முற்றிலும் புதுமுகங்களை கொண்டு "நாங்க" என்ற படத்தை இயக்கி வருகிறார் செல்வா. "தலைவாசல்" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வா. தொடர்ந்து "அமராவதி", "கர்ணா", "ஜேம்ஸ்பாண்டு", "நான் அவன் இல்லை", "தோட்டா", "நான் அவன் இல்லை-2" உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்போது புதிதாக "நாங்க" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் முற்றிலும் புதுமுகங்கள் மட்டுமே நடித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன், சேகர், பழைய நடிகர் ஆதித்யன் மகன் நிவாஸ், தயாரிப்பாளர் சாமிநாதன் மகன் அஸ்வின், தெலுங்கு இசையமைப்பாளர் வாசுராவ் மகன் முனிஸ், டைரக்டர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் இவர்கள் தவிர அரசி, விஷ்ணுப்ரியா, ஷிவானி, வைதேகி, கஸ்தூரி என்று 13 புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
1980களில் படத்த கல்லூரி மாணவர்கள் படித்து முடித்த பின்னர், பல்வேறு இடங்களுக்கு பிரிந்து செல்கின்றனர். பின்னர் ஒரு கட்டத்தில்(2011ம் ஆண்டு) அனைவரும் சந்தித்து கொள்கின்றனர். இதுதான் படத்தின் கதை. இந்த கதையோடு அற்புதமான 5 பேரின் காதல் கதையையும் படத்தில் சேர்த்து சொல்லி இருக்கிறார் இயக்குநர் செல்வா. ஆகஸ்ட் மாதம் நாங்க படம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்திய தமிழ் படங்கள் எல்லாம் புதுமுயற்சியோடு பல்வேறு கதைக்களத்துடன் வெளிவரத் துவங்கி உள்ளன. அந்தவகையில் செல்வாவின் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்று ஆகஸ்ட் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
1980களில் படத்த கல்லூரி மாணவர்கள் படித்து முடித்த பின்னர், பல்வேறு இடங்களுக்கு பிரிந்து செல்கின்றனர். பின்னர் ஒரு கட்டத்தில்(2011ம் ஆண்டு) அனைவரும் சந்தித்து கொள்கின்றனர். இதுதான் படத்தின் கதை. இந்த கதையோடு அற்புதமான 5 பேரின் காதல் கதையையும் படத்தில் சேர்த்து சொல்லி இருக்கிறார் இயக்குநர் செல்வா. ஆகஸ்ட் மாதம் நாங்க படம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்திய தமிழ் படங்கள் எல்லாம் புதுமுயற்சியோடு பல்வேறு கதைக்களத்துடன் வெளிவரத் துவங்கி உள்ளன. அந்தவகையில் செல்வாவின் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்று ஆகஸ்ட் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக