![]() |
![]() |
| Pranoy roi - Arundhahti rai |
ராதா மனோகர் : உலக புகழ் பெற்ற மனித உரிமை பிரபலமும் எழுத்துலக பிரபலமுமான அருந்ததி ராய் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன்.
மீண்டும் மீண்டும் அவரை விமர்சிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.
ஆனாலும் அவ்வளவு இலகுவாக இந்த குற்றவாளியை தப்ப விட முடியாது என்ற எண்ணமே எனக்குள் மேலோங்குகிறது.
இந்திய இடதுசாரிகள் முற்போக்குகள் பெரிதும் பார்பனிய கோட்பாட்டு பாதுகாவலர்கள்தான்!
இந்த கும்பலுக்கு ஒரு சரியான உதாரணமாக அருந்ததி ராய்தான் எனக்கு தெரிகிறார்.
நுனி நாக்கு ஆங்கிலம், அசல் ஆரிய வெள்ளை நிறம் , இலகுவாக மனதில் நிற்க கூடிய முகம் . சினிமாவுக்கு உரிய முகவெட்டு, மிக சிறந்த கதை சொல்லும் திறமை . போதிய அளவு எழுத்தாற்றல் நல்ல வாசிப்பு, புகழ் பெறக்கூடிய பிரச்சனைகளை கண்டறியும் ஆற்றல் போன்றவை இவர் மீடியாக்களுக்கு எப்போதும் அசல் தீனி போடும் ஆளுமையாக தெரிகிறார்.
இதை விட மிக முக்கியமான விடயம் ஊடகங்களுடனான இவரின் குடும்ப தொடர்புகள் மிக மிக அதிகம்!
இவ்வளவு திறமையும் ஆற்றலும் உள்ள இவர் மீது ஏனிந்த விமர்சனம் என்று பலரும் கருத கூடும்.
இவரை போன்ற ஆரிய வம்சாவளிகளுக்கு ஒற்றை எதிரி திராவிட கோட்பாடுதான்
இவர்கள் எதையும் மன்னிப்பார்கள் ஆனால் மண்ணின் வாசம் வீசும் திராவிடம் என்றால் இவர்களின் அத்தனை நடிப்பும் சோரம் போய்விடும்!
வெட்கம் மானம் அறிவு நாணயம் எல்லாம் காணாமல் போய்விடும்.
கொஞ்சம் கூட தயங்காமல் கிடைக்கும் அத்தனை வாய்ப்புக்களையும் திராவிடத்தை உடைத்தெறிவதற்கே பயன்படுத்துவார்கள்.
ஆண்டான் அடிமை மனோபாவத்தின் அத்திவாரத்தை உடைத்து கொண்டிருக்கும் திராவிடத்தின் மீது இவர்களின் வன்மம் கோரமானது.
திராவிடத்தின் சுயமரியாதை கோட்பாடு இவர்களின் ஆரிய மனு வாதத்திற்கு விஷம் போன்றது!
அழகாக தோன்றும் ஒரு கரு நாகத்திற்கு நிகரானவர்கள் இந்த போலி முற்போக்கு நடிகர்கள்!
இவர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தின் போது எழுதிய "Capitalism - A Ghost Story" என்ற நூலில்
அன்றைய தொலை தொடர்பு அமைச்சர் திரு ஆ ராசா அவர்களின் மீது கடும் சேறு பூசி ஒரு அத்தியாயமே எழுதி உள்ளார் ( A Raja and 2G Spectrum Auction)
அதே நூலில் ஊழலை ஒழிக்க வந்த புதிய கிருஷ்ண அவதாரம் என்ற ரேஞ்சுக்கு அன்னா ஹசாரேயை பற்றியும் மயிர் கூச்செறியும் வண்ணம் புகழ்ந்து எழுதியுள்ளார்.
ஆனால் சில நாட்களிலேயே அன்னா ஹாசரே ஒரு ஆர் எஸ் எஸ் சாங்கி என்று தனது தவறை திருத்தி எழுதியுள்ளார்!
அது சரி . அதை விட மோசமாக ஆ. ராசா மீது சேறு வாரி வீசியுள்ளாரே!
2 ஜி வழக்கில் எவ்வளவு மோசமான பொய்களை ஆ ராசராவின் எதிரிகள் புனைந்துள்ளார் என்பது வெளிச்சமாகி விட்டதே?
டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற நூற்றாண்டு வரலாறு கொண்ட பத்திரிகைகளே ஒரு ராசாவை ஒழிப்பதற்காக எவ்வளவு கேவலமான பொய்களை அள்ளிவீசினார்கள்!
ஆனால் அத்தனை ஊடகங்களும் பின்பு அம்பலப்பட்டு அவமானப்பட்டு போனதே !
இந்த செய்தி எல்லாம் இன்றுவரை எல்லாம் தெரிந்த அருந்ததி ராய்க்கு தெரியாதோ?
ஆ ராசாவை போன்றவர்களை இன்னும் மனிதர்களாகவே மதிக்க முடியவில்லையோ?
அல்லது இவர்கள் எல்லாம் எப்படி ஒன்றிய அமைச்சராகலாம் என்ற வரலாற்று புழுக்கமோ?
ஆ ராசாவை பற்றி தான் எழுதியது கூறியது எல்லாம் தவறு என்று எப்போது மன்னிப்பு கேட்கிறாரோ அப்போதுதான் அருந்ததி ராய் போன்றவர்களை என்னால் கடந்து போக முடியும் .
அதுவரை அருந்ததி ராய்களின் போலி வேடங்களை அம்பல படுத்துவது எனது தலையாய கடமைதான்!
மீள் பதிவு : மேட்டுக்குடி இடதுசாரி ஊடக வியாபாரிகள் சிலரின் உறவு முறைகள் கொஞ்சம் எட்டி பாருங்க :
CPM பிரகாஷ் காரத்தின் மனைவி பிருந்தா காரத் பொலிட்ப்பீரோ....
பிருந்தா காரத்தின் சகோதரி ராதிகா ராய் NDTV யின் நிறுவனர் .
இவரின் கணவர் பிரணாய் ராய் புகழ் பெற்ற ஊடகவியலாளர் .
பிரணாய் ராயின் தந்தையின் சகோதரியின் மகன் அருந்ததி ராயின் தந்தை
அருந்ததி ராயின் தந்தை ராய் பெங்கால் புகழ் பெற்ற குடும்ப பின்னணி கொண்டவர் . தாய் மலையாள சிரியன் கிறிஸ்தவர் .
பிரணாய் ராயின் தாய் ஐரிஷ் பெண்மணி . தந்தை பி எல் ராய் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் கீழ் கலெக்டராக இருந்தார்
இது மட்டுமல்ல இவர்களின் சங்கிலி பிணைப்பு இன்னும் நீள்கிறது
மொத்தத்தில் அசல் பூர்ஷுவா குடும்ப பாரம்பரியம் உள்ளவர்கள் .
டெல்லி அரசியலிலும் இந்திய ஊடகங்களிலும் ஆழமான தொடர்புகள் கொண்டவர்கள்
இந்த மேன்மைக்கு உரியவர்கள்தான் 2 ஜி ஸ்பெக்ட்ரம் நாடகத்தில் பாஜக சங்கிகளுக்கு தோளோடு தோளாக தோள் கொடுத்தவர்கள் .
மீள்பதிவு : அருந்ததி ராய் ஒரு செலக்டிவ் புத்தி ஜீவி ஒரு செலக்டிவ் இடதுசாரி . மொத்தத்தில் ஒரு செலெக்டிவ் போராளி!
சில்லறையை சிதறவிட முன்பு கொஞ்சம் ஹோம் வேர்க் செய்து பாருங்கள் மக்காள் ..
நாட்டின் எந்த விவகாரமானாலும் திராவிட கோட்பாட்டை தாக்குவதற்கு வாய்ப்பு கிடைக்குமானால் .
இன்னும் சரியாக சொல்லப் போனால் திமுகவை தாக்குவதற்கு ஒரு போலியான வாய்ப்பு கிடைக்குமானால் கூட வரிந்து கட்டிக்கொண்டு முன்வருகிறார்கள் என்றால்...
இவர்கள் பார்ப்பனீய அடிமை மனோபாவம் கொண்டவர்கள்தான் .
அருந்ததி ராய் போன்ற பார்ப்பன ஊடக வெளிச்சம் அளவுக்கு மீறி உள்ளவர்கள் எல்லோரும் இந்த ரகம்தான் .
இவர்கள் தங்களை நம்பும் அடித்தட்டு மக்களின் போராட்டங்களின் மீது தங்கள் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இருப்பவர்கள் .
போராட்டங்களில் சாதாரண இடதுசாரி தொண்டர்கள் அடிபட்டு சாவார்கள் .
மேல்தட்டு இடதுசாரிகள் தொடர்ந்து அதிகாரத்திலும் ஊடக வெளிச்சத்திலும் இருப்பார்கள் .
ரங்கராஜன் வாசுகி பிருந்தா பிரகாஷ் காரத்துகள் எல்லாம் உயரத்தே இருப்பார்கள்.
காங்கிரஸ் பாஜக ஆர் எஸ் எஸ் மற்றும் டெல்லி ஊடக ஜாம்பவான்கள் எல்லோரும் இந்த மேல்தட்டு இடதுசாரிகளின் கிளப் விருந்துபசார கூட்டாளிகள்
இங்கே 2 ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி எல்லாம் தெரிந்த அருந்ததி ராய் சிந்திய விஷம் தோய்ந்த வார்த்தைகளில் சில: .
The most scandalous of them was what has come to be known as the ‘2G scam’ in which the government sold telecom spectrum for mobile phones (a public asset) to private companies at ridiculously low prices. The companies went on to sell them at huge profits to other companies, robbing the public exchequer of billions of rupees
சுயமாக சிந்திக்க கூடிய எவராலும் புரிந்து கொள்ளக்கூடிய இந்த 2 ஜி கட்டுக்கதை அருந்ததி ராய் போன்ற அதி புத்திசாலிகளால் புரிந்து கொள்ள முடியாது என்று நான் நம்பமாட்டேன் .
எங்கோ ஒரு தூரத்தே இருந்த எனக்கே இது சுத்த பித்தலாட்டமாக ஆரம்பித்தில் இருந்தே புரிந்தது .
இதை ஒவ்வொரு கட்டமாக எப்படி அவர்கள் கட்டமைத்தார்கள் என்பதை நேர்மையும் புத்தியும் உள்ள எவரும் அறிந்திருப்பார்கள் .
அருந்ததிக்கு மட்டும் புரியாமல் போனது எப்படி? " பார்ப்பனீய சிந்தனை"



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக