செவ்வாய், 26 ஜூலை, 2011

தூத்துக்குடி:பிரிஜ்ஜுக்குள் பனி லிங்கமாம் விரைவில் இந்தியா வல்லரசாகுமாம் வேறென்ன சொல்ல இந்த பாமரர்களை

தூத்துக்குடியில் உள்ள ஒரு வீட்டின் ப்ரிட்ஜில் திடீர் என்று பனிலிங்கம் தோன்றியது. இதனை கண்ட வீட்டு உரிமையாளர் அமர்நாத் பனிலிங்கம் காட்சி தருவதாக நினைத்து அதை தினமும் வழிபட்டு வருகிறார்.

தூத்துக்குடி எஸ்.எஸ். பிள்ளை மார்க்கெட் பகுதியில் உள்ள வடக்குவாணியன்விளையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரது மனைவி விஜி. அவர் தெய்வ நம்பிக்கை கொண்டவர்.

அவர்களது வீட்டின் பிரிட்ஜில் ப்ரீசர் பாக்சை திறந்து பார்த்தபோது அங்கு லிங்க வடிவில் ஐஸ்கட்டி இருந்துள்ளது. தனது வீட்டில் அமர்நாத் சிவலிங்கமே எழுந்தருளியுள்ளதாக நினைத்த விஜி கடந்த சில நாட்களாக அதற்கு பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளார். இந்நிலையில் பிரிட்ஜில் பனி லிங்கம் தோன்றிய தகவல் அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அதனை வியப்புடன் வந்து பார்த்து செல்வதுடன் தீபாராதனை காட்டி வழிபட்டும் வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமாக டீப் பிரீசரில் பனிக்கட்டி உருவாவது வழமையாக நிகழும் ஒரு காட்சிதான் இது அனேகமாக ஒரு குமிழி அல்லது லிங்கம் போன்ற வடிவில்தான் தோன்றும் இந்த முட்டாள் ஜனங்கள் எதையும் நம்பும் வியாபாரத்தை நடத்திலாம் என்று குள்ளநரிகள் எண்ணுவது வியப்பில்லைதான் 
குளிர் காலங்களில் பனிக்கட்டிகளில் சிலைகள் மற்றும் உருவங்கள் செய்வது சிறந்த பொழுதுபோக்காகும். ம்ம்ம் நாமென்றால் அதில்கூட நல்ல கோவில்களை கட்டி பஜாரை ஆரம்பித்து விடுவோம்.

கருத்துகள் இல்லை: