ஞாயிறு, 5 நவம்பர், 2017

வாரணாசியில் கமல் வழக்கு 22 அம தேதி விசாரணை ! ஐந்து பிரிவுகளில்..

தினமணி : ஹிந்து தீவிரவாதிகள் பற்றி ஒரு கட்டுரையில் எழுதிய கமல் ஹாசன் மீது தற்போது வாரணாசியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத நம்பிக்கைகளை காயப்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, IPC பிரிவு 500, 511, 298, 295(a) & 505(c) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. கமல்ஹாசன் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பாஜக கட்சியை சேர்ந்த எச்.ராஜா, "கமல் எப்போதுமே இந்து விரோதி என்ற நிலை மாறி தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு முன்னேறி உள்ளார். தேசபக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது முஸ்லிம் அமைப்புக்கள் 20 வருடங்களுக்கு கமலின் பயம் போகாது என்றது சரிதான் போல. இந்துக்கள் மீது தாக்குதல் வெட்கம்” என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: