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,
முதல்வர் ஜெ. உயிருடன் இருக்கும்போதே கட்சியின் பொதுச்செயலாளராக
மதுசூதனனையும், முதல் அமைச்சராக நீங்களும் இருக்க வேண்டும் என்று என்னிடம்
கூறினார் என்று பன்னீர்செல்வம் கூறியதும், ஆனால் அம்மாவின்
எதிர்பார்ப்புக்கு மாறாக சசிகலா ஈடுபட்டதையும் இன்று மக்கள் மத்தியில்
வெளிப்படுத்தினார் பன்னீர்செல்வம். இந்த செய்தி தமிழகம் முழுக்க தீயாக
பரவியதில் கொந்தளித்தத்துப்போன அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள்
தூக்கமில்லாமல் ஆங்காங்கே கூடி பரபரப்பாகவும், பதட்டமாகவும் பேசி
வருகிறார்கள்.
சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டார். அம்மாவின் சாவில்
சந்தேகம் உள்ளது என்று நாம் கூறியது இப்போது உறுதியாகி உள்ளது.
இப்படியெல்லாம் உட்கிராமங்கள்தோறும் அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து வரும்
நிலையில் அதிமுக செல்வாக்காக உள்ள மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலத்தில்
அக்கட்சியின் நிர்வாகிகளின் மனநிலை எப்படி உள்ளது என பலரிடம் பேசினோம்.
இதில் தற்போது எம்எல்ஏவாக உள்ள ஒருவரும், கடந்த மாநகராட்சி மேயராக இருந்த ஒருவரும் நம்மிடம் கொந்தளித்துப் பேசியது இதுதான்.
எம்எல்ஏவாக உள்ள நான் கோடிக்கணக்கில் செலவு செய்து வெற்றி பெற்றேன்.
என்னிடம் தற்போது உள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கூறியது, சின்னம்மா சசிகலா
இருந்தால்தான் நீ செலவு செய்த காசைவிட இரண்டு மடங்கு எடுக்கலாம் என்று
உறுதி கூறினார்கள். வேறுவழியில்லாமல்தான் நான் கடனாளியாக இருககக் கூடாது
என்பதற்காகத்தான் சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டோம். ஆனால் எனது
மனச்சாட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று அம்மாவின் மனசாட்சியாக
பன்னீர்செல்வம் கொட்டி தீர்த்துவிட்டார். இதைத்தான் எதிர்ப்பார்த்தோம்.
இப்போது எங்களைப்போன்ற எம்எல்ஏக்களிடம் முன்பு உள்ள பிரச்சனை செலவை செய்ததை
திரும்ப எடுப்பதல்ல. மனசாட்சி இல்லாமல் வாழ்வது முடியாது. கட்சியின்
பொதுச்செயலாளராக கட்சிக்குள் உள்ள நிர்வாகிகள் வந்திருந்தால் இந்த கேவலம்
நிகழ்ந்திருக்காது. ஆனால் அதற்கு நேர் எதிராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது
யாருக்குமே பிடிக்கவில்லை.
இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் வெளிப்பாட்டை அதிமுகவின் 130
எம்எல்ஏக்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆதரிப்பார்கள். இதனை யாராலும்
தடுக்க முடியாது. ஆனால் எங்கள் கட்சியின் தொண்டர்கள் ஒன்று செய்ய வேண்டும்.
அம்மாவின் இறப்புக்கு காரணமான சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து விரட்ட
வேண்டும். அதற்கு தொண்டர்கள் தயாராகி சென்னை நோக்கி வர வேண்டும். இங்கு
சசிகலா எந்த அரசு பொறுப்பிலும் இல்லை. அப்படிப்பட்ட ஒருவருக்கு போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டிருப்பது சட்ட விரோதமானது. தொண்டர்கள் நினைத்தால்
சசிகலாவை போயஸ் கார்டனில்இருந்துவிரட்டிவிட்டு அம்மாவின் இல்லத்தை அதிமுக
கட்சியின் கோயிலாக மாற்றுவோம். பன்னீர்செல்வத்துக்கு, அவருடைய குரலுக்கு
உறுதுணையாக தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
என்றார்.
ஜீவா தங்கவேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக