ஒரு மாத காலமாக அப்பல்லோவின் அவசர சிகிச்சை உயிர் காக்கும் கருவிகளோடு போராடிக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெ.வின் உடல்நிலையில் எந்தளவு முன்னேற்றம் இருக்கும் என்பது குறித்து சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற பல மருத்துவர்களைக் கேட்டோம். புனித இசபெல்லா மருத்துவமனையில் உயிர் காக்கும் அவசர சிகிச்சைப் பிரிவின் டாக்டர் ஒருவர் நம்மிடம், " இத்தகைய நிலையில்தான், அவரை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள் என்பதை நக்கீரன் வெளியிட் டுள்ள முதல்வரின் மருத்துவக் குறிப்பேடுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அதனடிப்படையில் பார்த்தால் முதலில் அவருக்கு இதயத்துடிப்பை வேகப்படுத்தும் கருவிகளை தற்காலிகமாக பொருத்தினார்கள். அதையே பின்னர், அவர்கள் நிரந்தர மாக்கி இருக்கிறார்கள். அதேபோல் மூச்சு விடுவதில் உள்ள சிரமத்தை லேசாக்கும் செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தியிருக்கிறார் கள். வாய்வழியாக ட்யூப் மூலம் உணவு, மருந்து கொடுத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு வரும் தொற்று நோய்க்கு என்ன காரணம் என நோய் பாதித்த பகுதிகளில் உள்ள கிருமி களை பிரித்தெடுத்து அதை ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பார்கள். அந்த நோய்க்கிருமி எந்த மருந்து செலுத்தினால் அழியும் என ஆராய்ச்சி செய்து, அந்த மருந்தை நோயாளிக்கு செலுத்தி முத லில் அவரது தொற்று நோய் கிருமிகளை அழிப்பார்கள். அந்த நோய்த் தொற்று நீங்கும் வரை நோயாளியின் உடல்நிலையை சீராக பராமரிப்பார்கள். இதுதான் அவசரகால சிகிச்சையின் முக்கிய அம்சம். இதில்தான் செயற்கை சுவாசம்- செயற்கை இதய துடிப்பு ஊக்குவிப்பு எந்திரம் ஆகியவை உபயோகப்படுத்தப் படுகிறது. இதற்காகத்தான் லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேல் வருகை தந்தார்.
இவரைப் பற்றி லண்டனில் இருக்கும் எனது நண்பர்களான உயிர் காக்கும் அவசர சிகிச்சை நிபுணர்கள் பேசும்போது, "எக்மோ (ECMO) எனப்படும் மருத்துவ கருவியை உபயோகிப்பதில் ரிச்சர்டு பெரிய நிபுணர்' என்கிறார்கள். "ECMO என்பது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து அதிலுள்ள ஆக்சிஜன் அளவை அதிகப் படுத்தி உடலுக்குள் திருப்பி அனுப் பும் கருவி. அதிகமான நோய் தொற்று ஏற்பட்டு உடலுக்குள் உள்ள ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையுமானால் அந்த நோயாளிகளை ECMO கருவிக் குள் கொண்டு வருவோம். முதல்வருக்கு ரிச்சர்டு பேல் சிகிச்சை அளிக்கிறார் என்றால் நிச்சயம் ECMO கருவியை ஜெ.வுக்கு பொருத்திதான் சிகிச்சை அளித்திருப்பார்' என்கிறார்கள் இங்கிலாந் தில் உள்ள மருத்துவர்கள். உயிர் காக்கும் சிகிச்சை யின் மிக உயர்ந்த சிகிச்சையான ECMO சிகிச்சைக்கு ஒரு நோயாளியை உட்படுத்துவதும் அதிலிருந்து அவரை வெளியே கொண்டு வருவதும் மிகக் கடின மான மருத்துவப்பணி. அந்த சிகிச்சையின் போது எந்த அசைவும் இல்லாமல் நோயாளி படுத்திருப் பார். அதனால்தான் இந்த சிகிச்சையின் போது வதந்திகள் பரவியிருக்கக் கூடும். அதற்குப் பிறகு டிராக்கோஸ்டமி (Trachaeostomy) செய்து அவரை செயற்கை சுவாச வென்டிலேட்டர் கருவி மூலம் வைத்திருப்பது என்பது... முதல்வரின் உடல்நிலை யில் முன்னேற்றம் என்றுதான் கூற வேண்டும். டிராக்கோஸ்டமி டியூப் மூலம் சிகிச்சை பெறும் நபர் சுயநினைவு வரும்போது பேச முயற்சிக்க முடியும்'' என்கிறார் விரிவாகவே.
அப்பல்லோ மருத்துவமனை ஜெ.வுக்கு அளிக்கும் பாசிவ் பிசியோதெரபி பற்றி டாக்டர்களி டம் கேட்டபோது, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர் ஒருவர் நம்மை அந்த மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளியிடம் அழைத்துச் சென்றார். உணவுக்கு ஒரு குழாய், மூச்சுக்கு ஒரு குழாய் என உடலில் உருவாகும் கழிவுகளை வெளியேற்ற தேவையான கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார் அந்த நோயாளி. தலையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த நபரின் மார்பை கைகளால் அமுக்கி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள் டாக்டர்கள். இதுதான் பாசிவ் பிசியோதெரபி என்று நம்மிடம் சொன்னார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக