ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஜெயலலிதா கூறுவதில் சிறிதும் உண்மையில்லை: ஜெயந்தி நடராஜன்

தமிழகத்துக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், சென்னையில் திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். அவருடன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் காயத்திரி தேவியும் உடனிருந்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன், மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக திமுக தலைவர் கலைஞரை, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன்.

தமிழகத்துக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்றும், தமிழகத்தை ஒதுக்குவதாகவும் முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறுவதில் சிறிதும் உண்மையில்லை. தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்துக்கொண்டிருக்கிறது. இனிமேலும் செய்யும் என்றார்.

கருத்துகள் இல்லை: