ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஒக்டோபர் 1ம் திகதி முதல் சீட் பெல்ட் கட்டாயம்

வாகனத்தை செலுத்தும் போது சீட் பெல்ட் அணிவதனை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் கட்டாயப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றுவிட்டதாக போக்குவரத்து அமைச்சு செயலாளர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் ஆங்கில இலக்கத்துடனான வாகன பதிவு இலக்கம் கொண்ட அனைத்து வாகனங்களிலும் சாரதியும் சாரதிக்கு அருகாமையில் அமர்ந்திருப்பவரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் சீட் பெல்ட் அணிவது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தினை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: