புதன், 8 பிப்ரவரி, 2017

மிரட்டப்படும் எம் எல் ஏக்கள் எந்த நேரமும் காலை வாரலாம் .. நிச்சயமற்ற தன்மை !

ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்தபோது, அவரது வேலை என்வென்றால் பணம் கொடுப்பவருக்கு பதவி பெற்று தருவதுதான். இதற்கான ஏஜெண்டுகளாகத் தான் திவாகரன், தினகரன் என தனது 13 குடும்ப உறுப்பினா்களை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் அப்போது, இப்போதும் சசிகலா என்றாலே அனைவருக்கும் பயம்தான் இருக்கிறது.
ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்து வைத்த சந்திலேகா ஐ.ஏ.எஸ்க்கே முகத்தில் ஆசிட் அடித்தவர் சசிகலா கூட்டம். இந்த நிலையில் சசிகலாவைவிட முதல்வர் பன்னீர் செல்வம் எவ்வளவோ மேல் என்று நினைத்து இருந்த தருணத்தில் சசிகலா எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டடி 4க்கும் மேற்பட்ட கையெழுத்து பெற்றுள்ளார். பணம் பறிக்கும் கும்பலில் சிக்கி சாவதைவிட, பன்னீருக்கு ஆதரவாக இருக்கலாம் என்கிற மனநிலையில் உள்ளனா். இந்த தகவல் தெரிந்த சசிகலா உச்சக்கட்ட கோபத்தில் உள்ளார்.< திவாகரனிடம் யாராவது என்னை எதிர்த்து பேசினால், எனக்கு எதிராக செயல்பட்டால் நான் என்ன செய்வேன் என்றே தெரியாது என்று எச்சரித்துள்ளார். எம்எல்ஏக்கள் மட்டும் இல்லை. அவர்களின் குடும்பமும் சசிகலாவின் கஸ்டடியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆளுநா் எம்எல்ஏக்களை தனித்தனியாக ஆதரவு குறித்து விசாரிக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் தெரிவித்து வருகின்றன. அவ்வாறு செய்தால் சசிக்கு பின்னடைவு ஏற்படுவது உறுதியாகிவிட்டது. லைவ்டே

கருத்துகள் இல்லை: