திங்கள், 2 மே, 2016

பிரேமலதா : தொங்கு சட்டசபை அமைந்தால் எமது ஆதரவு....பின்னர் பேசுவோம்ல.

சென்னை : தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் யாருக்கு ஆதரவு என பின்னர் முடிவு செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரேமலதா, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தால் யாருக்கு ஆதரவு என பின்னர்தான் முடிவு செய்யப்படும் என்று கூறினார். மேலும், அதிமுகவுடன் மறைமுக கூட்டணி இல்லை; என்றும், திமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதே போல, ஆட்சியில் இருக்கும் போதே திமுகவும் அதிமுகவும் மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.தினமணி.com

கருத்துகள் இல்லை: