ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

நீட் சைலண்ட் கில்லர்கள் இவர்கள்தான்!


ஊடக மற்றும்
போராட்ட நண்பர்களே நீங்கள் கேள்வி கேட்கவேண்டியது முற்றுகையிட வேண்டியது நளினி சிதம்பரம், கி.சாமி போன்றவர்களின் வீடுகளை அல்ல...இந்த சைலண்ட் கில்லர்களைத்தான். நீட் வரக்காரணமே எம்.சி.ஐ. தான். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட எம்.சி.ஐ.யின் உறுப்பினர்களான (council members) டாக்டர் பிரும்மாநந்தம் (ஜெவுக்கு இதயநல மருத்துவராக இருந்தவர்), டாக்டர் சுதாசேஷய்யன் (ஜெ. இறந்தபிறகு எம்பாமிங் செய்தவர்), டாக்டர் சிவக்குமார் (சசிகலாவின் உறவினரும் ஜெவுக்கு கார்டனில் சிகிச்சை அளித்த குடும்ப மருத்துவர்) ‘உதி’ கண் மருத்துவமனை எம்.டி. டாக்டர் ரவீந்திரன் ராதாகிருஷ்ணன் (ஜெவின் கண்மருத்துவர்), டாக்டர் சாந்தாராம்(ஜெவுக்கு சர்க்கரை வியாதி நிபுணராக இருந்து கார்டனிலிருந்து விரட்டப்பட்டவர்), டாக்டர் எல்.பி.தங்கவேலு உள்ளிட்ட மருத்துவர்கள் எம்.சி.ஐ. மீட்டிங்குகளிலும் பெரும்பாலும் கலந்துகொள்ளவில்லை. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசவுமில்லை. ஆனால், இவர்களை எதற்காக தமிழக அரசு நியமித்தது? இந்த சைலண்ட் கில்லர்களைக் கேளுங்கள்...!!! - மனோசெளந்தர் நக்கீரன்

கருத்துகள் இல்லை: