புதன், 27 ஜூலை, 2011

ஈ.பி.டி.பி ஆதரவாளர் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாக்குதல்! வர்த்தக நிலையமும் உடைப்பு!

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சஜீவன் என்பவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காடையர்கள் கும்பலால்; ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளரான சந்திரபாலன் தாக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் (26) நடைபெற்றுள்ள இம் மிலேச்சத்தனமான தாக்குதலின் போது பன்னாலையில் அமைந்துள்ள சந்திரபாலனின் வர்த்தக நிலையமும் தாக்கி உடைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நடந்து முடிந்த உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சஜீவன் என்பவரின் தலைமையில் மோகனாத் என்பவர் உட்பட மூவர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காடையர் கும்பலே இத்தாக்குதலை நடாத்தியுள்ளதுடன் இம்மூவரையும் ஊர் மக்கள் பிடித்து தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இத்தாக்குதலின் போது படுகாயமடைந்துள்ள சந்திரபாலன் சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு ஈ.பி.டி.பி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தயாபாலன் என்பவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: