திங்கள், 18 ஜூலை, 2011

புலி ஈன்றெடுத்த கூத்தமைப்பு இன்னும் திருந்தவே இல்லை

இன்னும் பொழுது விடியாத ஜென்மங்கள் சில மீண்டும் மீண்டும் தமிழரசுக்கட்சியின் பசப்பு வார்த்தைகளில் மதி மயங்கி துயில் கொள்வது மிகவும் வேதனை அளிக்கும் நிகழ்வாகும். அன்றைய தமிழரசுக்கட்சி அதன் கள்ளக்குழந்தையாகிய புலி இயக்கம் பின்பு மீண்டும் அதே கள்ளக்குழந்தையாகிய புலி ஈன்றெடுத்த இன்றைய தமிழ்  கூத்தமைப்பு எல்லாம் இன்னும் திருந்தவே இல்லை. இந்த உள்ளங்கள் இருந்தென்ன லாபம் என்ற MGR பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
இனங்களுக்கு இடையே குரோத்ததை வளர்த்து அதில் தமது வயிற்ரை கழுவும் ஈனபுத்தி படைத்த தேசிய சமுக விரோதிகளால் நடாத்தப்படும் உதியன் என்ற ஒரு பத்திரிக்கை இதை வாசிப்பவர் விரைவில் சித்த சுவாதீனம் இழந்து போவது திண்ணம். அவ்வளவு துவேஷம் நிறைந்த பத்திரிக்கை .முழுக்க முழுக்க பொய்யும் திருபுசெய்திகலுமே இதன் உள்ளடக்கம். இன்று தணியும் இவர் பித்தலாட்டம்?
சதா வாய்பந்தல் போட்டே மக்களை பாழும் கிணத்தில் தள்ளுவதே இவர்களின் வரலாறு. பெரும் பான்மையான தமிழ் மக்களோ தம்மை ஏய்ப்பவன் காலை பிடிப்பதே தொட்டில் பழக்கம் என்றாகி விட்ட ஒரு தனி ஜாதி.
உணர்சிகளுக்கு அடிமையாகி வெறும் வாய் வார்த்தை சிலம்பத்தை உண்மை என்று நம்பி இருட்டில் பயணிக்கும் பேதமையை என்ன சொல்வது.
ஈழத்தமிழர்களை உசுப்பேத்துவது மிகவும் சுலபம். இந்த வித்தையை தானே கால காலமாக தமிழ் அரசியல் வாதிகளும் பின்பு புலியும் செய்து மக்களை முள்ளிவாய்காலில் கொண்டு போய் நிறுத்தினார்கள்?
எதோ நம் முதாதையர்கள் செய்த தர்மமோ அல்லது அரசாங்கத்தின் தர்மமோ இந்த அளவிலாவது தமிழ் மக்கள் காப்பாற்றபட்டுள்ளார்கள். நிச்சயமாக இதற்கு தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
எந்நன்றி கொன்றார்க்கும்  உய்வுண்டாம் செய்நன்றி கொன்ற மகற்கும்.

கருத்துகள் இல்லை: