செவ்வாய், 24 ஜனவரி, 2017

ஊரை கொழுத்திய போலீஸ் அந்த பழியையும் போராட்டகாரர்கள் மீது சுமத்திய கொடுமை ... கூடவே கோரஸ் பாடிய தந்தி டிவி



சென்னை மெரினாவில் உள்ள போராட்டக்காரர்களை கலைப்பதற்கு காவல்துறை எடுத்திருக்கும் ஆயுதம் தடியடி மற்றும் பலப்பிரயோகம். அதோடு, பொதுமக்களின் வாகனங்களையும், வீடுகளையும் கொளுத்தி வருகின்றது. இதை, அப்படியே பொதுமக்களின் மீதும், போராட்டக்காரர்களின் மீதும் போட்டுவிடலாம் என்று நினைக்கின்றனர். அதேப்போன்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தடியடி மூலம் கடுமையாக அச்சுறுத்தி வருகின்றனர். இதனால், சென்னையில் உள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்தியாவில் உள்ள காவல்துறையில் நம்பர் ஒன் என்று பெயர் எடுத்த காவல்துறை, தற்பொழுது வாகனங்களை கொளுத்துவதில் தான் நம்பர் என்று பெயரை பெற்றுவிடும்போல் இருக்கின்றது. காவல்துறையினர் நேரடியாகவே நின்று களத்தில் பொருட்களையும் வாகனங்களையும் கொளுத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

நெடுஞ்சாலை ஹீரோ என்றால் எல்லோருக்குமே தெரியும். ரெட்டைசுழி,மாலை பொழுதின் மயக்கத்திலே,நெடுஞ்சாலை ,தரணி, மாயா,உன்னோடு கா ஆகிய படங்களில் நடித்துள்ளவர்.மானே தேனே பேயே , கடை என்ன 6 , நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களை கைவசம் வைத்திருந்து நடித்துக்கொண்டுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்த இந்த தன்னெழுச்சி போராட்டத்தினை பார்த்து ஆச்சரியப்பட்டு மெரினாவில் வந்து இளைஞர்கள், மாணவர்களோடு சேர்ந்த இவர் கடந்த 6 நாட்களாக அவ்வளவு அன்னியோன்யமாகி இந்த போராட்ட களத்தில் இருந்தார். அதன் பின், காலையில் போலீஸ் வந்து தடியடி நடத்தி களைய சொன்னதும்,அழுது கொண்டே வெளியேறினார் ஆரி.  லைவ்டே

கருத்துகள் இல்லை: