செவ்வாய், 20 செப்டம்பர், 2011

திருச்சி வேட்பாளர் கே.என்.நேரு கலைஞர் அதிரடி அறிவிப்பு




கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரியம் பிச்சை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி உயர்வு பெற்றார்.   அவர் கார் விபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில் மு.பரஞ்சோதி இந்த தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இவரின் மீது பெண் டாக்டர் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாய் கூறி ஏமாற்றிவிட்டார் என்று புகார் கூறியுள்ளார்.  அவர் மேலும், பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.   இதனால்  பரஞ்சோதி  நீக்கப்பட்டு புதிய வேட்பாளர் அறிவிக்கப்படும் நிலை இருக்கிறது.
இந்நிலையில் இன்று மாலை திமுக வேட்பாளராக முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுவார் என்று திமுக தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டவர் கே.என்.நேரு.  ஆகவே,; இடைத் தேர்தலிலும் அவரே போட்டியிடுவார் என்றும் கலைஞர் தெரிவித்துள்ளார்.நில மோசடி, நில அபகரிப்பு என்று பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கே.என்.நேரு மற்றும் அவரது தம்பி ராமஜெயம் உள்பட திருச்சி திமுக முக்கிய பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: