திங்கள், 13 செப்டம்பர், 2010

நானு நன்ன கனசு நூறாவது நாள் : பிரகாஷ் ராஜ் மகிழ்ச்சி

நான் முதன்முதலாக இயக்கிய ‘நானு நன்ன கனசு’ படம் நூறு நாள் ஓடியதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றார் பிரகாஷ் ராஜ்.
தமிழில் பிரகாஷ்ராஜ், த்ரிஷா நடித்த படம் ‘அபியும் நானும்’. ராதா மோகன் இயக்கியிருந்தார். இந்த படத்தை கன்னடத்தில் ‘நானு நன்ன கனசு’ என்ற பெயரில் பிரகாஷ் ராஜ் நடித்து இயக்கினார். இந்த படம் நூறாவது நாளை தொட்டுள்ளது. இதையடுத்து இதற்காக பெங்களூரில் விழா நடத்த உள்ளார் பிரகாஷ் ராஜ். இதுபற்றி அவர் கூறியதாவது:

நான் முதன் முதலாக இயக்கிய படம் நூறு நாள் ஓடியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல படங்களை தர வேண்டும் என்றுதான் டூயட் மூவிஸ் நிறுவனத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ரசிகர்கள் விரும்புகிற எதிர்பார்க்கிற படங்களை தயாரிப்பேன். அடுத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேட்கிறீர்கள். இன்னும் அது பற்றி முடிவு செய்யவில்லை. ஒருவேளை அடுத்த வருடம் அதற்கான வாய்ப்பு வரலாம். ரீமேக் படத்தை இயக்குவது சுலபம்தான் என்றும் சொல்கிறார்கள். ஒரிஜினல், ரீமேக் என்று படங்களை பிரித்து பார்ப்பதில்லை. எந்த கதையாக இருந்தாலும் என் கருத்துகளை, எண்ணங்களை சேர்த்துதான் படம் இயக்குவேன். அப்படிபட்ட படத்துக்குதான் நான் உரிமை கொண்டாடவும் முடியும். தமிழில் 4 படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கு படமும் இருக்கிறது. நடிப்பில் பிசியாக இருக்கிறேன். மீடியா ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து இரண்டு கன்னட படங்களை தயாரிக்க இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: