திங்கள், 27 ஜூன், 2011

தினமலரின் கனிமொழி மீதான பாசம் நேசம்

ராமசுப்பு அய்யர்வாளின் தினமலர் பத்திரிகைக்கு கனிமொழிமேல் அப்படி என்ன பாசமோ தெரியவில்லை சதா அவரைபற்றியே சிந்தித்த வண்ணம் உள்ளது. கனிமொழி திகாரில் சரியாக சாப்பிடவில்லை மகனை நினைத்து அழுகிறார்,, மெழுகுவர்த்தி செய்யும் முறை பற்றி கத்துக்கிறார், பதஞ்சலி யோகம் கத்துக்கிறார் என கலைஞரை விட அதிகமாக கனிமொழியை பற்றி அககறைபடுகிறது. 
சரிதான் எதோ பெண்மணிகளை பற்றி எழுதினால்தான் பத்திரிக்கை விற்பனையாகும் எழுதட்டும் ஆனால் தற்போது கலைஞர் பற்றியும் மிக மிக அதிகமாக கவலைப்படும் பத்திரிகைகளாக தினமலரோடு தினமணியும் சேர்ந்து உள்ளது. போதாக்குறைக்கு இருக்கவே இருக்கிறார் சோ ராமசாமி.
இவாள் எல்லாம் ஒண்ணா  ஒரே குரலில் கலைஞர் குடும்பத்தின் மீது வசை   பாடிவருவதுதான் நமக்கு பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

நாம் நினைப்பதை விட கலைஞரும் கனிமொழியும் இனமான உணர்வு மிக்கவர்கள் என்பதைத்தான் இவாளின்  அகண்ட பஜனை காட்டுகிறது 

Mohan - Little India,சிங்கப்பூர்
2011-06-27 05:33:58 IST Report Abuse
சிறையில் கனிமொழி அழுகிறார் , மெழுகுவர்த்தி செய்கிறார் , கருணாநிதி அழுகிறார் ,கனிமொழி டிவி பார்க்கிறார் ,இப்படி கனிமொழியையும் கருணாநிதியையும் சுற்றி சுற்றி வரும் தினமலர் கொஞ்சம் நாட்டில் நடக்கும் மற்ற விஷயங்களையும் எழுதுங்கள் !!! பள்ளி இறுதி தேர்வில் மிகக்குறைவான மதிப்பெண் பெற்றதால் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் மகனுக்கு லயோலா கல்லூரியில் சீட் மறுக்கப்பட்டது தேமுதிக கட்சியினர் கல்லூரிக்குள் புகுந்து கல்லூரி முதல்வரை மிரட்டி இருக்கிறார்கள். கல்லூரி முதல்வர் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார். மற்றொரு தேமுதிக எம் எல் ஏ போலீஸ் நிலையத்தில் புகுந்து அளவுக்குமீறி ஆட்டம் போட்டதால் போலீஸ் நிலையத்தில் அவர் வந்த வாகனத்தை சிறை பிடித்து உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விடுவித்து இருக்கிறார்கள்.இந்த செய்தி சிங்கப்பூரில் வெளிவரும் தமிழ்முரசு பத்திரிக்கையில் வெளிவந்திருக்கிறது. இதை ஏன் தினமலர் பதிவு செய்யவில்லை ? பத்திரிக்கையில் செய்தி வெளியிடும்போது நடுநிலைமை கடை பிடியுங்கள் இல்லை என்றால் "உண்மையின் உரைகல்" என்று உங்கள் பத்திரிக்கையின் தலைப்பின் கீழ் போட்டிருக்கும் வார்த்தைகளை எடுத்து விடுங்கள் !!!

கருத்துகள் இல்லை: