ஞாயிறு, 26 ஜூன், 2011

தயாநிதியைக் காண்பித்து, ‘எப்ப வரப்போறானாம்...?’

‘‘கருணாநிதியோடு சென்றவர்கள் ராசாவை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது அவர், ‘எனக்கு ஜெயில் வாழ்க்கை பழகிவிட்டது. ஜாலியாக இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். இது அவர்களுக்கு ரொம்பவே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாம். ‘காலையில் எழுந்ததும் ஷட்டில் விளையாடுறேன். பேப்பர், பு த்தகம் படிக்கிறேன். ஜாலியாக நேரம் போகிறது’ என்று சொல்லியிருக்கிறார். அதோடு, கருணாநிதி அருகில் நின்று கொண்டிருந்த தயாநிதியைக் காண்பித்து, ‘எப்ப வரப்போறானாம்...?’ என்று கேட்க, அங்கே இருந் தவர்கள் எல்லாம் ‘ஷாக்’கானார்களாம்.’’

‘‘ஏன் இப்படிப் பேசினாராம்..?’’

‘‘அங்கிருந்த ஒருவரும் அதைக் கேட்டு இருக்கிறார். ‘அவர்தானே நாங்கள் ஜெயிலில் இருக்கக் காரணம்... அவரும் சீக்கிரம் இங்கே வந்துதானே ஆகணும்... அதான் எப்ப வர்றாருன்னு கேட்டேன்’ என்று கூலாக பதில் சொல்லியிருக்கிறார்.’’

‘‘சில பேர் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார்களே...’’

‘‘ஆமாம்... சிலரோ பதறிப்போய், ‘நமக்குள்ளே ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் கொடுத்துக் கொள்ள வேண்டாம்’என்று நாசுக்காகச் சொல்லியிருக்கிறார்கள்... ஆனாலும் ராசா அதை சட்டை செய்யவே இல் லையாம்.’’

‘‘கட்சி தன்னை கை கழுவிவிட்டது என்ற வருத்தம் இருக்கத்தானே செய்யும்...’’

‘‘ராசாவின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசிய போது, ஒரு தகவலைச் சொல்கிறார்கள். அவர் சிறையில் இ ருந்து வெளிவந்தாலும் கட்சியில் அவருக்கு முன்பு போல முக்கியத்துவம் கிடைக்காது. அதனால் அவர் வேறு ஒரு முயற்சியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்...’’

‘‘என்ன முயற்சி..?’’

‘‘அவர் தலித்துகளுக்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தலாமா என்று நினைக்கிறாராம்... அதற்கான ஆலோசனைகளை ஜெயிலில் இருந்தே செய்து வருகிறாராம்...’’

‘‘இருக்கிற பணத்தைக் காப்பாற்றிக் கொள்ள இது போல ஒரு அமைப்பு அவருக்கு தேவைதான்...’’ சிஷ்யை சொன்னார்.

கருத்துகள் இல்லை: