திங்கள், 26 செப்டம்பர், 2011

புலிகளின் கொடூரப் போக்கை எடுத்துரைக்க நல்ல சந்தர்ப்பம் – பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணை  தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்தபோது விடுதலைப் புலிகளின் கொடூரச் செயல்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் விபரிக்க இது நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும்; கேணல் ரமேஸ் ஒரு மிக மோசமான பயங்கரவாதி என்றும், அவர் சரணடைந்த நூற்றுக்கணக்காக காவல்துறையினரையும், அரந்தலாவவில் பௌத்த பிக்குகளையும், முஸ்லிம் கிராமவாசிகளையும் படுகொலை செய்தவர் என்றும் அவரது மனைவியும் இந்தக் கொடூரச் செயல்களில் தொடர்புபட்டிருந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: