செவ்வாய், 26 மே, 2026

அன்னா ஹாசாரேக்களும் மங்காத்தாக்களும் அடிமை வரலாற்று மிச்சம் மீதிகள்

May be an image of text that says "இன்று முதல் உலகமெங்கும் CLOUD ca CLOUDNINE OVIES NINE சன் பிக்சர்ஸ் கலாந்தி மாறன் வழங்கும் மஙள்ழ்ரா 4AITH AITHKUMARN VENKAT PRABHU +AVENKATPRABHUGAME GAME THALA 50 புவள்வுங்கர் ராஜா ሶር ரரவணர் பிரவீன் ஸ்ரீகாக்த் K.B. பத்வரீ வீருர் ណាចាំ கங்கை அயரன் -தருசன் ហវ விதேஷ் செல்வா รกวรีมชร์เรต่- รกรรี பாவ்கர் கரப்பா கல்பாண் வேயி រាន់្វាន់ அவப்ராஜ் சரவண ምዓ சரேஷ் சந்திரா சபேங்சந்தரா- சந்தர் சந்துர்றூஜ் குவுாந்த் கவாந்த்னுரளத் வ்ரளுத் தபாந்தி அழகிரி விவேக் ரத்தினவேல் ரத்தின Found CineMaterial. தமிழ்நாடுவெளிஸயீடு- ൈൈിച്ල ராடான் ஓர்க்ஸ் நந்தியா லிமிடெட் தொடர்புக்கு SONY BONYMUSI MUSIC +91-9586195553 044-28345032"

ராதா மனோகர் : நவம்பர் 2011 - சென்னை மெரீனா பீச்சில் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தமிழர்களை பற்றி கொண்டது. குறிப்பாக நடுத்தர வர்க்கமும் படித்தவர்களும் உணர்ச்சியோடு அங்கு கூடி முழக்கங்களை எழுப்பினார்கள். ஊழலை ஒழித்து விட்டுத்தான் இனி காலை உணவே உண்பார்கள் என்ற ரேஞ்சில் இருந்தது
அதற்கு அடுத்த நாளே அஜித் அர்ஜுன் நடித்த மங்காத்தா பிளாக் காமடி படம் வெளியானது
இந்த அன்னா ஹாசாரேயின் கூட்டத்திற்கு நிகரான கூட்டம் மங்காத்தா படத்திற்கும் டிக்கெட் கிடைக்காமல் தெருவெங்கும் மிரண்டு கொண்டிருந்தது
அன்னா ஹாசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை மங்காத்தா என்கவுண்டர் செய்து விட்டது என்று தோழர் மருதையன் குறிப்பிட்டிருந்தார்
மோசடியை ஊழலை அதுவும் நாட்டை காக்க வேண்டியே போலீஸ் திறமையாக கொலை கொள்ளைகளை செய்வதை அழகியலாக்கி படமாக்கினார்கள் .


அதை தமிழர்கள் தங்களை மறந்து ரசித்தார்கள்
அதுவும் முதல் நாளே ஊழலுக்கு எதிரான தர்ம போராட்டத்தில் ஓங்கி குரல் கொடுத்து விட்டு மங்காத்தா படத்திற்கு டிக்கெட் தேடி அலைந்தார்கள்

No photo description available.
தமிழர்களின் அடிமனதில் அவர்களின் அடிமை வரலாற்று குணாம்சங்கள் இப்போதும் மறைந்திருக்கிறது
தன்னை நம்பாமல் யாரவது ஒரு அடாவடி ஹீரோ காப்பாற்றுவான்
அல்லது யாரவது ஒரு மகாத்மா காப்பாற்றுவான் என்ற
நம்பிக்கையே தமிழர்களின் ஆதார உளவியலாக இருக்கிறது!
ஏமாற்ற துணிந்தவர்களுக்கு அசல் பிசினெஸ் பொருட்கள் இவர்கள்.
இவர்களின் சுயமரியாதையை தட்டி எழுப்பவே சுயமரியாதை இயக்கம் தோன்றியது
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊறிப்போன அடிமை புத்தியை ஒரு நூற்றாண்டு வரலாறு கொண்ட சுயமரியாதை இயக்கத்தில் இன்னும் மாற்ற முடியவில்லை என்பது கவலைதான்
அதற்கு காரணம் இருக்கிறது மக்களின் அடிமை புத்தியை போற்றி வளர்த்து சவாரி விடும் கூட்டம் இன்னும் சுறுசுறுப்பாகவே இயங்கி கொண்டிருக்கிறது!
அதன் இன்றைய தயாரிப்புதான் நடிகன் விஜயின் கட்சியும் ஆட்சியும்
இதை முறியடிக்க வேண்டிய வரலாற்று கடமை ஒவ்வொரு சுயமரியாதையாளருக்கும் உண்டு..
மீள் பதிவு :
Radha Mano : அப்துல் கலாம், சகாயம், அன்னா ஹாசாரே இன்னும் பல சங்கி முகமூடிகள் காலத்திற்கு காலம் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்
 

 May be pop art

இவர்கள் எல்லோரும் பார்ப்பன பனியா கும்பல்கள் மீது எந்த தூசியும் படிந்து விடக்கூடாது என்பதில் மட்டும் மிக கவனமாக இருப்பார்கள்
உத்தர பிரதேச முதலமைச்சார் யோகி ஆதித்தனார் போன்ற கொடூர சங்கிகளை நம்மால் அடையாளம் கண்டுவிட முடியும்
ஆனால் இவர்கள் அந்த கொடூர சங்கிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் வெறுமையாக ஊழல் நேர்மை போன்ற ஊதுபத்திகளை மட்டும் வைத்தே,
மக்களை தள்ளி கொண்டு போய் சங்கிகளின் கோட்டைகளில் அடிமாடுகளாக கட்டிவிடுவார்கள்!
ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை சகாயம் என்றொரு உத்தமன் பொதுவெளியில் இருந்தார் .
தமிழர்களின் கையிலிருந்த கிரானைட் தொழிலை அப்படியே மார்வாடிகளின் கைகைளில் கொண்டு போய் தாரைவார்க்கும் வரைக்கும் அவருக்கு விளம்பர வெளிச்சம் அளவு கணக்கில்லாமல் கிடைத்தது.

May be an image of text
வெளிநாடுகளில் இருக்கும் சங்கி ரசிகர்களையும் பறந்து பறந்து போய் ஊழல் ஊதி பத்தியை கொழுத்தி போட்டு உற்சாகம் ஊட்டினார்
சகாயம் விளம்பர பீல்டில ஆக்டிவாக இருந்த காலத்தில சீமான்கூட கொஞ்சம் மங்கி போயிருந்தார் .
அந்த அளவுகு சகாயம் கலாம் என்ற மாயமான் வலம் வந்தார்.
மீள் பதிவு : மறைந்த பெரியவர் அப்துல் கலாம் அவரகள் இந்துத்வாக்களின் ஒரு டார்லிங்காகத்தான் இருந்திருக்கின்றார் .
அவரை பற்றி பேசும் பொழுது பாஜகவின் கண்களில் தெரியும் பளபளப்பு இருக்கிறதே?
அடேயப்பா , . குஜராத் படுகொலைகள் வெறியாட்டம் நடந்து உலகம் முழுதும் இந்துத்வாககளின் சாயம் போய் கொண்டிருந்த பொழுது,
பதவிக்கு வந்து கல்லுழி மங்கன் போல மௌனம் காத்தது மனசாட்சி உள்ள மனிதர்கள் யாரும் செய்ய கூடிய செயலா?
குடியரசு தலைவர் பொறுப்பில் இருந்தவருக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரே கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பொழுது கொஞ்சம் கூட இவர் மனம் நோகவில்லையே?
இவரது வாயை மூடியது எது?
வரலாறு விளக்கம் கேட்கிறது.
கேட்க நாதி இல்லாமல் உயிரை கையில் பிடித்துகொண்டு ஓலக்குரல் எழுப்பிய குஜராத் மக்களின் ஈனக்குரல் இவருக்கு கேட்கவில்லை .
குஜராத் கலவரங்களை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்க கூடிய ஸ்தானத்தில் இவர் அன்று இருந்தார் .
ஆனால் இவரோ பாஜகவுக்கு வெள்ளை அடிக்கும் White Wash சேவையில் அல்லவா இருந்தார்
.இவரது மௌனத்தின் அர்த்தம் அதுதான் .
இவர் பகவத் கீதையின் ரசிகராக பஜககாரனை விட ஆழமாக இருந்திருக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது .
ஏனெனில் அதில்தான் யுத்தத்தில் எதிரி மட்டுமே இருக்கிறான்
அங்கே உறவினர் உற்றார் நண்பர் என்று எதுவும் இல்லை என்ற பாசிச கருத்து உள்ளது.
இவர் அதை அன்று கடைப்பிடித்து காட்டி உள்ளார்.
அது போகட்டும் இவரை சார்ந்த ராமேஸ்வரம் மீனவரகளுக்காக என்றாவது ஒரு சிறு குரலாவது கொடுத்துள்ளாரா?
ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்க கூடிய மனசாட்சி துளி கூட இல்லாத இவர் மக்களே கனவு காணுங்கள் கனவு காணுங்கள் என்று கூறுவது பாஜகவின் கனவுகளைத்தான் ...
வரலாறு அதைதான் காட்டுகிறது.
இதே பார்முலாவில் இன்னொரு போலி திரு சகாயம் ஐ ஏ எஸ்!
திரு .சகாயம் பற்றி 22 பெப்ரவரி 2021 இல் இட்ட பதிவை பாருங்கள்
திரு சகாயம் அவர்களின் கட்சி தொடங்கும் விழா காணொளியை கண்டேன் .
மிகவும் பொறுமையாக முழுவதும் பார்த்தேன் மிகுந்த ஏமாற்றம் அளித்தது.
சகாயம் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக இருந்தவர் .ஆனால் தமிழகத்தை பற்றி எந்த விடயமும் தெரியாத ஒருவர் பேசியது போல இருந்தது .
பேசிய பலரும் வெறும் அப்பாவிகளாக அல்லது வேண்டுமென்றே ஒன்றும் தெரியாதவர்கள் போல நடிப்பவர்களாகவே தெரிந்தனர்.
ஊழல் என்ற ஒற்றை மந்திரமே போதும் தங்களை கரைசேர்த்து விடும் என்று கருதுவதாக தெரிகிறது.


தமிழ்நாட்டின் கல்வி களவு போகிறதே அதை பற்றி ஒரு வார்த்தை ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புக்கள் களவாடாப்படுகிறதே அதை பற்றி ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வியாபாரங்கள் திட்டமிட்டு மார்வாடிகள் கைக்களுக்கு போகிறதே அதை பற்றி ம்ம்ம்
தமிழ்நாட்டின் மீது ஒரு பொருளாதார போர் நடக்கிறதே அதைப்பற்றி ..ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக்கு சாவு மணி அடிக்கிறார்களே .. அதைப்பற்றி ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டில் மீண்டும் பார்ப்பனீயம் சமஸ்கிருதம் எல்லாம் நுழைகிறதே? அதை பற்றி ம்ம்ம்ம்ம்
பணமதிப்பு இழப்பு பற்றி ம்ம்ம்ம்ம்
ஜி எஸ் டி வரி பற்றி ம்ம்ம்ம்ம்
இவை எல்லாம் கொஞ்சம் சாம்பிள்தான் இன்னும் என்னன்னவோ கேள்விகள் இருக்கின்றன .
சகாயம் குழுவிடம் நல்ல நோக்கமும் கிடையவே கிடையாது.
பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர அன்னா ஹாசாரே போன்றோர் எடுத்த காவடியை தமிழ்நாட்டில் திரு சகாயம் ஐ ஏ எஸ் மூலம் பாஜக முன்னெடுக்கிறது என்பதில் சந்தேகமே கிடையாது.
முடிவாகவே தெரிகிறது சகாயம் இன்னொரு ஆர் எஸ் எஸ் அடியாள்தான்.
ஒருவேளை இந்த அடியாள் இதை கூட புரிந்து கொள்ள முடியாத தற்குறியாக இருக்குமோ என்ற சந்தேகம் இப்போதும் உள்ளது
குஜராத் கலவரத்தின் போது குரூரமாக கழுத்து வெட்டப்பட்டு கொலையான காங்கிரஸ் எம்பி எசான் ஜெபிரியின் பெயரை கூட  ஜனாதிபதி அப்துல் கலாம் ஒருபோதும் உச்சரிக்கவே இல்லை 
ஜெபிரி எசான் 28 February 2002 அன்று கொலை செய்யபட்டார்! கூடவே அவரது குடும்பமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் கொலையானார்கள் 
அப்துல் கலாம்  25 July 2002 – 25 July 2007 வரை குடியரசு தலைவராக இருந்து ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலை உலக அரங்கில் பாதுகாத்தார் 
குறிப்பாக இந்தியாவின் மீதான உலக முசிமிகளின் கோபத்தை தணித்தார்.
இந்த குற்றவுணர்வை மறைப்பதற்கு கனவு காணுங்கள் என்ற லேகியத்தை கையெலெடுத்தார்..
அநேகமான அணுக்குண்டு விஞ்ஞானிகளுக்கே உரித்தான அதீத குற்றவுணர்வு,

May be an image of one or more people, people smiling and text
உயிர்பயம் எல்லாம் அப்துல் கலாம் அவர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது!
ஏனெனில் ஒரு சிறுபான்மை இனத்தை சேர்ந்தவராக இருந்து கொண்டு (தமிழ் + முஸ்லீம்) இந்தியாவின் அகண்ட ராணுவ மேலாதிக்கத்திற்கு துணை போவது சரிதானா என்ற கேள்வி,
நிச்சயம் அவர் மனதை குடைந்திருக்கும்.
இது போன்ற குற்றவுணர்வு உள்ளவர்கள் சற்று அதிகமாகவே நேர்மையாளர் புனிதர் எளிமையானவர் என்றெல்லாம் போர்வைகளை அணிந்து கொள்வார்கள்
இது ஒரு வகை சுய உளவியல் சிகிச்சை என்றும் கருதலாம்.
காலப்போக்கில் சிலர் இந்த போர்வைகளாகவே மாறிவிடுவதும் உண்டு!
இதில் அய்யா அப்துல் கலாம் இந்த வகை என்றுதான் கருதுகிறேன்

கருத்துகள் இல்லை: