ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம்...: விஜயகாந்த் பேச்சு பற்றிய கேள்விக்கு கலைஞர் பதில்

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி: அப்துல் கலாம் அவர்களை இரண்டாவது முறையாக குடியரசு தலைவராக விடாமல் தடுத்தது நீங்கள்தான் என்று விஜயகாந்த் பேசியிருக்கிறாரே?
பதில்: பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி காலத்தையும் கண்ணியத்தையும் வீணாக்க நான் விரும்பவில்லை.

நான் எழுதிய ''தொல்காப்பியப் பூங்கா'' புத்தகத்திறக்ôக - ''தொல்காப்பியர்'' விருதினை எனக்கு வழங்கி - அந்த விழாவில் அவர் ஆற்றிய உரையையும் அறியாதவர்கள் இப்படியெல்லாம் சொல்கிற பொய்யை யார் நம்புவார்கள்?

இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: