திங்கள், 19 ஜூன், 2017

சென்னையிலும் - திருவண்ணாமலையிலும் நித்தியானந்தாவின் சீடர்களை விரட்டி அடித்த மக்கள்

சென்னை திரிசூலம் அருகே உள்ள கோயில் பாதையை ஆக்கிரமித்த நித்தியாந்தாவின் (nithyananda-disciples-who-invade-mountain) சீடர்களை பொதுமக்கள் அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலையில் பழமைவாய்ந்த பவளக்குன்றினை ஆக்கிரமித்து, அதில் குடிசையும் அமைத்து நித்தியானந்தாவின் படத்திற்கு பூஜையும் செய்து வந்த அவரது சீடர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர் காவல்துறையினர். அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிசையை அகற்ற வேண்டும் என வருவாய்த்துறையினர் உத்தரவு இட்டும் அதனை செயல்படுத்தாமலும் இருந்துள்ளனர். பின்னர் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் அவரது சீடர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியனுப்பியுள்ளனர். இச்செயலுக்கு நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் எங்களைத் தொட்டால் சாபத்திற்கு உள்ளாகுவீர்கள் என்றும் அராஜகம் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: